கொள்கை, கோட்பாடுகள்

கொள்கை, கோட்பாடுகள்

உலகத்தின் மதம் தொடர்பான சொல்லியலில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கே உரிய பாணியில், அவனுக்கே உரிய சொல் வழக்கில் வானம், பூமியின் ரட்சகனைக் குறிப்பதற்காக அழகிய பெயர்களை வழங்கியிருக்கிறார்கள்.

ஜுலு இனத்தின் கடவுள் கொள்கை

தென் ஆப்பிரிக்காவில் வாழ்கின்ற ஜுலு இன மக்கள் உடல் வலிமை மிக்கவர்கள்; போர்க் குணம் கொண்டவர்கள்; அறியாமைக் காலத்திலும் அல்லாஹ்வைத் தெரிந்து வைத்திருந்த குறைஷி சமுதாயத்தைப் போன்றவர்கள். அவர்கள் எல்லாம் வல்ல இறைவனுக்கு UMVELINQANGI என்ற பெயரை வழங்கியிருக்கிறார்கள். இந்த வார்த்தை அதனுடைய சரியான பொருளில் உச்சரிக்கப்படும் போது “அல்லாஹ் செல்வந்தன்’ என்ற அர்த்தத்தைக் கொண்ட “வல்லாஹு கனி’ என்ற அரபி வார்த்தையை ஒத்திருக்கின்றது.

வட அமெரிக்காவில் அல்கனி (Allegany) என்ற செவ்விந்தியர்கள் உள்ளனர். அந்த வார்த்தைக்கும் இது ஒத்திருக்கின்றது. (Allegany)  அல்கனி என்ற வார்த்தையின் மூலச் சொல் பொதுவாக அமெரிக்கர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் ஜுலு இனத்தைச் சார்ந்த ஒருவரிடம் UMVELINQANGI யார் என்று கேட்டுப் பாருங்கள். அவர் தெளிவாக தனது மொழியில், “அவன் தூய்மையானவன்; புனித ஆன்மா; அவன் பெறவுமில்லை; பெறப்படவுமில்லை. மேலும் அவனுக்கு நிகராக எதுவுமில்லை” என்று குறிப்பிடுவார்.

இஸ்லாமியக் கொள்கை

இதை அப்படியே அல்குர்ஆன் 114வது அத்தியாயத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இரண்டிற்கும் இடையே பெரிய வித்தியாசத்தைக் காண முடியாது. தென் ஆப்பிரிக்காவில் ஸம்பாஸி ஆற்றுக்குத் தெற்கே உள்ள ஒவ்வொரு இனமும் இறைவனுக்குப் பல்வேறு பெயர்களைக் கொடுக்கின்றன. எடுத்துக்காட்டாக, TIXO, MODIMO, UNKULUNKU ஆகிய பெயர்களைக் குறிப்பிடலாம். இந்த வார்த்தைகளுக்கு ஆப்பிரிக்க மொழியைச் சார்ந்த எவரும் ஜுலு இனத்தினர் கூறும் அதே தூய கடவுள் பண்புகளைத் தான் கூறி விளக்குவர்.

இவர்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் பெயர்களை அவர்களால் பட்டியல் போட முடியாது. காரணம் அவர்களது மொழியில் எழுத்துப்பூர்வமான ஆவணங்கள் இல்லை. வெள்ளையர்கள் வருகின்ற வரை அந்த இனத்தவர்களில் ஒருவர் கூட சிலைகள் அல்லது மனித, விலங்குகளின் உருவப் படங்களைப் பார்த்து ஒருபோதும் குனிந்தது கிடையாது. ஆங்கிலேயர்கள் வந்த பிறகு தங்களது கிறித்தவ மதத்தை அங்கு அறிமுகப்படுத்தினர்.

தந்தை, மகன், புனித ஆவி என்று கடவுளுக்கு மனிதத் தன்மையைக் கற்பிக்கின்ற கடவுள் கொள்கையையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினர். இதன் காரணமாக அவர்களை இயேசு, மேரி, செயின்ட் ஜோசப், செயின்ட் கிறிஸ்டோபர் இன்னும் மற்றவர்களின் சிலைகளுக்கு முன்னால் வணங்கும்படி செய்தனர்.

உலகத்தில் வாழ்கின்ற பல்வேறு ஆப்பிரிக்க இனத்தவர்களில் எவரும் தங்களுடைய கடவுள் உருவத்தை வரைந்ததே இல்லை. இதனால் அவர்களுக்கு இந்தக் கலை தெரியாது என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

மரத்திலிருந்து யானை, சிங்கம் போன்றவற்றைப் படைக்கின்ற, களி மண்ணிலிருந்து ஆண் பெண் சிலைகளை வடிக்கின்ற கலை வண்ணமும் கலை நுணுக்கமும் நன்கு தெரிந்தவர்கள். உலோகத்திலிருந்து வடிவமைக்கும் உலோகத் தொழிற்கலையும் ஓரளவு அவர்கள் தெரிந்திருக்கிறார்கள்.

நீங்கள் ஏன் உங்களுடைய கடவுளர்களின் சிலைகளைச் செய்வதில்லை? உருவமாக வடிப்பதில்லை என்று ஒரு வயது முதிர்ந்த ஜுலுவிடம் வினவிய போது அவர் தெரிவித்த பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. “அவன் (கடவுள்) ஒரு மனிதனைப் போன்றவனல்லன். அவன் ஒரு குரங்கைப் போன்று அல்லது ஒரு பாம்பைப் போன்றவனல்லன். அவன், நாம் கற்பனை செய்கின்ற அல்லது சிந்திக்கின்ற எந்த உருவத்தையும் தோற்றத்தையும் போன்றவனல்லன். அவன் தூயவன்; ஒரு புனித ஆத்மா! இத்தகைய பண்பைக் கொண்ட அவனை எப்படி வடிவமைக்க முடியும்?” என்று பதிலளித்தார்.

உலகில் வாழும் மக்கள் தாங்கள் வணங்கும் கடவுளுக்கு ஒவ்வொரு பெயரைக் கொடுத்திருந்தாலும் நம்மை மிக அதிகமாகத் திகைக்க வைத்த, திக்குமுக்காடச் செய்த பெயர் ATNATU என்ற பெயர் தான். இந்த வெளியீட்டிற்கு What is his name? என்று தலைப்பிடுவதற்குப் பதிலாக ATNATU என்றே தலைப்பிடலாம்.

அப்படியென்ன ATNATU என்ற பெயரில் ஒரு வினோதம்? புதுமை?

தென் ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிமகன் தன்னுடைய கடவுளை ATNATU என்று அழைக்கிறான். இதற்குக் காரணம் என்ன?

வானத்தில் உள்ள தந்தை (இறைவன்), முழுமையாக, முற்றிலும் அனைத்துத் தேவைகளை விட்டும் நீங்கியவன்; அனைத்துத் தேவைகளை விட்டும் தூய்மையானவன்; அவன் தனித்தவன்; அவன் உணவு அல்லது குடிநீர் சாப்பிட மாட்டான்.

இவ்வாறு அவனுக்கு ஓர் இறைத் தூதர் பாடம் படித்துக் கொடுத்திருக்கலாம்; போதித்திருக்கலாம்.

தன்னுடைய முற்றிலும் பழமை வாய்ந்த, தங்கு தடையற்ற மொழியில் இந்தத் தூய தன்மைகளைக் குறிப்பதற்கு ஒரு வார்த்தையைத் தேர்வு செய்கிறான். அது தான் ATNATU.

Anus ஏனஸ் (மலக் கழிவு வாய்) இல்லாதவன்; அசுத்தம் ஏற்படாதவன்; மாசு, தவறு இல்லாதவன்.

இந்தப் புதுக் கருத்தை இந்து, முஸ்லிம், கிறித்தவ நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட போது அவர்களது உடனடியான எதிர் விளைவு (இது ஒரு முட்டாள்தனமான கருத்து என்பது போல்) மகிழ்ச்சியுடன் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தனர். பாவம்! பரிகாசத்திற்குரியவர்கள் அவர்கள் தான் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

Anus (மல வாய்) என்ற நான்கு எழுத்துக்களைக் கொண்ட ஒரு சிறிய வார்த்தையாக இருந்தாலும் அதிகமான மக்கள் அதைக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இதற்குப் பகரமாக பேச்சு நடையில் உள்ள ஒரு வார்த்தையைப் பயன்படுத்த எனக்குப் பிடிக்கவில்லை. காரணம் மக்களின் அதிகப்பட்ச தவறான உணர் திறன் தான்.

அப்துல்லாஹ் யூசுப் அலீ அவர்களின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், “ஒரு கட்டத்தில் அழகாயிருந்த தங்களது மொழியை வெறும் கவர்ச்சி மிகு பிதற்றலாகவும் அர்த்தமற்ற உளறலாகவும் மாற்றி விட்டனர்” என்று தான் குறிப்பிட வேண்டும்.

எனவே இந்தச் சொல் பிரயோகத்தின் மூலம் ஏற்படும் பிரச்சனையைத் தவிர்க்க, பதட்டத்தைத் தணிக்க சுற்றி வளைத்து ஒய்ல்ன்ற் (உள்ளிடுகை), ஞன்ற்ல்ன்ற் (வெளியிடுகை) என்று ஒரு நாகரீக வார்த்தையில் குறிப்பிடலாம்.

உணவு உட்கொண்ட ஒருவர் கண்டிப்பாக தனது இயற்கைத் தேவையை நிறைவேற்றியாக வேண்டும்; கழிவறைக்குச் சென்றே தீர வேண்டும். மனிதனின் இன்றியமையாத தன்மையை உணர்ந்து தான் பழங்கால நண்பன் (தென் ஆஸ்திரேலிய குடிமகன்) இந்த குறைத் தன்மையை இறைவனுக்குக் கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்து ATNATU அதாவது மலம் கழிக்கும் தன்மை இல்லாத நாயன் என்று அழைக்கிறான்.

உண்ணாத உன்னதக் கடவுள்

பூர்வீக மனிதனின் கடவுள் பற்றிய இந்தப் புதுமைக் கொள்கை உண்மையில் புதுமையில்லை. இந்த உண்மையை இறைவன் தன்னுடைய இறுதி வேதமான புனிதக் குர்ஆனில் மனித குலத்திற்குத் தெரிவிக்கின்றான். தனித் தகுதியுள்ள, தன்னிகரில்லாத அந்த ஆசிரியனின் தகுதிக்கேற்ப அதை உயர்தர நடையில் தெளிவுபடுத்துகின்றான்.

அதன் அழகு, நயம் காரணமாக அதை ரசிப்பதுடன் மட்டும் நின்று விட்டு அதனுடைய செய்தியின் ஆழத்தை ஏனோ நாம் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டோம்.

உண்மையான அந்த ஓர் இறைவனை வணங்குவதை விட்டும் மறக்கடிக்கச் செய்ய முயல்வோருக்கு எதிராகத் திருக்குர்ஆன் நம்மை முழங்கச் சொல்கிறது.

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லைஎன்று கூறுவீராக! “கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறும் இணை கற்பித்தோரில் ஒருவனாக ஆகிவிடக்கூôது என்றும் கட்டளையிடப்பட்டுள்ளேன்எனவும் கூறுவீராக!

அல்குர்ஆன் 6:14

ஆம்! வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு யாரையும் பொறுப்பாளனாக ஆக்க மாட்டோம் என்று பிரகடனப்படுத்துமாறு நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்.

யாருக்கேனும் மனிதக் கடவுள்கள் விஷயத்தில் நம்பிக்கை இருக்குமானால் அவர்களைக் கூட்டி வாருங்கள். சோதித்துப் பார்ப்போம். எங்கள் கடவுள் உணவளிப்பவன்; பிறரால் உணவளிக்கப்படுபவன் அல்லன். அவன் உணவு சாப்பிடுகின்ற தேவையில் இல்லை. உங்களுடைய மனிதக் கடவுள்கள் சாப்பிடுகிறார்களா? இல்லையா? அப்படிச் சாப்பிட்டால் அவர் தனது இயற்கைத் தேவையை நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். எங்களுடைய கடவுளுக்கு அந்த அவசியம் இல்லை. காரணம் எங்கள் கடவுள் சாப்பிட மாட்டான்.

எவ்வளவு அழகிய, எளிய வாதம். ஆனால் அதே சமயம் திகைக்க வைக்கின்ற வாதம். வேதனைக்குரிய விஷயம்! நாம் பெற்றிருக்கின்ற இந்த ஆயுதத்தின் வலிமையை நமக்கு தென் ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிமக்கள் நினைவுபடுத்த வேண்டிய பரிதாபத்திற்குரிய நிலையில் இருக்கிறோம்.

பிரச்சாரக் கலையை, அழைப்புப் பணியின் திறமையை நாம் முற்றிலும் இழந்து விட்டோம். காரணம், பல நூற்றாண்டுகளாக நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு இஸ்லாத்தைப் போதிப்பதையே நிறுத்தி விட்டோம்.

கிறித்தவர்கள் நம்முடைய வாசல் கதவுகளை வரிசையாக வந்து தட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆன்மீகக் குருட்டுத்தனத்தால் நம்மிடையே உள்ள எதிரிகளை எதிர் கொள்வதற்குப் பயப்படுகின்ற பயந்தாங்கொள்ளிகளை அந்தக் கிறித்தவர்களிடம் பார்க்க முடியவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்னால் குவைத்தில் ஒரேயொரு கிறித்தவக் குடும்பம் தான் இருந்தது. இன்றைய தினம் அந்தச் சின்னஞ்சிறு நாட்டில் 35 கிறித்தவ தேவாலயங்கள் உருவாகி விட்டன.

நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவில் உருவான “யேஹோவா சாட்சிகள்’ என்றழைக்கப்படுகின்ற ஒரு கிறித்தவ அமைப்பினர், அமெரிக்காவுக்கு வெளியே இரண்டாவது பெரிய சமுதாயமாக வாழ்கின்ற நாடு நைஜீரியா எனும் முஸ்லிம்களின் நாடு தான் என்று பெருமையடித்துக் கொள்கின்றனர்.

உலகத்திலேயே முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற நாடான இந்தோனேஷியாவில் மட்டும் 6,000 முழுநேர கிறித்தவப் பிரச்சாரகர்கள் இருக்கின்றனர். அவர்கள் தத்தமது தேவாலயங்களுக்குக் கீழ் இயங்கும் பாதிரியார்கள் கிடையாது. மாறாக, கிறித்தவர் அல்லாதவர்களை, அதாவது Heathen ஹீதன் என்று அழைக்கப்படுபவர்களை சதாவும் தொந்தரவு செய்கின்ற, அவர்களுடன் புனிதப் போர் தொடுக்கின்ற போராளிகள்.

இந்தோனேஷியா அரசாங்கத்திடம் இருப்பதை விட இவர்களிடம் அதிகமான தனியார் விமானத் தளங்கள் உள்ளன. இவர்களிடம் பிரச்சாரக் கப்பல்கள் உள்ளன. இந்தோனேஷியா இண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட நாடு. அந்த நாட்டில் கப்பல்களை நிறுத்துவதற்குத் துறைமுகங்கள் ஏதுமில்லை என்பதால் இந்தப் பிரச்சாரக் கப்பல்கள் எந்தத் தீவில் வேண்டுமானாலும் நங்கூரம் பாய்ச்சி நிற்கின்ற வசதியைப் பெற்றிருக்கின்றன.

கப்பல்களை அந்தத் தீவுகளில் கொண்டு போய் நிறுத்திக் கொண்டு அங்குள்ள மக்களை கப்பலில் வந்து உணவு சாப்பிடுவதற்கும் உல்லாசம் அனுபவிப்பதற்கும் அழைக்கின்றார்கள். அங்கே தங்களின் இஸ்லாத்திற்கு எதிரான நிந்தனைப் பிரச்சாரத்தையும் இகழாரத்தையும் ஆரம்பித்து விடுகிறார்கள். தங்களுடைய கள்ளப் பிரச்சாரத்தை, கள்ளங்கபடமற்ற மக்களின் மூளையில் இறக்குமதி செய்கிறார்கள். அவர்களது இந்த அதிரடி நடவடிக்கைக்கு Operation Overkill “உச்சக்கட்ட ஒழிப்பு’ அல்லது “அதிகப்பட்ச அழிப்பு’ என்று ரகசியப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்ளாக இந்தோனேஷியாவை ஒரு கிறித்தவ நாடாக மாற்றி விட வேண்டும் என்பது அவர்களின் குறியிலக்கு!

உலகம் முழுவதும் புழுதி பரப்புகின்ற அறுபதாயிரம் போராளிகளில் பாதிக்கும் அதிகமானோர் ஆப்பிரிக்காவில் தான் மையம் கொண்டிருக்கின்றனர். ஆப்பிரிக்கா இன்று முஸ்லிம் கண்டம். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்ளாக அதைக் கிறித்தவக் கண்டமாக மாற்றுவதற்காக இந்தப் போராளிகள் போர் விமானங்களிலும் போர்க் கப்பல்களிலும் வந்திறங்கி புனிதத் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

நம்பிக்கை என்ற போரில் நம்முடைய வாளும் கேடயமும் என்ன? அவை அல்குர்ஆனில் தான் இருக்கின்றன. நன்மைகளை வேட்டையாடுவதற்கு மட்டும் திருக்குர்ஆன் வசனங்களைப் பயன்படுத்திய நாம், அந்த வசனங்களை இந்தப் போர்க்களத்திற்கும் கொண்டு வர வேண்டும்.

இயேசு உணவு உண்டாரா?

மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!

அல்குர்ஆன் 5:75

மர்யமின் மகனான இயேசு கிறிஸ்து கடவுளின் தூதர்களில் வலிமை மிக்க ஒரு தூதர் என்று இஸ்லாமிய மார்க்கம் ஒப்புக் கொள்கின்றது. எந்த ஓர் ஆடவரின் தொடர்பும் இன்றி ஓர் அற்புதமாக அவரை, அவரது தாயார் மர்யம் (அலை) பெற்றெடுத்தார்கள். அவர் தான் மஸீஹ். அல்லாஹ்வுடைய அனுமதியுடன் இறந்தவருக்கு அவர் உயிர் கொடுத்தார். அல்லாஹ்வின் அனுமதியுடன் குருடர்களைப் பார்க்கச் செய்தார். அல்லாஹ்வின் அனுமதியுடன் குஷ்டரோகிகளுக்குக் குணமளித்தார் என்று இஸ்லாம் ஒப்புக் கொள்கின்றது. ஆனால் அவர் உணவு உண்ணவில்லையா?

அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள் முன் அமர்ந்து உண்டார்.

லூக்கா 24:42, 43

அத்துடன் இயேசுவின் தாயார் உண்மை பேசுகின்ற, பக்தி மிக்க தூய பெண் என்று இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. ஆனால் அவர் உணவு உண்ணவில்லையா?

இதன் அர்த்தம் என்ன என்று உங்களுக்குப் புரிகிறதா? நமக்கு தெற்கு ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிமகன் வந்து இது தொடர்பாக நினைவூட்ட வேண்டுமா? அவனது நினைவூட்டல் அவசியம் தேவை தான். இந்தப் போர்க்களத்தில் நம்முடைய உள்ளத்திற்கும் அறிவுக்கும் ATNATU என்ற ஆயுதம் நமக்குத் தேவைப்படுகின்றது.

அவனுடைய எளிய கிராமத்து மொழியில், அவனுடைய சிறு பிள்ளைத்தனமான குழந்தை மொழியில் தன்னுடைய கடவுள் உண்ண மாட்டான்; சாப்பாடு சாப்பிட மாட்டான் என்று தெரிவிக்கின்றான்.

உணவு சாப்பிடுபவன் கடவுளாக இருக்க முடியாது. காரணம் அவன் ATNATU இல்லை. இதைச் சொல்வதற்கு இந்தப் பூர்வீகக் குடிமகனுக்கு எந்தத் தடையும் தயக்கமும் இல்லை. உலக மக்களுக்கு அவன் எந்தவொரு ஒளிவு மறைவுமற்ற உண்மையைப் போட்டு உடைக்கின்றான்.

முஹம்மதியர்?

பெயர்களை இட்டுக் கட்டிப் புனைவதில் மேற்கத்தியவர்கள் கைதேர்ந்தவர்கள். அவன் ஒளி வீசுகின்ற மின் விளக்கைக் கண்டு பிடித்தவுடன் அதற்கு ஙஹக்ஷ்க்ஹ கஹம்ல்ள் – மஜ்டா விளக்கு என்று சொன்னான். பார்சி மதத்தவர்களின் ஒளிக் கடவுள் தான் மஜ்டா.

ஐரோப்பியர்கள், தென்னாப்பிரிக்காவில் செயற்கை வெண்ணைக்கு தஹம்ஹ ஙஹழ்ஞ்ஹழ்ண்ய்ங் என்று பெயரிட்டு அதன் விற்பனையில் பெரும் வெற்றி கண்டு விட்டான். இந்தியாவில் கணிசமான மக்கள் தொகையினர் ராமரை மனிதக் கடவுள் என்று கூறுகின்றனர்.

இந்த வெள்ளையன் தன்னை கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொள்கிறான். காரணம் அவன் கிறிஸ்துவை வணங்குவதால்! புத்தரை வணங்குபவர்களை புத்திஸ்ட் என்று குறிப்பிடுகிறான். இதே வாதத்தின் அடிப்படையில், முஸ்லிம்கள் முஹம்மது நபியை வணங்குகிறார்கள் என்று கருதிக் கொண்டு முஹம்மதியர் என்று அழைக்கின்றான். ஆனால் உலகில் வாழும் ஆயிரம் மில்லியன் முஸ்லிம்களில் ஒருவர் கூட முஹம்மதை வணங்குபவர் அல்ல என்பது தான் உண்மை.

முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கக்கூடிய முட்டாள் ஒருவன் இருக்கின்றான் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் அவனை வேண்டுமானால் முஹம்மதியன் என்று அழைக்கலாம். ஆர்வக் கோளாறில் முஹம்மதை வணங்கும் ஒரு முட்டாள், தெற்கு ஆஸ்திரேலியா பூர்வீகக் குடிமகனிடம் போய் தனது கடவுள் முஹம்மது என்று சொல்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பூர்வீகக் குடிமகனின் பதில் என்னவாக இருக்கும்? நீங்களே சிந்தித்துப் பாருங்கள். குழந்தைத் தன்மையை ஒத்த அந்தப் பூர்வீக மக்கள் இந்த முஹம்மதியரிடம் கேட்கப் போகும் கேள்வி, முஹம்மது ATNATUவா? அதற்கு இந்த முட்டாளிடமிருந்து வரப் போகும் பதில், இல்லை என்பது தான்.

இது தான் உண்மை நிலை எனும் போது படித்த, பண்டித, நாகரீகமிக்க பல மில்லியன் மக்களால் வழிபாடு செய்யப்படுகின்ற கதாநாயகர், கதாநாயகிகளின் நிலைமை என்ன?

நீங்கள் கடவுளாக வழிபடுகின்ற ஆண், பெண் கடவுளர்களை, தேவர்களை, தேவிகளை இந்தப் பூர்வீகக் குடிமகனுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்துங்கள். தங்களிடம் வருகின்ற கடவுளர்களிடம் ATNATU என்ற மட்டையால் அடித்து ஒரு சிக்ஸர் விளாசி விடுவான்.

உண்மையில் இந்தப் பூர்வீகக் குடிமகன், தன்னுடைய கடவுள் கொள்கையில் ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா கண்டங்களில் வாழ்கின்ற மில்லியன் கணக்கான மக்களின் கடவுள் கொள்கையை விட உயர்ந்து நிற்கவில்லையா?

பின்னடைவில் ஒரு முன்னேற்றம்

சந்திரனில் இறங்கி தடம் பதித்து, நடை பயில்கின்ற அமெரிக்கனையும் செயற்கைக் கோள்கள் போன்ற சாதனங்கள் வாயிலாக அங்குள்ள நிலப்பரப்பில் நடக்கும் நிகழ்வுகளை தன் வீட்டிலிருந்து கொண்டே கண்காணித்துக் கொண்டிருக்கும் அவனுடைய இனத்தாரையும் பாருங்கள். அருமையிலும் அருமை தான்.

வங்காள விரிகுடா துயரச் சம்பவத்தை நினைத்துப் பாருங்கள். கடலில் நிகழவிருக்கின்ற சுனாமி அலைத் தாக்குதலைப் பற்றி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்ததை நினைத்துப் பாருங்கள். அரபுகள் விரைவில் உங்கள் நாட்டைத் தாக்கப் போகிறார்கள் என்று இஸ்ரேலை அமெரிக்கா எச்சரிக்கை செய்ததை எண்ணிப் பாருங்கள். 1973ல் ரமளானில் நடக்கவிருந்த போரைப் பற்றி அமெரிக்கா முற்கூட்டியே எச்சரித்ததை சிந்தித்துப் பாருங்கள்.

பல்வேறு சீர்கேடுகளைக் கொண்டிருந்தாலும் இந்த அமெரிக்கர்கள் ஒட்டு மொத்த அனைத்து மனிதக் கடவுள்களை விடவும் மாபெரும் அதிகாரம், ஆதிக்கம் மிக்கவர்களாகத் திகழ்கின்றனர். இத்தகைய பலமான, வலிமையான இந்த அமெரிக்கர்களும், இவர்களுடைய ஐரோப்பா மற்றும் இதர நாடுகளின் கூட்டாளிகளும் மனிதனையும் குரங்கையும் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். இல்லை! அந்த ஷைத்தானை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இப்படி?

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமக்கு முன் சென்ற சமுதாயங்களுக்குத் தூதர்களை அனுப்பினோம். அவர்களது செயல்களை ஷைத்தான் அழகாக்கிக் காட்டினான். இன்னும் அவனே இன்று அவர்களின் உற்ற நண்பன். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

அல்குர்ஆன் 16:63

தனி நபர் வழிபாடு மனிதனுடைய உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து கிடக்கும் ஓர் உணர்வு. உண்மையான கடவுளை வணங்கவில்லையெனில் வேறு எதையாவது அவன் வணங்குவான். கண்டிப்பாக வணங்கியே தீருவான்.

கண்டதையும் வணங்குவதை விட தன் இனத்தைச் சார்ந்த அழகிய ஆண் அல்லது பெண்ணைக் கடவுளாக்கி வணங்குவது அவனுக்கு முன் சிறந்த வழிமுறையாகத் தெரிகின்றது. கடவுளுக்கு மனிதப் பண்பு அல்லது வடிவம் கற்பிக்கும் கொள்கை (Anthropomorphism) அதாவது தன்னுடைய விருப்பத்திற்குத் தக்கவாறு மனிதன் கடவுளைக் கற்பனை செய்கின்ற வழிமுறை மனித சமுதாயத்தில் தொன்று தொட்டு இருந்து வருகின்றது. இதில் நவீன காலம், பழைய காலம் என்ற வேறுபாடு இல்லை. தன்னைப் போலவே, தன்னுடைய உருவத்தைப் போன்றே மனிதன் கடவுளைப் பற்றிச் சிந்திக்கிறான்.

அப்பொழுது கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” என்றார்.

ஆதியாகமம் 1:26

மேலே நாம் மேற்கோள் காட்டியிருக்கும் பைபிளின் ஆரம்ப அத்தியாயத்தில் உள்ள வசனத்தில் இடம் பெறுகின்ற உருவம் மற்றும் நாம் என்ற வார்த்தைகளை பரிதாபத்திற்குரிய, இருளில் மூழ்கிக் கிடக்கின்ற கிறித்தவர்கள் தவறாக விளங்கிக் கொண்டனர்.

பிதா, மகன், புனித ஆவி ஆகிய மூவரும் ஒன்றாகச் சங்கமிப்பதால் தான் நாம் என்று வருகின்றது என்று ஒரு கிறித்தவர் விளக்கமளிக்கின்றார். அரபியிலும் ஹிப்ருவிலும் இரண்டு விதமான பன்மைகள் இருக்கின்றன என்பதை அவர் விளங்கத் தவறி விட்டார். ஒன்று, ஒருவருக்கு மேற்பட்டவரை (நாம் என்று குறிக்கும்) பன்மையாகும். மற்றொன்று, ஒருவரை மட்டுமே குறிக்கின்ற மரியாதைப் பன்மையாகும்.

“இவர்களுக்கு சான்றுகளை (நாம்) எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக” என்று திருக்குர்ஆன் 5:75 வசனத்தில் வருகின்ற “நாம்’ என்ற வார்த்தையைக் கவனியுங்கள். உண்மையில் இது மரியாதைப் பன்மையாகும்.

நாம் என்று வருவதால் கடவுள் தன்மையில் பலர் இருப்பதாக எந்தவொரு முஸ்லிமும், அரபுக் கிறித்தவரும், யூதரும் ஒருபோதும் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.

தவ்ராத்தின் (பழைய ஏற்பாட்டின்) ஆரம்பத்தில் வருகின்ற “நாம்’ என்ற வார்த்தை எத்தனை கடவுள்களைக் குறிக்கிறது என்று ஹிப்ரு மொழி தெரிந்த ஒரு யூதரிடம் கேட்டால் அவர் நாம் சொல்வதைப் போன்று தான் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் பதில் சொல்வார்.

இன ஒதுக்கீடு கடவுள்கள்

மனித சமுதாயத்தில் தவறான சிந்தனையுடையவர்கள் கடவுளைத் தங்கள் உடல் அமைப்பு ரீதியில் மட்டும் கற்பனை செய்யவில்லை. கடவுளுக்கும் இன ஒதுக்கீடு அடிப்படையிலான பாகுபாட்டையும் வித்தியாசத்தையும் கற்பித்து விட்டனர்.

எத்தியோப்பிய கடவுளுக்கு எத்தியோப்பியர்களைப் போன்ற உதடுகள், வெண்கலக் கன்னங்கள், கம்பளி மயிர் போன்றவற்றைக் கொடுத்தார்கள். கிரேக்கக் கடவுள்கள் கிரேக்கர்களைப் போன்றே கூரிய கண்கள், பழமை மிக்க, பார்ப்பதற்கு அழகு மிக்க தோற்றம் கண்டார்கள்.

இப்படிக் கடவுளுக்கு மத்தியிலும் இன ஒதுக்கீட்டுக் கொள்கை கொண்டு வந்து விட்டனர்.

கிரேக்கர்களும் ரோமர்களும் தங்களுடைய அறிவுக் கடவுள் (ஙண்ய்ங்ழ்ஸ்ஹ) ஒளி மற்றும் சூரியக் கடவுள் (ஆல்ர்ப்ப்ர்) மகத்தான சாதனை புரிந்த ஹெர்குலிஸ் போன்றவர்களைக் கழற்றி விட்டு விட்டு, கைவிட்டு விட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதக் கடவுளான இயேசு கிறிஸ்துவைக் கடவுளாக ஏற்றுக் கொள்ள முன்வந்து விட்டனர்.

தங்களுடைய புராணக் கடவுளர்களை மேற்கத்திய ஐரோப்பாவிற்கு இறக்குமதி செய்தவர்களின் முன்னணி வகித்தவர்கள் ரோமானியர்கள் தான். அவர்களில் ஸ்காண்டிநேயர்கள் போர் மற்றும் உழவுக்குரிய இடி மின்னல் தெய்வத்தை (பட்ர்ழ்) வணங்கிக் கொண்டிருந்தனர். ஆங்கில சாக்சானியர்களின் கடவுள் தான் எல்லாக் கடவுள்களுக்கும் தலைமைக் கடவுள். அறிவு மற்றும் போருக்குரிய கடவுளான இவர் ஒற்றைக் கண் கொண்ட ஆண் கடவுள். இவரது பெயர் ஓடின் (ரர்க்ங்ய்) என்பதாகும். அவர்கள் தோர், ஓடின் போன்ற கடவுள்களை விட்டு விட்டு, அந்த மனிதக் கடவுளை (இயேசுவை) மிக்க மகிழ்ச்சியுடன் விரைந்து ஏற்றுக் கொண்டனர். இதற்குப் பதிலாக ஐரோப்பியர்கள் தாங்கள் ஆதிக்கம் செலுத்திய ரோமானிய காலனிகளில் முக்கடவுள் கொள்கையை அறிமுகம் செய்தனர். மண்ணின் மைந்தர்கள் வணங்கிய, கண்ட கண்ட கடவுள்களை விட அழகு நிறைந்த மனிதக் கடவுள்களைக் கொடுத்தனர்.

படங்களிலும் சிற்பங்களிலும் திரைப்படங்களிலும் எப்படி இயேசுவை மாற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.

கிங் ஆஃப் கிங்ஸ் என்ற படத்தில் ஜெஃப்ரி ஹன்டர் என்ற நடிகர் வருவது போன்ற ஓர் அழகிய கோணத்தில் தங்க நிறத் தலைமுடிகளுடனும், நீல நிறக் கண்களுடனும் அவரைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு யூதரைப் போன்று அவரது தோற்றம் இல்லை. யூதருக்கு மூக்கு சற்று வித்தியாசமாக அமைந்திருக்கும். ஆனால் அவர்கள் காட்சிப்படுத்திய கடவுள் உடல் அமைப்பில் எலும்பு கட்டமைப்பில் ஓர் ஆங்கில, ஜெர்மானிய, ஸகாண்டிநேவிய தோற்றத்தில் தான் தெரிகிறாரே தவிர ஓர் யூதரைப் போல் காட்சியளிக்கவில்லை.

வெள்ளையர்களின் மனிதக் கடவுள் நீல நிற மனிதக் கடவுளுக்கு மாற்றமாக அமைந்திருப்பார். (இந்து மதக் கடவுள் படங்களில் ராமர், கிருஷ்ணர் ஆகியோரை நீல நிறத்தில் வரைந்திருப்பார்கள்.)

இப்படி இவர்களது கதை, சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த கதையாக, ஏற்கனவே இருந்த இணை வைப்பை விடக் கொடூரமான இணை வைப்பிற்கு மாறி விட்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்களின் கடமை

இருளில் கிடக்கின்ற பல மில்லியன் கிறித்தவர்கள் விஷயமாக நாம் எதுவுமே செய்யவில்லை. நாம் அவர்களை அவர்களது இணை வைப்புக் கொள்கையிலிருந்து கரையேற்ற வேண்டும். அல்லது அவர்கள் நம்மை இவ்வுலகிலும் மறு உலகிலும் நாசத்தில் கொண்டு போய் தள்ளி விடுவார்கள்.

அல்லாஹ்வின் பூமியில் உண்மையான அந்த இறைவனை வணங்குபவர்களை விட மிக அதிகமான கோடிக்கணக்கான மக்கள் மனிதக் கடவுள்களையே வணங்குகின்றனர். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் காட்டுகின்ற அலட்சியத்தினால் தான் முஸ்லிம் நாடுகளில் துன்பங்கள் தொடர்கின்றன.

தூய இஸ்லாத்தின் நம்பிக்கையைப் பரப்புவது தான் ஒரு முஸ்லிமுடைய கடமையாகும். இந்த இஸ்லாத்தை நாம் குறைத்து மதிப்பீடு செய்தால் அது நமது அழிவுக்குக் காரணமாகும். அல்லாஹ்வின் சாட்டை எந்தச் சப்தமும் இல்லாமல் நம்மைச் சாய்த்து விடும்.

இந்தத் தூய அழைப்புப் பணியில் உங்கள் பங்கு என்ன? பணி என்ன? அது மிக எளிது தான்.

மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக! (அல்குர்ஆன் 5:75)

இந்த வசனத்தை மனனம் செய்து கொள்ளுங்கள். ஒரு சிறிய அட்டைத் துண்டில் இந்த வசனத்தை எழுதி சட்டைப் பையில் வைத்துக் கொள்ளுங்கள். பார்க்கும் போதெல்லாம் அதை, இறைவன் கொடுத்த இயற்கை கம்ப்யூட்டரான மூளையில் பதிய வையுங்கள்.

இந்த ஒரு வசனத்தை ATNATU என்ற ஆயுதத்தைக் கொண்டு, கடவுளுக்கு மனிதப் பண்பு கற்பிக்கும் (Anthropomorphism) கொள்கையின் அடிவேரை, ஆணி வேரை அறுத்தெறியுங்கள். இது உங்களுடைய உரிமையும் இஸ்லாமிய மார்க்கத்தின் விதியும் ஆகும். அல்லாஹ் சொல்கின்றான்:

நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதி. அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்? (அல்குர்ஆன் 4:122)

அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?