நபிமொழிகளிலிருந்து கேட்கப்படும் மார்க்க கேள்வி பதில்கள்
1. (கைபர் போர்க் கைதியான) ஸஃபிய்யா (ரலி) அவர்களை விடுதலை செய்தவர் யார்?
நபி (ஸல்) அவர்கள்
ஆதாரம்: ( புகாரி 5086)
2. ஹுதைப்பிய்யா உடன்படிக்கை நடந்த காலத்தில் நபிகளாரை பிடிக்க குதிரைப்படையில் வந்தவர் யார்?
காலித் பின் வலீத்
ஆதாரம் :(புகாரி 2731)
3. பிறப்பு (இரத்த உறவு) எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவுகளாக்குமோ அந்த உறவுகளையெல்லாம் .. … . . . . நெருங்கியவையாக ஆக்கிவிடும்”
பால்குடி மூலம் ஏற்படும் உறவு
ஆதாரம்: (புகாரி 5099)
4. நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்கு நபி (ஸல்) அவர்கள் எப்போது தடைசெய்தார்கள்?
கைபர் போர்
ஆதாரம் : (புகாரி 5115)
5. உமர் (ரலி) அவர்கள் தன் மகள் ஹஃப்ஸா (ரலி) அவர்களை முதலில் யாரிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கோரிக்கை வைத்தார்கள்?
உஸ்மான் (ரலி), அபூபக்ர் (ரலி)
ஆதாரம் : (புகாரி 5122)
6. நபிகளாருடைய மனைவியாக அன்னை ஆயிஷா(ரலி) எவ்வளவு காலம் இருந்தார்கள்?
ஒன்பது வருடங்கள்
ஆதாரம் : (புகாரி 5133)
7. அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன் என்று நபி (ஸல்) அவர்கள் எந்த கூட்டத்தாரை குறிப்பிட்டார்கள்?
அஷ்அரி கூட்டத்தினர்
ஆதாரம் :(புகாரி 2486)
8. பேச்சியில் என்னவிருப்பதாக நபிகளார் கூறினார்கள்?
கவர்ச்சி
ஆதாரம் : (புகாரி 5146)
9. பத்ருப் போரில் கலந்து கொண்ட முன்னோர்களைப் பற்றி பாடல் பாடிய சிறுமி நபிகளாரைப் பற்றி என்ன கூறினார்?
“எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்”
ஆதாரம் : (புகாரி 5147)
10. அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் எதை மஹராக கொடுத்தார்கள்?
ஒரு பேரீச்சங்கொட்டையின் எடையளவு தங்கம்
ஆதாரம் : (புகாரி 5153)
11. நீங்கள் நிறைவேற்றவேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது எது என்று நபிகளார் எதனைக் கூறினார்கள்?
உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் (அவர்களுக்குத்) தரும் மஹ்ர்(விவாகக் கொடை)தான்.
ஆதாரம் : (புகாரி 5151)
12. அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) திருமணம் முடித்த போது அவரிடம் நபிகளார் என்ன செய்ய வேண்டுமென கூறினார்கள்?
“ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா-மணவிருந்து அளியுங்கள்!”
ஆதாரம் : (புகாரி 5155)
13. பயணத்தின் போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் யாருடைய கழுத்தணியை இரவலாக வாங்கி போட்டுச் சென்றார்கள்?
அஸ்மா (ரலி)
ஆதாரம் : புகாரி 5164
14. தனது சொத்தில் பாதியை தருவதாக எந்த நபித்தோழர் எந்த நபித்தோழரிடம் கூறினார்?
ஸஅத் பின் ரபீவு (ரலி), அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)
ஆதாரம் : (புகாரி 2049)
15. நபி (ஸல்) அவர்கள் தனது மனைவியரில் யாருடைய திருணமத்தில் ஒரு ஆடு வலிமா விருந்து அளித்தார்கள்?
ஸைனப் (ரலி)
ஆதாரம் : (புகாரி 5168)
16. வாற்கோதுமையில் இரு முத்து அளவு வலீமா கொடுத்தவர் யார்?
நபி (ஸல்) அவர்கள்
ஆதாரம் : புகாரி 5172
17. மணமகளாக இருந்து மக்களுக்கு திருமண நாளில் விருந்து வழங்கும் பணியை செய்தவர் யார்?
அபூ உஸைத்தின் மனைவி (ஸலமா பின்த் வஹப்)
ஆதாரம் : புகாரி 5176
18. ஒரு முஸ்லிமிடம் அதிகபட்சமாக எத்தனை நாட்கள் பேசாமல் வெறுத்திருக்கலாம்?
மூன்று நாட்கள்
ஆதாரம் : (முஸ்லிம் 5003)
19. சண்டையிட்டுக்கொண்ட இருவர்களில் சிறந்தவர் யார்? என நபிகளார் யாரைக் குறிப்பிட்டார்கள்?
முதலில் ஸலாம் சொல்லி சேர்ந்து கொள்பவர்
ஆதாரம் : (முஸ்லிம் 5003)
20. சொர்க்கத்தின் கதவுகள் எந்த கிழமைகளில் திறக்கப்படுகின்றன?
திங்கள், வியாழன்
ஆதாரம் : (முஸ்லிம் 5013)