தமிழகத்தில் ஷஃபான் (ஹிஜ்ரி 1446) மாதத் துவக்கம்

தமிழகத்தில் ஷஃபான் (ஹிஜ்ரி 1446) மாதம் பற்றிய அறிவிப்பு

பிறை தேட வேண்டிய நாளான 30.01.2025 வியாழக் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை.

பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் ரஜப் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் 31.01.2025 வெள்ளிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷஃபான் மாதம் ஆரம்பமாகின்றது என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

இப்படிக்கு:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்