குர்ஆன் வசனங்களை ஓதியப் பிறகு ஸதக்கல்லாஹுல் அளீம் என்று சொல்வது நபி வழியா?

குர்ஆன் வசனங்களை ஓதியப் பிறகு ஸதக்கல்லாஹுல் அளீம் என்று சொல்வது நபி வழியா?

பதில் :

திருக்குர்ஆனை ஓதி முடிக்கும் போது ஸதக்கல்லாஹுல் அளீம் (மகத்துவ மிக்கவன் உண்மையை கூறினான்) என்று சொல்லும் வழக்கம் பரவலாக காணப்படுகிறது.

திருக்குர்ஆன் வசனங்களை ஓதி முடித்தவுடன் இவ்வாறு கூற வேண்டுமென்று திருக்குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ இடம்பெறவில்லை. எனவே இவ்வாறு சொல்வது நபிவழி அல்ல.

இறைக் கருத்தை வலியுறுத்தி பேச வேண்டிய இடங்களில் அவசியம் ஏற்பட்டால் ஸதக்கல்லாஹுல் அளீம் “ மகத்துமிக்க அல்லாஹ் உண்மைச் சொன்னான்“ என்று சொல்லிக் கொள்ளலாம். அல்லது இதே கருத்தை தரும் வேறு வார்த்தைகளிலும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இதை குர்ஆன் ஓதி முடிக்கும் போது எப்போதும் சொல்ல வேண்டும் என்பதற்கு ஆதாரமில்லை.