பரேலவிகளை அறியாத பால் தாக்கரே

பரேலவிகளை அறியாத பால் தாக்கரே

அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் நடைபெற்ற கலவரங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்குக் குரல் கொடுப்பதற்காகக் கடந்த ஆகஸ்ட் 11, 2012 அன்று மும்பை ஆசாத் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை தஹக்ஷ்ஹ ஆஸ்ரீஹக்ஹம்ஹ், அனைத்திந்திய சுன்னத் ஜமாஅத்துல் உலமா, அனைத்திந்திய ஜமாஅத் ரஜா இ முஸ்தபா மற்றும் பல அமைப்புகள் நடத்தின. இந்த அமைப்புகள் அனைத்துமே பரேலவி அமைப்புகள்.

இப்போராட்டத்தின் போது உரையாற்றிய நியமத் நூரி, குத்து பஹாயிய்யா, அக்தர் அலீ, அமானுல்லாஹ் பரக்கத்தி, குலாம் அஹ்மத் காதிரி ஆகிய அனைவரும் பரேலவி ஆலிம்கள்.

இதில் ஐந்தாவதாகப் பேசிய குலாம் அஹ்மத் காதிரி என்பவர் கூட்டத்தைக் கண்ட குஷியிலும் குதூகலத்திலும் கொதிப்பேறிய, கொழுப்பேறிய பேச்சுக்களைக் கொப்பளிக்க ஆரம்பித்தார். இதன் விளைவாக மூவாயிரம் இளைஞர்கள் கொந்தளிக்கத் துவங்கினர். அவர்களுடன் மேலும் ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் அணி சேர்ந்தனர்.

ஆசாத் மைதானத்தில் உள்ள பதாகைகள், கொடிகள், மூங்கில் கம்புகளைத் தூக்கிக் கொண்டு சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர். வாயில் வந்த கொச்சை வார்த்தைகளையும் வசை மொழி கோஷங்களையும் எழுப்பிக் கொண்டு ஓர் அசம்பாவிதத்திற்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தனர். நிலைமையை உணர்ந்த காவல்துறை அவர்களிடம் அமைதி காக்குமாறு கெஞ்சியது.

கூட்டம் பெருத்துவிட்டால், தலைவர்களுக்குக் குருட்டுத்தனம் பெருக்கெடுக்கும். அவ்வாறு தலைவர்களுக்கே பெருக்கெடுக்கும் போது தொண்டர்களின் நிலையைக் கேட்கவா வேண்டும்? காவல்துறையின் கெஞ்சல் அவர்களின் காதுகளில் விழவில்லை.

  • ராணுவ வீரர்களின் நினைவுச் சின்னமான அமர் ஜோதி ஜவானை ஒரு சிலர் சேதப்படுத்தினர்.
  • 11 வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இந்த வாகனங்களில் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஞஇ (ஞன்ற்ள்ண்க்ங் இழ்ர்ஹக்ஸ்ரீஹள்ற்ண்ய்ஞ்) வேனும் அடக்கம். ஊடகத்துறையினரின் கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
  • சி.எஸ்.டி. டிப்போவில் உள்ள உயர்தரமான 31 பஸ்கள் கல்வீச்சுக்கு இலக்காகி கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. தெற்கு மும்பை நோக்கிச் சென்ற பஸ்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டன.
  • காயமடைந்தவர்கள் மொத்தம் 54 பேர். அவர்களில் 45 பேர் காவல்துறையினர். இதில் 8 பேர் தலைக்காயம் பட்டவர்கள். இவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது.
  • பெண் காவலர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டனர். காவல்துறையினரிடமிருந்து சில ரக துப்பாக்கிகளைப் பிடுங்கினர். சில காவலர்களை வேனில் உள்ளே வைத்துப் பூட்டினர். நல்ல வேளையாக மற்ற காவலர்களின் உதவியுடன் அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
  • இறுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியாயினர்.
  • 74 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் சேதம் விளைவிக்கப்பட்டன. இதில் 80 சதவிகிதம் தனியார் சொத்துக்கள் தான்.
  • இந்தக் கலவரத்தின் விளைவாக மும்பை போலீஸ் கமிஷனர் அரூப் பட்நாயக் பணி மாற்றம் செய்யப்பட்டார்.
  • ஆசாத் மைதானக் கலவரம் தொடர்பாக ஆரம்பத்தில் 63 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேர் மீதான வழக்கு ஆதாரமில்லாததால் விடுவிக்கப்பட்டு, 58 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இவை பரேலவிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் காரணமாக ஏற்பட்ட விளைவுகள். முஸ்லிம் அல்லாத மக்களை, குறிப்பாக முஸ்லிம்களுடன் நட்பு கொண்டிருந்த மக்களைக் கூட இது முகம் சுளிக்க வைத்தது; முணுமுணுக்க வைத்தது.

செல்லாக்காசுக்கு ஒரு செல்வாக்கு

இந்த விளைவுகள் இத்துடன் நிற்கவில்லை. மும்பையில் நாளுக்கு நாள் பலமும், வலிமையும் இழந்து கொண்டிருந்த மும்பை தாதா பால்தாக்கரேயின் பரிவாரங்களுக்கு நல்ல ஊட்டச்சத்தாக இது அமைந்தது.

சிவசேனையிலிருந்து பிரிந்து ராஜ் தாக்கரே தொடங்கிய மஹா நவநிர்மான் சேனா அமைப்பு எந்தச் செல்வாக்குமில்லாமல் செல்லாக் காசாகக் கிடந்தது. மரணப்படுக்கையில் கிடந்த அந்த எம்.என்.எஸ். அமைப்புக்கு ஓர் ஊட்டச்சத்தும் ஊக்கமும் கிடைத்தது.

உடனே ராஜ் தாக்கரே, ஓர் ஆர்ப்பாட்டத்தை அறிவிக்கின்றார். ஆகஸ்ட் 11 அன்று பரேலவிகள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். ஆகஸ்ட் 21ஆம் தேதி கிர்வோம் சவ்பாத்தியிலிருந்து ஆசாத் மைதானத்தை நோக்கி பேரணி நடத்தவும் அங்கு ஆர்ப்பாட்டம் செய்யவும் எம்.என்.எஸ். முனைந்தது.

முஸ்லிம்களின் ஆசாத் மைதான நிகழ்வைக் கண்டித்தே ராஜ் தாக்கரே இந்தப் பேரணி ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். ஆரம்பத்தில் காவல்துறை அனுமதி மறுத்தது. பின்னர் அனுமதி வழங்கியது. இதில் பெருங்கூட்டம் கூடியது.

இது சட்டமன்றத் தேர்தலின் போது மகா நவநிர்மான் சேனாவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி விடும் என்று அந்தக் கட்சியினரும் மக்களும் கருதும் அளவுக்கு அந்தக் கூட்டம் அமைந்திருந்தது.

நிறம் மாறிய பால்தாக்கரே

பரேலவிகளின் ஆசாத் மைதான போராட்டத்தினால் ஏற்பட்ட எதிர்விளைவுகளின் உச்சக்கட்டம் பால்தாக்கரே முஸ்லிம்களுக்கு எதிராக விடுத்த எச்சரிக்கையாகும்.

அந்த எச்சரிக்கையைப் பார்ப்பதற்கு முன்னால் பால்தாக்கரேயைப் பற்றி சில வரிகளில் பார்ப்போம். “மராத்தியம் மராத்தியருக்கே, இங்கு அந்நியருக்கு இடமில்லை'” என்ற மண்ணின் மைந்தன் கொள்கையைக் கொண்டவர் தான் பால்தாக்கரே! இந்திய அரசியல் சட்டம் இதற்கு நேர் எதிரானது. காரணம், காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஒரே பாரதம் என்று அரசியல் சட்டம் தெளிவாகத் தெரிவிக்கின்றது. இதற்கு எதிரான மண்ணின் மைந்தன் கொள்கையைக் கொண்டவர் பால்தாக்கரே! ஆனால் அவர் தன்னுடைய கொள்கைக்கு மாற்றமாக இப்போது பேசுகின்றார். ஏன்? எதற்கு? என்பதைத் தான் அவரது பேட்டி விளக்குகின்றது.

அவர் தன்னுடைய சாம்னா பத்திரிகையில் எழுப்பிய அந்த அபாயச் சங்கொலி இதோ:

இந்திய நாட்டின் சூழல் முற்றிலும் மாறிவிட்டது. இனி இங்கு நாம் மராத்தியன், வங்காளியன், குஜராத்தியன், பஞ்சாபியன் என்ற அடையாள அட்டைகளை வைத்துக் கொண்டு ஆட்டம் ஆடக் கூடாது. அந்த அட்டைகள் நமக்கு எதுவும் அறவே பலனளிக்காது. இந்த அடையாள அட்டைகள் அனைத்தையும் தூரத் தூக்கி எறிவோம். இஸ்லாத்திற்கு எதிராக அனைவரும் ஓரணி திரள்வோம்; ஒன்றாக இணைவோம்.

ஆசாத் மைதானத்தில் கூடிய முஸ்லிம்களின் கூட்டமும் ஆடிய ஆட்டமும் இந்துக்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட சமிக்ஞையும் சவாலும் ஆகும். மாரத்தியர்களால் மட்டுமே இஸ்லாத்தை எதிர்க்க முடியாது. பஞ்சாபிகள் மட்டும் இஸ்லாத்தை எதிர் கொள்ளலாம் என்பது பகல் கனவு. குஜராத்தியர்கள் மட்டும் எதிர் கொள்ளலாம் என்பது குறுகிய கண்ணோட்டம். வங்காளிகள் மட்டும் எதிர்கொள்ள முடியும் என்பது வார்த்தை ஜாலம் ஆகும். அனைவரும் ஒன்றுபட்டால் தான் இஸ்லாத்தை வீழ்த்த முடியும்.

இந்துக்கள் அனைவரும் ஒன்றுபடாத வரை ஒருங்கிணையாத வரை ஒருபோதும் இஸ்லாத்தை எதிர்கொள்ள முடியாது.

ஊடகங்கள் அனைத்தும் ஆளுங்கட்சியின் ஊதுகுழல்களாகி விட்டன. இவை ஆசாத் மைதானத்தின் ஆர்ப்பாட்டத்தை அடக்கியே வாசிக்கின்றன. நான் நினைத்திருந்தால் மத்தியில் அல்லது மாநிலத்தில் மந்திரியாகி இருக்க முடியும். எனினும் பதவியைத் துறந்த பத்தினியாக இருப்பதற்கும் அதிகாரம் துறந்த முனிவராக இருப்பதற்கும் காரணம் எனது கொள்கையை அடைவதற்காகத் தான். அது தான் என்னுடைய மூலதனமாகும்.

இது தான் பசுத்தோல் போர்த்திய மராத்தியப் புலி இஸ்லாத்திற்கு எதிராக அடித்த எச்சரிக்கை மணியாகும்.

ஊதி அணைக்க முடியாத ஜோதி

இஸ்லாம் என்பது அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் சொல்வது போன்று ஊதி அணைக்க முடியாத ஜோதியாகும்.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.

அல்குர்ஆன் 61:8

மராத்தியர்கள், பஞ்சாபிகள், குஜராத்திகள், வங்காளிகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகும் சேர்ந்தாலும் சரி! இந்தச் சக்திகள் அனைத்தும் சேர்ந்து இந்தச் சத்திய ஜோதியை ஊதி அணைத்து விட முடியாது. இது தான் தெளிவான உண்மையாகும்.

நாம் இங்கு பார்க்க வேண்டிய விஷயம், பரேலவிகள் தங்கள் வன்முறையின் மூலம் ஏற்படுத்திய எதிர் விளைவுகளைத் தான்.

வீரமா? விவேகமா?

ஒரு முஸ்லிம் எப்போதும் வீரனாகத் திகழ வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக விவேகியாகத் திகழ வேண்டும். வீரம் என்று வருகின்ற போது, ஒரு கூட்டத்தைக் கண்டவுடன் வீரம் பிறக்கக் கூடாது; பொங்கி எழக்கூடாது. எப்போதும் வீரமாக இருக்க வேண்டும். அதற்கு முன்பாக, முதலில் விவேகம் இருக்க வேண்டும். எதிர் விளைவைக் கவனிப்பதும், கணிப்பதும் தலைமை தாங்கும் தலைவர்களுக்குக் கண்டிப்பாக இருந்தாக வேண்டும்.

உஹத் போர்க்களத்தில் நபி (ஸல்) அவர்கள், எந்தப் பொந்திலிருந்து எதிரிகளின் படை உள்ளே புகுவார்கள் என்பதைத் தெரிந்தே அந்த இடத்தில் காவலுக்கு ஒரு படையை நிறுத்தினார்கள். அந்தப் படை நபிகளாரின் கட்டளைப்படி காக்கத் தவறியது. வெற்றி உறுதியாகிவிட்டது என்றெண்ணி மற்ற வீரர்களுடன் வெற்றியைக் கொண்டாட களத்திற்குள் வந்தனர். இதனால் தான் உஹத் போர்க்களம் நிர்மூலமானது.

நிறுத்தப்பட்ட படையினர் நபி (ஸல்) அவர்களின் கட்டளையை நிறைவேற்றத் தவறியது வேறு விஷயம். ஆனால் இங்கு நாம் பார்க்க வேண்டியது, நபியவர்கள் எந்த வழியாக ஆபத்து வரும் என்று கவனித்தார்களோ, சரியாகக் கணித்தார்களோ அது தான் விவேகம். இத்தனையும் தாண்டி ஏதேனும் ஏற்படுகின்றது என்றால் அதை இறை நாட்டம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

எதிரொலியும் உன்னொலி தான்

இஸ்லாம் போர்க்களத்தில் மட்டும் இந்த எச்சரிக்கை உணர்வை எடுக்கச் சொல்லவில்லை; எதிர்விளைவை கவனிக்கச் சொல்லவில்லை. சாதாரணமான பேச்சு நடவடிக்கைகளிலும் இதைக் கவனிக்கச் சொல்கின்றது.

அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்.

அல்குர்ஆன் 6:108

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் இந்த எச்சரிக்கை உணர்வை எடுத்துக் கொள்ளச் சொல்கின்றான். நேரடியாகத் திட்டினால் தான் இறைவனைத் திட்டியதாகும் என்று விளங்கிக் கொள்ளாதீர்கள். பிறரை இவ்வாறு எதிர்விளைவாகத் திட்டுவதற்குத் தூண்டினாலும் அந்த எதிரொலியும் உன் ஒலி தான். அது உன்னால் விளைந்தது தான் என்று இஸ்லாம் கூறுகின்றது.

“ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?” என்று கேட்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள், “ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரி 5973

மேற்கண்ட ஹதீசும் இதைத் தான் தெளிவுபடுத்துகின்றது.

இந்தப் பம்பாய் பரேலவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தும் போது இந்த எதிர்விளைவுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

கண்மூடித்தனமான, கட்டுப்பாடற்ற, காட்டாற்று வெள்ளமாக சமுதாய மக்களை இழுத்து வந்து, அந்த மக்கள் மீது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீது சேற்றை வாரி வீச வைத்து விட்டார்கள்.

இதில் பரேலவிகள் ஒட்டுமொத்தமாகக் கரித்துக் கொட்டிய கோபம் ஊடகத்தின் மீது தான். இதே ஊடகம் தான் பரேலவிகள் ஏற்கனவே முராதாபாத்தில் அக்டோபர் 2011ல் நடத்திய சூபிக்கள் மாநாட்டைப் படு அமர்க்களமாக வெளியிட்டன. ஆப்ப் ஒய்க்ண்ஹ மப்ஹம்ஹ ஹய்க் ஙஹள்ட்ஹண்ந் இர்ஹழ்க் (ஆஒமஙஇ) என்பது அடையாளம் தெரியாத ஓர் அமைப்பு. இவர்கள் நடத்திய இந்த மாநாட்டிற்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்ததற்கு ஒரே காரணம், அவர்கள் வஹ்ஹாபிசத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்காகத் தான். வஹ்ஹாபிசம் தான் பயங்கரவாதத்திற்கு அஸ்திவாரம் இடக்கூடியவை என்று ஊடகத் துறை நம்புவதால் தான்.

இப்போது தான் ஊடகங்களுக்கு ஓர் உண்மை புரிந்திருக்கின்றது. இந்த வெறியாட்டத்தை ஆடியிருப்பது இவர்களால் தப்பான பார்வை பார்க்கப்படுகின்ற தேவ்பந்த் மதரஸாவுடன் இணைந்த வஹ்ஹாபிச அமைப்பல்ல! முற்றிலும் இவர்கள் தூக்கிப் பிடிக்கின்ற பரேலவிச, சூபிஸ அமைப்பினர் தான் என்று!

பால் தாக்கரேவுக்குத் தெரியாத ஓர் உண்மை என்னவெனில் ஆசாத் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய இவர்கள் பரேலவிகள் என்பது தான்.

பால்தாக்கரேக்கும் பரேலவிகளுக்கும் உள்ள ஒரேயொரு வித்தியாசம், அவர் கல்லை வணங்குபவர்; இவர்கள் அல்லாஹ் தான் ஓரிறைவன் என்று சொல்லிக் கொண்டு கப்ரை வணங்குபவர்கள்.

அவர் சாமியை வணங்கினால் இவர்கள் சமாதியை வணங்குவார்கள்.

இந்த உண்மை தெரிந்திருந்தால், இவர்களும் நம்மவர்கள் தான் என்று எண்ணி பால்தாக்கரே இவர்களைக் காதலிக்க ஆரம்பித்திருப்பார். ஒட்டுமொத்த இஸ்லாத்தின் மீது வெறுப்பு இருந்தாலும் பரேலவிகளை மட்டும் பிரித்துப் பார்த்திருப்பார். பரேலவிசத்தின் இந்தப் பரம ரகசியம் பால்தாக்கரேக்குப் புரியாமலேயே போனது.