முஸ்லிம்களின் உரிமை காத்த அடிமை இந்தியா

முஸ்லிம்களின் உரிமை காத்த அடிமை இந்தியா

முஸ்லிம்களுக்கு முழுவதும் சொந்தமான பள்ளிவாசலையும் அதற்குரிய இடத்தையும் அபகரிக்கும் வகையில் அநியாயத் தீர்ப்பை 30.09.2010 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியது.

முஸ்லிம்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தங்களது உயிரையும், உடமையையும் இழந்து போராடினர். காரணம், தங்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக!

ஆனால் விடுதலை பெற்ற இந்தியாவில் முஸ்லிம்களின் சொத்துரிமை அநியாயமாகப் பறிக்கப்பட்டுள்ளது. அதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு கெட்ட எடுத்துக்காட்டாக உள்ளது.

பாபரி மஸ்ஜிதின் இதே விவகாரம், சுதந்திரத்திற்கு முன்பு வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் 1885ல் நீதிமன்றத்திற்கு வந்தது.

வழக்கு எண் 61/280/1885ஆகப் பதியப்பட்ட இந்த வழக்கை மஹாந்த் ரகுபர் தாஸ் என்பவர் தாக்கல் செய்தார். ராம சபுத்ரா எனும் 21 அடி கிழ மேலாகவும், 17 அடி தென்வடலாகவும் அமைந்த ராமர் பாதம் பதிந்த மேடை தான் ராமர் பிறந்த இடமாகும். தாங்க முடியாத வெப்பம் மற்றும் குளிரால் அங்கு வணங்க முடியவில்லை. அதனால் அந்த மேடைக்கு மேலாக ஒரு கோயிலை எழுப்ப அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டிருந்தார்.

அப்போது பைசாபாத்தின் உதவி நீதிபதியாக இருந்த பண்டிட் ஹரி கிருஷ்ணன் பிப்ரவரி 24, 1885ல் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து, அதாவது கோயில் கட்ட அனுமதி மறுத்து தீர்ப்பளித்தார். அனுமதி மறுத்ததற்கான காரணத்தையும் அவர் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

கோயில் கட்டுவதற்கு அனுமதியளிப்பது நாம் கொண்டிருக்கக் கூடிய பொதுவான கொள்கைக்கு எதிரானதாகும். அவ்வாறு கோயில் கட்ட நாம் அனுமதித்தால் இந்துக்கள் கோயிலில் மணியடிப்பார்கள்; சங்கு ஊதுவார்கள். இது இந்த வழியே தாண்டிச் செல்லும் முஸ்லிம்களுக்கு இடையூறு ஏற்படுத்தும். இதில் இரு சமுதாயமும் அடித்துக் கொண்டு கலவரம் ஏற்பட்டு, அதில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் பலியாக நேரிடும். அதனால் கோயில் கட்ட அனுமதி என்பது கலவரத்திற்குப் போடும் அஸ்திவாரம் ஆகும்.

இவ்வாறு அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் சபுத்ரா அமைந்திருக்கும் இடம் ரகுபர் தாஸிற்குச் சொந்தமானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

முதல் மேல் முறையீடு

இதை எதிர்த்து ரகுபர் தாஸ், பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கு எண் 27/1886ஆகப் பதியப்பட்ட இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு நீதிபதி எஃப்.இ.ஏ. சேமியர், பாபரி மஸ்ஜித் இடத்திற்கு நேரடி வருகையளித்துப் பார்வையிடுகின்றார்.

அவ்வாறு பார்வையிட்டு விட்டு மார்ச் 18, 1886ல் இந்த மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, பைசாபாத் உதவி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்தார்.

மஹாந்த் ரகுபர் தாஸிற்கு சபுத்ரா அமைந்திருக்கும் இடம் சொந்தமானது என்ற உதவி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து விடுகின்றார்.

“இந்துக்கள் புனிதமாகக் கருதும் இடத்தில் பள்ளி கட்டப்பட்டிருப்பது மிகவும் துரதிஷ்டமானது. ஆனால் இது 356 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு. இதற்கு இப்போது பரிகாரம் காண முடியாது. காரணம், இது மிகவும் காலம் கடந்தது” என்று அவர் தனது தீர்ப்பின் போது தெரிவித்தார். மேலும் தற்போதைய நிலையே தொடரும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இரண்டாம் மேல் முறையீடு

மகாந்த் ரகுபர் தாஸ் இதை எதிர்த்து ஆவுத் நீதி ஆணையரிடம் இரண்டாம் மேல் முறையீடு செய்கிறார். ஆவுத் நீதிபதி டபுள்யூ. யங்க்  (ர. வர்ன்ய்ஞ்) இந்த இரண்டாம் மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்து நவம்பர் 1, 1886 அன்று தீர்ப்பளிக்கின்றார். அவர் அளித்த தீர்ப்பிலும் சேமியர் போன்றே சில கருத்துக்களைப் பதிவு செய்கின்றார்.

“சபுத்ரா நிலம் தனக்குச் சொந்தமானது என்று மனுதாரர் உரிமை கொண்டாடுகிறார். ஆனால் ஆவணங்களின்படி மனுதாரருக்கு இந்த நிலத்தின் மீது எந்த உரிமையும் இல்லை. அத்துடன் சிவில் அதிகாரிகள் (ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்) சரியான விதத்திலேயே மனுதாரரின் கோரிக்கையைத் தள்ளுபடி செய்திருக்கின்றனர்” என தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

இது இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் பாபரி மஸ்ஜித் தொடர்பாக நடந்த வழக்கு விபரம். வெள்ளையர்கள் நீதித் துறையிலும் நிர்வாகத் துறையிலும் மதத்திற்கு அப்பாற்பட்டு நடந்திருக்கின்றனர். அவர்களுக்குக் கீழ் பணியாற்றிய அதிகாரிகளும் அதே கொள்கையின்படி நடந்திருக்கின்றனர்.

வெள்ளையர் காலத்தில் நீதிபதிகள் நீதித்துறையின் வேலையைச் செய்தனர். அதனால் இப்படி ஓர் அற்புதமான தீர்ப்பை அவர்கள் வழங்கி, நாட்டை சரியான முறையில் ஆட்சி செய்தனர்.

இந்த வழக்கை முதன்முதலில் விசாரித்த உதவி நீதிபதி பண்டிட் ஹரி கிருஷ்ணன் ஒரு பிராமணர். ஆனாலும் அவர் தனது நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பளிக்காமல் சட்டத்தின் அடிப்படையில் இப்படி ஒரு அருமையான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.

நீறு பூத்த நெருப்பாக உள்ள ஒரு விஷயத்தை நீரூற்றி அணைக்கும் வேலையைச் செய்திருக்கிறார்கள். ஆனால் இன்றுள்ள நீதிபதிகள் நீறு பூத்த நெருப்பை ஊதி பெரு நெருப்பாக ஆக்கியிருக்கின்றனர்.

இன்றைய நீதிபதிகள் கருப்பு உடை அணிவதற்குப் பதிலாக காவி உடை அணிந்து இந்துத்வாவின் திட்டங்களை அரங்கேற்றுகின்றனர்

இதன் மூலம் இந்த நாட்டுக்காக உயிர், உடமையை அர்ப்பணித்த முஸ்லிம்களின் உரிமையைப் பறித்துள்ளனர்.

அடிமை இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமை காக்கப்பட்டது. ஆனால் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

இதற்காகவா நாம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து, தியாகம் செய்து சுதந்திரம் வாங்கினோம் என்று முஸ்லிம்கள் ஆழ்ந்த வருத்தத்தில் உறைந்து கிடக்கின்றனர்.

உரிமையியல் வழக்கில் ஓர் ஊமை தெய்வம்

அறுபது ஆண்டு காலமாக இழுத்தடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம், சட்டத்தின்படி இல்லாமல் – சாட்சியத்தின்படி நில்லாமல் ஓர் அநியாயத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதுவரை தாமதப்படுத்தப்பட்ட நீதி, இறுதியில் மறுக்கப்பட்டே விட்டது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிவாசல் நிலம், ஏதோ மூன்று அண்ணன், தம்பிகளுக்குப் பாகப்பிரிவினை செய்யப்படுவது போல் பிரிக்கப்பட்டுள்ளது. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் வேலையை அலகாபாத் உயர் நீதிமன்றம் செய்து முடித்திருக்கின்றது.

இதற்கு அடிப்படைக் காரணம், மூன்று நீதிபதிகளின் உள்ளங்களில் குடி கொண்டிருக்கும் மத நம்பிக்கை தான். சிப்கத்துல்லாஹ் கான் முஸ்லிம் ஆயிற்றே! அவரிடம் எப்படி இந்து மத நம்பிக்கை குடி கொள்ள முடியும்? என்ற கேள்வி எழலாம்.

பொதுவாக நீதித் துறைக்கு வரக் கூடிய முஸ்லிம்களிடம் இஸ்லாமிய சிந்தனையை விட மதச் சார்பற்ற சிந்தனை தான் மேலோங்கி நிற்கும். இவரது சக நீதிபதிகளிடம் பற்றி எரிகின்ற இந்து மத சிந்தனை போல், இவரிடம் இஸ்லாமிய சிந்தனை பற்றி எரியா விட்டாலும் பரவாயில்லை. இஸ்லாத்தைப் பற்றி ஒரு துளியளவு சிந்தனை கூட இவரிடம் இல்லை.

சராசரி மனிதனிடம் இருக்க வேண்டிய நியாய உணர்வு, நீதி நெறி கூட இல்லை. மாறாக இந்துத்துவா வாசனையே வீசுகின்றது. அவருடைய பகுத்தறிவும் மழுங்கிப் போயிருக்கின்றது.

இல்லாவிட்டால், கிருத யுகத்தில் (அதாவது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) அல்லது திரேதா யுகத்தில் (13 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு) பிறந்ததாகச் சொல்லப்படுகின்ற ராமர் என்பவர், பாபரி மஸ்ஜிதின் அரைக் கோள வடிவ கோபுரத்தின் கீழே தான் பிறந்தார் என்று தீர்ப்பளிக்க முடியுமா?

எனவே இவர் நிச்சயமாக முஸ்லிமாக இருக்க முடியாது. இந்துத்வா வெறியர்களில் இவரும் ஒருவர். நாளைக்கே இவருக்கும் சங் பரிவார்கள் பாராட்டு விழா நடத்தலாம்.

இந்திய அரசியல் சாசனத்தைத் தூக்கியெறிந்து விட்டு, மதச் சார்பின்மையையும் மறந்து விட்டு, இந்து மதத்தின் நம்பிக்கை அடிப்படையில் இந்த மூன்று நீதிபதிகளும் தீர்ப்பளித்திருக்கின்றனர்.

ஒரு மத நம்பிக்கையைக் களத்திற்குக் கொண்டு வந்து விட்டதால் அந்த நம்பிக்கையைக் குறுக்கு விசாரணை செய்வது நமது கடமையாகும். அந்தக் குறுக்கு விசாரணையில் இறங்குவதற்கு முன் இந்த வழக்கின் மனுதாரர்களை சற்று பார்த்துக் கொள்வோம்.

ஜனவரி 16, 1950 அன்று கோபால் சிங் விஷாரத் என்பவர் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் “1949ல் பள்ளிவாசலில் வைக்கப்பட்ட சிலைகளை அகற்றக் கூடாது’ என்று ஓர் உத்தரவு கோருகின்றார்.

டிசம்பர் 5, 1950 அன்று மஹாந்த் பரமஹன்ஸா ராமச்சந்திர தாஸ் என்பவர், பள்ளிவாசலில் வைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு, தொடர்ந்து பூஜை செய்ய பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் ஓர் உத்தரவைக் கேட்கின்றார்.

டிசம்பர் 17, 1950 அன்று சர்ச்சைக்குரிய பகுதியை அரசாங்க ரிசீவரிடமிருந்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிர்மோஹி அகாரா என்ற அமைப்பு பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் கோரியது.

டிசம்பர் 18, 1961 அன்று உத்தர பிரதேச சுன்னத் ஜமாஅத் மத்திய வக்ஃபு வாரியம் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில், பள்ளிவாசல் தனக்குரியது என்பதற்கான விளம்புகைப் பரிகாரம் மற்றும் அனுபவ பாத்தியதை (உங்ஸ்ரீப்ஹழ்ஹற்ண்ர்ய் & டர்ள்ள்ங்ள்ள்ண்ர்ய்) கோரி வழக்கு தொடுத்தது.

மேலே கூறப்பட்ட நான்கு வழக்குகளும் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுப் பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.

ஐந்தாவதாக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றது. இது தான் நாம் குறுக்கு விசாரணை செய்யப் போகும் வழக்காகும்.

இவ்வழக்கின் வாதி பகவான் ராம் லல்லா விராஜ்மான் (குழந்தை ராமர்)

இவ்வழக்கு மட்டும் 1989ல் நேரடியாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றது. (குழந்தை ராமர் கடவுள் என்பதால் அவருக்குக் கீழ் கோர்ட்டு பிடிக்காது போலும். அதனால் நேரடியாக உயர் நீதிமன்றத்திற்கு வந்து விட்டார்.)

இவ்வழக்கின் வாதிகள் மொத்தம் நான்கு பேர்.

முதல் வாதி: பகவான் ராம் லல்லா விராஜ்மான் (குழந்தை ராமர்)

இரண்டாம் வாதி: ஆஸ்தான் ஸ்ரீ ராம ஜன்ம பூமி (ராமர் பிறந்த இடம்)

மூன்றாம், நான்காம் வாதிகள்: கடவுளின் அடுத்த நண்பர் மற்றும் பாதுகாவலர் தியோகி நந்தன் அகர்வால்.

(1989ல் கடவுளே ஏன் நேரடியாகக் களத்தில் குதித்தார், வாதியாக ஆனார் என்பதன் ரகசியம் பின்னர் விளக்கப்படவுள்ளது.)

இங்கு தான் முஸ்லிம்களாகிய நாம் எங்களின் பகுத்தறிவுத் தந்தை, ஏகத்துவத்தின் தலைவர் இப்ராஹீம் (அலை) அவர்களின் பாணியில் சில கேள்விகளை எழுப்புகிறோம். குழந்தை ராமரை குறுக்கு விசாரணை செய்கிறோம்.

நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன?” என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்ட போது, “எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்என்று அவர்கள் கூறினர்.

நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்என்று அவர் கூறினார்.

நீர் உண்மையைத் தான் கூறுகிறீரா? அல்லது விளையாடுகிறீரா?” என்று அவர்கள் கேட்டனர்.

அவ்வாறில்லை. வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன்என்று அவர் கூறினார்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் திரும்பிச் சென்ற பின் உங்கள் சிலைகளை உடைப்பேன்” (என்றும் கூறினார்)

அவர்கள் பெரிய சிலையிடம் திரும்ப வர வேண்டும் என்பதற்காக, அவற்றில் அதைத் தவிர மற்றவற்றை அவர் துண்டு துண்டாக்கினார்

அல்குர்ஆன் 21:52-58

சிலைகளை உடைத்தவர் யார்? என்று அந்த மக்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. தன்னை இப்ராஹீம் தான் உடைத்தார் என, ஒன்றும் பேசாத பொம்மைகள் – ஊமை தெய்வங்களாலும் காட்டிக் கொடுக்க முடியவில்லை.

நமது கடவுள்களை இவ்வாறு செய்தவன் யார்? அவன் அநீதி இழைத்தவன்என்று அவர்கள் கூறினர்.

ஓர் இளைஞர் அவற்றை விமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார்எனக் கூறினர்.

அல்குர்ஆன் 21:59-60

இப்போது இப்ராஹீமிடம் விசாரணை நடைபெறுகின்றது.

இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?” என்று அவர்கள் கேட்டனர்.

அதற்கவர், “இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!என்று அவர் கூறினார்.

உடனே விழிப்படைந்து “நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்என்று தமக்குள் பேசிக்கொண்டனர்.

பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, “இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!என்றனர்.

அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும் தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா?” என்று கேட்டார்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?” (என்றும் கேட்டார்.)

அல்குர்ஆன் 21:62-67

இப்ராஹீம் (அலை) அவர்கள் அந்தச் சிலைகளை உடைப்பதற்கு முன்னால் அவற்றிடம் பேசுகின்றார்; சில கேள்விகளைக் கேட்கிறார். அதற்கு அந்தச் சிலைகளால் பதில் சொல்ல முடியவில்லை.

அவர்களின் கடவுள்களிடம் சென்று “சாப்பிட மாட்டீர்களா? ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்? உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்.

அல்குர்ஆன் 37:91-92

உடைப்பதற்கு முன்பும் பதில் பேச முடியவில்லை. உடைத்த பின்னரும் பேசவில்லை.

இப்போது இதே பாணியில், ராமர் சிலையை நீதிமன்றத்தின் விசாரணை கூண்டிற்குக் கொண்டு வாருங்கள். “நீ இங்கு தான் பிறந்தாயா?’ என்று கேள்வி எழுப்புகிறோம்; குறுக்கு விசாரணை செய்கிறோம்; கோட்டம் எடுக்கிறோம்.

“நான் இங்கு தான் பிறந்தேன்’ என்று சொல்லி விட்டால், மறு வார்த்தை எதுவும் பேசாமல் அப்படியே, அங்கேயே பாபரி மஸ்ஜித் பிரச்சனையைப் போட்டு விட்டுப் போய் விடுவோம். எங்கள் கைகளாலேய அந்த இடத்தில் மஸ்ஜிதுக்குப் பதிலாக மந்திரைக் கட்டித் தருகிறோம்.

இதற்கு 60 ஆண்டு கால அவகாசம் தேவையில்லை. இன்னும் சொல்லப் போனால் 1885லிருந்து பார்த்தால் 125 ஆண்டுகள் ஆகின்றன.

நிச்சயமாக ராமர் சிலை பேசாது என்று உங்களுக்கு நன்கு தெரியும். அதனால் தான் கடவுளின் நண்பர் என மூன்றாவது வாதியாக அவதாரம் எடுத்துள்ளீர்கள். இப்படிப் பேசத் தெரியாத ஒரு சிலை, பேசத் தெரிந்த உங்களுக்குக் கடவுளாக இருக்க முடியுமா? என்று சிந்தியுங்கள்.

அது ஒரு சக்தியுள்ள கடவுளாக இருந்தால் அதற்கு எதற்குக் காவல்துறை, நீதித்துறை தேவைப்படுகின்றது என்று சிந்தியுங்கள்.

இப்படி சக்தியில்லாத ஒரு கடவுள் உங்களுக்குத் தேவை தானா? சங் பரிவார்களே சிந்தியுங்கள்.

ஆனால் அதே சமயம் முஸ்லிம்களைப் பார்த்து இப்படிக் கேள்வி எழுப்ப முடியாது. காரணம், முஸ்லிம்கள் இறைவனை நீதிமன்றத்தில் வாதியாக நிறுத்தவில்லை, நிறுத்த மாட்டார்கள்.

கடவுளின் ஆலயங்கள் கடவுளின் தேவைக்காகக் கட்டப்படுவதில்லை. மனிதர்கள் கடவுளை வழிபடுவதற்காகக் கட்டிக் கொள்பவை தான். அவற்றை மனிதர்கள் தங்கள் கைகளால் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் தான் முஸ்லிம்கள் என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

உங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக இப்படி ஒரு சதி செய்து முஸ்லிம்களிடமிருந்து பள்ளியை ஆக்கிரமித்து அபகரித்திருக்கின்றீர்கள். அதற்குப் பதிலாக முஸ்லிம்கள் தங்கள் நம்பிக்கை அடிப்படையில் இந்தச் சிந்தனை ரீதியிலான கேள்விகளை இந்தியாவில் முன்வைக்கப் போகிறார்கள்.

இந்தக் கேள்விக்கு அவர்கள் அளிக்கப் போகும் ஒரே பதில் அவர்கள் முஸ்லிம்களாக ஆவது தான். அதற்குத் தான் அலகாபாத் உயர் நீதிமன்றம் அடிக்கல் நாட்டியுள்ளது என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறோம். இதன் மூலம் இனி இந்தியா இஸ்லாமிய மயமாகும், இஸ்லாமிய வயமாகும். எதிர்கால இந்தியா இஸ்லாமிய இந்தியா. இந்த ஜோதியை நீங்கள் ஒரு போதும் ஊதி அணைக்க முடியாது.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.

அல்குர்ஆன் 61:8

கோர்ட்டுக்கு வந்த குழந்தை ராமர்

பாபரி மஸ்ஜித் தொடர்பான வழக்கில், பகவான் ராமரே ஒரு வாதியாக வந்து நீதிமன்றத்தில் நின்றார். சிலைகள் வாதியாக வருவது, அதாவது சிலைகளை வாதியாக ஆக்குவது ரோமர்களின் சட்டத்தில் இருந்தது. அவர்களிடமிருந்து அதை அப்படியே இந்தியர்கள் இரவல் வாங்கிக் கொண்டார்கள்.

இவ்வழக்கில் ராமர் ஏன் வாதியானார்? எதற்காக வந்தார்? எப்போது வந்தார்? இந்த ஊமை தெய்வம் ஏன் உள்ளே வந்தது? இங்கு தான் ஒரு மர்மமே புதைந்து கிடக்கின்றது. ஓர் உண்மை ஒளிந்து கொண்டிருக்கின்றது. அந்த மர்மத்தை இப்போது தோண்டுவோம்.

டிசம்பர் 22-23, 1949 அன்று நள்ளிரவில் பாபரி மஸ்ஜிதின் வளாகத்திற்குள் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரது சிலைகள் கொண்டு வந்து வைக்கப்படுகின்றன. அவ்வாறு வைக்கப்பட்டதிலிருந்து டிசம்பர் 6, 1992 அன்று பள்ளி உடைக்கப்பட்டது வரை “மத நம்பிக்கை’ என்ற போர்வையில் மலிவான அரசியல் ஆதாயமே ஒளிந்திருந்தது.

சிலைகளை அகற்றும்படி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தும், அப்போதைய பைசாபாத் மாவட்ட அதிகாரி, துணை ஆணையர் கே.கே. நய்யார், “பெரும்பான்மை சமுதாயத்தின் நம்பிக்கை இதன் பின்னணியில் இருக்கின்றது. அதைக் குறைத்து மதிப்பிட முடியாது’ என்று மேலிட உத்தரவை உதாசீனப்படுத்தினார்; உதறித் தள்ளினார். இவர் தான் இந்த அக்கிரமங்கள், அநியாயங்கள் அனைத்திற்கும் அடித்தளமாக அமைந்தவர்.

இந்த நிகழ்விற்குப் பின்னர் இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அங்கமான பாரதிய ஜன சங்கில் இணைந்து கொண்டார். மத நம்பிக்கை என்று இவர் குறிப்பிட்டது போலித்தனமானது, பொய்யானது என்பதையும், முழுக்க முழுக்க அரசியல் ஆதாயத்தை நோக்கமாகக் கொண்டது என்பதையும் இவரது இந்த நடவடிக்கை தோலுரித்துக் காட்டியது.

கடிதம் எழுதிய நேரு

அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தச் சம்பவம் குறித்து தனது வேதனையையும் வருத்தத்தையும் தெரிவித்துப் பல தொடர் கடிதங்களை வரைந்தார். துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேல், கவர்னர் ஜெனரல் சி. ராஜகோபாலாச்சாரி, உ.பி. முதலமைச்சர் கோவிந்த வல்லப பந்த், தனது நண்பர் கே.ஜி. மஷ்ருவாலா ஆகியோருக்கு எழுதிய கடிதங்கள் அவற்றில் அடங்கும்.

டிசம்பர் 26, 1949 அன்று பிரதமர் நேரு, உ.பி. முதல்வர் கோவிந்த வல்லப பந்துக்கு ஒரு தந்தி அனுப்பினார்.

சிலைகளை பள்ளியில் கொண்டு வைத்தது பெரும் தீய விளைவுகளை ஏற்படுத்துகின்ற மிகக் கெட்ட முன் மாதிரியாகும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

மார்ச் 5, 1950ல் மஷ்ருவாலாவுக்கு எழுதிய கடிதத்தில், “பைசாபாத் மாவட்ட அதிகாரி முறை தவறி, கட்டுப்பாட்டை இழந்து செயல்பட்டிருக்கின்றார். முதலமைச்சர் இச்செயலை பல்வேறு கட்டங்களில் கண்டித்தாலும் உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அயல்நாடாக ஆன உ.பி.

உ.பி. எனக்கு ஒரு வெளிநாடாகத் தோன்றுகிறது. இதற்கு முன்பு காங்கிரஸின் தூண்களாகத் திகழ்ந்தவர்களின் சிந்தனைகளிலேயே மதவாதம் மிக ஆழமாக ஊடுருவி விட்டதை நான் காண்கிறேன். மதவாதம் என்பது உணர்வு பெற்று எழ முடியாத அளவுக்கு உடலை வெகுவாகப் பாதித்துக் கொண்டிருக்கின்ற பாரிச வாயு! வாத நோய்! இது ஒரு விதத்தில் அரசியல் ஆதாயம். இந்த நோய் விவகாரத்தில் நாம் மிகவும் மெத்தனமாக இருக்கின்றோம்.

இவ்வாறு ஏப்ரல் 17, 1950 அன்று நேரு, உ.பி. முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகின்றார்.

இந்தக் கடிதப் பரிமாற்றங்கள் பாபரி மஸ்ஜித் விவகாரத்தின் பின்னணியில் மத நம்பிக்கை உள்ளது என்ற கருத்தைப் பொய்ப்படுத்துகின்றன. பிரதமர் நேரு வெளிப்படையாகத் தெரிவிப்பது போன்று இது உண்மையில் அரசியல் ஆதாய நோக்கத்துடன் உள்ளூர் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜன சங்க் கட்சியினர் கூட்டாக நடத்திய ஒரு சதித் திட்டம். இந்த அரசியல் ஆதாயத்திற்குத் தான் மதச் சாயம் பூசப்பட்டது. இதை பிரதமர் நேருவே அம்பலப்படுத்தி விடுகின்றார்.

ஆனால் மதச் சாயம் பூசப்பட்ட இந்த அரசியல் ஆதாய சதித் திட்டம் அப்போது வெற்றி பெறாமல் தோல்வியில் முடிந்தது.

இதன் காரணத்தால் நீதிமன்றங்களில் நிலுவையில் நின்ற இந்த வழக்குகள் நிறம் பெறாமல், அரசியல் என்ற சாயம் பரவாமல், அயோத்தியாவைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் இடையில் நடைபெறும் வழக்கு என்ற மட்டத்தில் மட்டும் நின்று கொண்டிருந்தது.

1949ல் தோல்வியுற்ற இந்த சதித் திட்டம் 1989ல் வெற்றி பெற்றது. இதற்குக் காரணம் 1980 வரை நீர்த்துப் போயிருந்த இந்த விவகாரத்திற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் நெருப்பு மூட்ட ஆரம்பித்தது.

1982ல் வி.ஹெச்.பி. ராமர் கோயில் இயக்கத்தைத் தொடங்கியது. இந்தக் கட்டத்தில் பி.ஜே.பி.க்கும் அரசியல் வாழ்வில் பிராண வாயு தேவைப்பட்டது.

அதனால் 1989ம் ஆண்டு ஜூன் மாதம் ஹிமாச்சல் பிரதேசம், பாலாம்பூரில் கூடிய தனது தேசிய செயற்குழுவில், இந்துத்வா தான் தனது அரசியல் லட்சியக் கொள்கை என்றும், ராம ஜென்ம பூமி இயக்கத்தில் பங்கு கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றியது. அதன் பின்னர் அது கச்சை கட்டிக் கொண்டு மிகத் தீவிரமாகக் களத்தில் குதித்தது.

பாபரி மஸ்ஜித் இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்பதை சட்டம், சாட்சியத்தின் மூலம் நிறுவ முடியாது என்பதை அறிந்திருந்த வி.ஹெச்.பி., நீதிமன்றம் மத நம்பிக்கையில் தலையிட முடியாது என்றும், முஸ்லிம்கள் தாங்களாக பாபரி மஸ்ஜித் இடத்தை இந்துக்களுக்கு விட்டுத் தர வேண்டும் அல்லது ராமர் கோயில் கட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியது.

இதற்கிடையில் எதற்கும் முன்னேற்பாடாக நீதிமன்றத்திலேயே கள்ளத்தனமாக ஏதேனும் வழிவகை செய்ய முடியுமா? என்பதையும் யோசிக்க ஆரம்பித்தது. தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்தது.

உயர்நீதி மன்ற வழக்கு எண்: 1

ஜனவரி 16, 1950

கோபால் சிங் விஷாரத் என்பவர் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் “1949ல் பள்ளிவாசலில் வைக்கப்பட்ட சிலைகளை அகற்றக் கூடாது’ என்று ஓர் உத்தரவு கோருகின்றார். இதற்கு நீதிமன்றம் தற்காலிக உறுத்துக் கட்டளை (ஒய்த்ன்ய்ஸ்ரீற்ண்ர்ய்) வழங்கியது. இவ்வழக்குகள் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பின் வழக்கு எண் 1 ஆகி விடுகின்றது.

வழக்கு எண்: 2

டிசம்பர் 5, 1950

மஹாந்த் பரமஹன்ஸா ராமச்சந்திர தாஸ் (இப்போது இவர் உயிருடன் இல்லை) பள்ளிவாசலில் வைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு, தொடர்ந்து பூஜை செய்ய பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் ஓர் உத்தரவைக் கேட்கின்றார்.

இவர் தான் 1949ல் சிலைகளை பள்ளிவாசலில் கொண்டு வைத்தவர். டிசம்பர் 22, 1991ல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அதை இவரே ஒப்புக் கொள்கிறார். ஆனால் ஏதோ ஒரு விரக்தியில் ஆகஸ்ட் 1990ல் இந்த வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்கிறார்.

வழக்கு எண்: 3

டிசம்பர் 17, 1950

நிர்மோஹி அகாரா என்ற அமைப்பு, சர்ச்சைக்குரிய பகுதியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் கோரியது. இது தனது மனுவில் தெரிவித்த வாதம் வித்தியாசமானது; விசித்திரமானது.

  1. பாபரி மஸ்ஜித் என்பது பள்ளிவாசலே இல்லை.
  2. பள்ளிவாசல் கட்ட எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
  3. பள்ளிவாசல் கட்டுவதற்காக எந்த ஒரு கோயிலும் பாபராலோ அல்லது வேறு யாராலுமோ இடிக்கப்படவில்லை.
  4. நினைவில் கொள்ளும் காலம் தொட்டு கோயில் அங்கு தான் இருக்கின்றது.
  5. 1949ல் அங்கு சிலைகளும் கொண்டு வைக்கப்படவில்லை. சிலைகள் அங்கே நிரந்தரமாக இருக்கின்றன.

பாவம் அகாரா! பின்னால் வரும் கால கட்டத்தில் பி.ஜே.பி.யின் அரசியல் ஆதாயத்தைக் கற்பனை கூட செய்து பார்க்காமல் இப்படி ஒரு குதர்க்கமான நிலைப்பாட்டை தனது மனுவில் குறிப்பிடுகின்றது.

வழக்கு எண்: 4

டிசம்பர் 18, 1961

உத்தர பிரதேச சுன்னத் ஜமாஅத் மத்திய வக்ஃபு வாரியம் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில், பள்ளிவாசல் தனக்குரியது என்பதற்கான விளம்புகைப் பரிகாரம் மற்றும் அனுபவ பாத்தியதை (உங்ஸ்ரீப்ஹழ்ஹற்ண்ர்ய் & டர்ள்ள்ங்ள்ள்ண்ர்ய்) கோரி வழக்கு தொடுத்தது.

முஸ்லிம்கள் 1582ஆம் ஆண்டிலிருந்து பாபரி மஸ்ஜிதில் தொழுது கொண்டிருந்தனர். நிர்ப்பந்தமாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் பள்ளிவாசலில் சிலைகளைக் கொண்டு வைத்து தொழுகை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக உறுத்துக் கட்டளை பெற்று சொத்து கையகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இது செல்லாது. இந்தச் சொத்து முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்று விளம்புகைப் பரிகாரம் கேட்டிருந்தனர்.

உயர்நீதிமன்றத்திற்கு மாறிய வழக்குகள்

1989 வரை இந்த வழக்குகள் அனைத்தும் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் தான் இருந்தன. 1989 ஜூலையில் உத்தர பிரதேச அரசின் தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இவை அனைத்தும் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.

அப்போது உ.பி.யில் ஆட்சியில் இருந்தது என்.டி. திவாரியை முதல்வராகக் கொண்ட காங்கிரஸ் அரசு! வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டது.

1989 ஜூன் மாதம் பாரதீய ஜனதா தனது பாலம்பூர் செயற்குழுவில் தனது முழு அரசியல் வேட்டைப் பிராணியாக ராமர் கோயிலைக் கையில் எடுத்துக் கொண்டதால் அரசியல் அணு உலையில் அது கொதி நிலையைத் தாண்டிக் கொதித்தது. சங் பரிவாரங்கள் வழக்குகளின் தன்மைகளைப் பார்த்தன.

நிர்மோகி அகாராவின் மனுவில் காணப்பட்ட விஷயங்கள் தங்களது அரசியல் ஆதாய வேட்டைக்கு, கோட்டையை நோக்கிச் செல்லும் ராஜபாட்டைக்கு வேட்டு வைப்பதாகவும் தங்கள் வெறித்தனத்தை வீரியமிழக்கச் செய்யும் வெற்றுச் சித்தாந்தமாகவும் இருந்ததைக் கண்டது.

இந்தப் போக்கில் போனால் சட்டம், சாட்சியம் எல்லாம் தாங்கள் காணும் ஆட்சிக் கனவை கலைத்து விடும் என்று கருதியது.

நிர்மோகி அகாராவை தன் இஷ்டத்திற்கு ஆட விட்டால் அது தங்களது பிழைப்பில் மண்ணள்ளிப் போட்டு விடும் என்று கருதிய சங் பரிவார் திட்டமிட்டு வழக்கின் தன்மையை, திசையைத் திருப்ப முனைகின்றது.

இந்த வழக்கின் அனைத்து அம்சங்களும் முஸ்லிம்களுக்கு சாதகமாகவே அமைகின்றன. எனவே அவற்றை உடைப்பதற்கு சங் பரிவார்கள் மனுதாரர்களாகச் சேர வேண்டிய நிர்ப்பந்தம்.

இவ்வளவு நாளும் தொடர்ந்து நடக்கும் ஒரு வழக்கில் திடுதிப்பென்று உள்ளே நுழைய முடியாது. அவர்கள் உள்ளே நுழைவதற்குக் கால வரம்பு குறுக்கே வந்து தடைக்கல்லாக நிற்கின்றது.

தடைக் கல்லாக வந்த கால வரம்பு

தன்னிடமிருந்து அபகரிக்கப்பட்ட சொத்தில் ஒருவர் 12 வருடங்களுக்குள்ளாக அதற்கு உரிமை கோரி நீதிமன்றத்தில் ஆட்சேபணை செய்யவில்லை என்றால், எதிரிடை அனுபவம் (ஆக்ஸ்ங்ழ்ள்ங் டர்ள்ள்ங்ள்ள்ண்ர்ய்) என்ற அடிப்படையில் அந்தச் சொத்து அபகரித்தவரிடமே சென்று விடும்.

இதைப் பயந்து தான் வக்ஃப் வாரியம் 1961ஆம் ஆண்டு தன்னையும் ஒரு வாதியாக இவ்வழக்கில் சேர்த்துக் கொண்டது. இப்போது காலம் கடந்து விட்டதால் இதுபோன்ற ஒரு வாய்ப்பு தனக்கு இல்லையே என்று வி.ஹெச்.பி. அடித்துக் கொண்டது.

அப்போது தான் விஹெச்பி என்ற குள்ளநரியின் கள்ள மூளையில் ஒரு சூழ்ச்சி உதயமாகின்றது. குழந்தை ராமரை கோர்ட்டுக்கு இழுத்து விட்டால், அவர் பிறந்த இடத்தையும் கோர்ட்டுக்குக் கூட்டி வந்தால் படச் சுருளை முன்பக்கம் வெட்டி விட்டு ஓட்டுவது போல் காலச் சுருளை முன்பக்கம் கொண்டு சென்று விடலாம்.

இது தான் அதன் மூளையில் உதித்த சூழ்ச்சி! அதுபோல் காலச் சுருளை முன்னால் கொண்டு போய் நிறுத்துகின்றது. எப்படி?

வழக்கு எண்: 5 – முதலாம் மனுதாரர் குழந்தை ராமர்

1989 ஜூலையில் குழந்தை ராமரை வழக்காளியாக, வாதியாகச் சேர்க்கின்றது.

குழந்தை ராமர் என்று சொல்லக் கூடிய காரணம் என்ன? இந்திய அரசியல் சட்டத்தில் மைனர் எனப்படும் பருவ வயதை அடையாதவர்கள் எந்தச் சொத்தையும் வாங்க முடியாது; விற்க முடியாது. வழக்கு தொடர முடியாது; அவர் மேல் வழக்கும் தொடரப்படாது. அதனால் அவருக்குப் பதிலாக அவரது பாதுகாவலர் தான் இந்தக் காரியங்களைச் செய்வார்.

சிலைகள் இந்த நிலையில் தான் இருக்கின்றன. அதனால் வாதிட வருகின்ற இந்தச் சிலைகள் டங்ழ்ல்ங்ற்ன்ஹப் ஙண்ய்ர்ழ் (நிரந்தர குழந்தைகள்) என்ற நிலையிலேயே இருப்பர். அதாவது வயதுக்கு வருதல், பூப்புனித நீராட்டுதல் எல்லாம் அவற்றுக்குக் கிடையாது என்று அர்த்தம்.

பைத்தியக்காரர்களும் முட்டாள்களும் இந்த நிலையில் தான் இருக்கின்றனர் என்பதைக் கால வரம்புச் சட்டம் பிரிவு (6) குறிப்பிடுகின்றது.

இரண்டாம் மனுதாரர் – குழந்தை ராமர் பிறந்த இடம்

ராமர் எப்படி தெய்வமோ அது போன்று அவர் பிறந்த இடமும் ஒரு சிலையாகவோ அல்லது தெய்வமாகவோ ஆகி விடுகின்றது. எனவே அந்த தெய்வம் ஓன்க்ண்ஸ்ரீண்ஹப் டங்ழ்ள்ர்ய்ஹப்ண்ற்ஹ் அதாவது ஓர் ஆளுக்குரிய அனைத்து தகுதிகளையும் படைத்ததாகி விடுகின்றது.

எனவே இந்தத் தெய்வம் பள்ளிவாசல் கட்டுவதற்கு முன்பாக, அதற்கு முன் இருந்ததாக இவர்கள் வாதிடும் கோயில் கட்டுவதற்கு முன்பாக உள்ள கால நிலைக்குப் போய் விடுகின்றது.

படச் சுருளை வெட்டி விடுவது போல், காலச் சுருளிலும் இந்த தெய்வம் முந்தைய நிலைக்குச் சென்று விடுவதால் பாபரி பள்ளியில் சிலைகள் கொண்டு போய் வைக்கப்பட்டனவா? அல்லது வைக்கப்படவில்லையா? என்று வாதத்திற்கே இங்கு இடமில்லாமல் போய் விடுகின்றது. வழக்கு தொடர்ந்து 40 ஆண்டுகள் கழித்து விஹெச்பி இந்த வழக்கின் உள்ளே நுழைவதற்கு வழிவகை செய்யப்படுகின்றது.

மூன்றாம் மனுதாரர்

இவ்விரு தெய்வங்களுக்கும் பாதுகாவலராக (?) கடவுளுக்கு அடுத்த நண்பர் என்ற அடிப்படையில் தியோகி நந்தன் அகர்வால் என்பவர் மனுதாரராகின்றார். இவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர். 1983ல் ஓய்வு பெற்ற பின் இவர் விஹெச்பி அமைப்பின் துணைத் தலைவர்.

பக்தியா? பச்சோந்தித் தனமா?

ஏற்கனவே நான்கு மனுதாரர்கள் இவ்வழக்கில் வழக்காடிக் கொண்டிருக்கும் போது இன்னொரு மனுதாரர் அதே வழக்கில் நுழைய வேண்டுமென்றால் எதிரிடை அனுபவம் என்ற அடிப்படையில் 12 ஆண்டு கால வரம்பிற்குள் வக்ஃப் வாரியம் நுழைந்தது போன்று நுழைய வேண்டும்.

அப்படி ஒரு வாய்ப்பு விஹெச்பிக்கு இல்லாததால், குழந்தை ராமர், அவர் பிறந்த இடம், கடவுளின் காப்பாளர் மற்றும் கடவுளின் நண்பர் என்ற போர்வையில் வழக்கினுள் நுழைகின்றது.

குயுக்தியை பக்தி என்று பகிரங்கமாகப் பகல் வேஷம் போடும் பக்கா அரசியல் அயோக்கியத்தனத்தை நீதிமன்றம் அனுமதிக்கின்றது.

விஹெச்பி இன்னொரு குயுக்தியையும் இந்த வழக்கில் கையாண்டது. அது என்ன?

பாபர் அயோத்திக்கு வந்து ஒரு வார காலம் தங்கி, கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கினார். பின்னர் அந்த இடத்தில் பாபர் பள்ளிவாசலை எழுப்பினார் என்று விக்கிரமாதித்தன் கதையை மிஞ்சும் விசித்திரக் கதையை இயற்றினர். இந்தக் கதையை மையமாக வைத்து பாபரி மஸ்ஜித் என்பது ஒரு பள்ளிவாசலே அல்ல என்ற ஒரு நிலையை எடுத்தனர்.

இவ்வாறு, குழந்தை ராமர் என்றும், பாபரி மஸ்ஜித் என்பது பள்ளிவாசல் அல்ல என்றும் இவ்விரு வாதங்களின் அடிப்படையில் மனுவைத் தாக்கல் செய்கின்றனர். இந்தக் கோமாளித்தனமான மனுவை உயர் நீதிமன்றமும் ஏற்றுக் கொள்கின்றது.

அகாராவின் ஆட்சேபணை

விஹெச்பி இவ்வாறு மனுதாரராக உள்ளே நுழைந்த மாத்திரத்தில் நிர்மோகி அகாரா, நீதிமன்றத்தில் இதற்குப் பதில் மனு தாக்கல் செய்கின்றது.

“இந்த மனு விஷமத்தனமானது. அகாராவைத் துன்புறுத்துவதற்காகவும், அதன் சொத்தை அபகரிப்பதற்காகவுமே இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தியோகி நந்தன் அகர்வால் ஒரு வழிபாட்டாளர் அல்லர். வணங்கும் ஒரு பக்தர் அல்லர். (விஹெச்பியின் கைக்கூலி) அவர் விஹெச்பி மற்றும் ராம் ஜென்ம பூமிய நியாஸ் ஆகியவற்றின் உறுப்பினர்”

இவ்வாறு நிர்மோகி அகாரா தனது பதில் மனுவில் குறிப்பிட்டிருந்தது.

தியோகி நந்தன் அகர்வால் “(பாபரி மஸ்ஜிதில் கைதிகளாக இருக்கும்) சிலைகள் எல்லாம் பொறுமை இழந்து விட்டன. சோம்நாத் கோயிலின் கட்டடக் கலை நிபுணர்கள் அயோத்தியா கோயிலை வடிவமைக்கும் பணியில் இறங்கி விட்டார்கள். அதற்குரிய நாளும் குறிக்கப்பட்டு விட்டது. ராமர் கோயில் இயக்கம் கண்டு வரும் வேகமான எழுச்சியின் காரணமாகவே இம்மனு தாக்கல் செய்யப்படுகின்றது” என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டே வாதிட்டார்.

விஹெச்பியின் அரசியல் சித்து வேலை

இது மத நம்பிக்கையோ, பக்தியின் வெளிப்பாடோ அல்ல! தங்களின் இந்துத்வா வெறியை வளர்ப்பதற்காக நாங்கள் கையில் எடுத்துள்ள அரசியல் சூலாயுதம் தான் இது என்பதை விஹெச்பி தெளிவாக வெளிப்படுத்தியும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அதைக் கண்டு கொள்ளாதது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

விஹெச்பி மற்றும் பிஜேபியின் அரசியல் சித்து விளையாட்டை, எத்து ஏமாற்று வேலையை சுத்தமான பக்தி என்று நீதிமன்றம் எடுத்துக் கொண்டது.

அந்த ஏமாற்றுக்காரர்கள் இட்ட கோட்டிலேயே தீர்ப்பு என்ற பெயரில் இந்தத் திருவாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்பதை இந்தத் தீர்ப்பைப் படிக்கும் போது நம்மால் தெளிவாக அறிய முடிகின்றது.

முஸ்லிம்களுக்குச் சொந்தமானதும், அவர்களுடைய அனுபவத்தில் இருக்கின்றதுமான பாபரி மஸ்ஜிதில் சிலைகளைக் கொண்டு வைத்தது அப்பட்டமான அத்து மீறல், அநியாயச் செயல்! சட்டத்தின் பார்வையில் அது குற்றச்செயல் என்று பதிவாகியுள்ளது.

இந்தச் செயல், முஸ்லிம்கள் அந்தச் சொத்திற்கு (பள்ளிவாசலுக்கு) உள்ளே அனுபவத்தில் இருந்ததையும், சொத்தில் டட்ஹ்ள்ண்ஸ்ரீஹப், ஆஸ்ரீற்ன்ஹப், ப்ங்ஞ்ஹப் – டர்ள்ள்ங்ள்ள்ண்ர்ய் ஆகிய மூன்று நிலைகளிலும் அனுபவப் பாத்தியதையில் முஸ்லிம்கள் இருந்ததையும் தெளிவாக உணர்த்துகின்றது.

இதை ஓய்த்துக் கட்டுவதற்கு நீதிபதி சுதிர் அகர்வால் தன்னுடைய தீர்ப்பில், “ராமர் பிறந்த இடமே ஒரு வழிபடும் தெய்வம். இந்துக்களின் நம்பிக்கை அடிப்படையில் அது ஒரு தனி ஆள் என்ற தகுதி அதற்கு இருக்கின்றது. அந்தத் தெய்வம் இடைவிடாமலும் தொடர்ந்தும் வழிபடப்பட்டு வருவதால், அந்தச் சிலைகளை வெளியிலிருந்து பள்ளிக்குள் கொண்டு வைத்த செயல் (பாபரி மஸ்ஜித் முஸ்லிம்களின் சொத்து என்பதற்கு) பொருத்தமான ஆதாரம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று தெரிவிக்கின்றார்.

தியோகி நந்தன் அகர்வாலின் வழியிலேயே மூளையை அடகு வைத்து விட்டு இந்தத் துரோகி சுதிர் அகர்வாலும் தீர்ப்பளிக்கின்றான்.

இடிப்பிற்குக் கண்டனமா?

1992ல் பள்ளியை இடித்த அக்கிரமத்தை இந்த மூன்று பேரும் கொஞ்சம் கூடக் கண்டு கொள்ளவே இல்லை. சுதிர் அகர்வால் மட்டும் போனால் போகிறது என்று போகிற போக்கில் கொஞ்சம் கண்டிக்கிறார். “ஒரு பெருங்கூட்டம் முற்றிலும் அருவருக்கத்தக்க வகையில் ஒரு பண்பட்ட நாகரிக சமுதாயத்தின் கொள்கைகள், நடைமுறைகளுக்கு மாற்றமாக சர்ச்சைக்குரிய கட்டடத்தை இடித்துத் தள்ளியது” என்று குறிப்பிடுகின்றார்.

இவ்வளவு அழகாகக் கண்டிக்கிறாரே என்று நாம் மகிழ்ச்சியடைவதற்குள் பின்வரும் கருத்தின் மூலம் அந்த மகிழ்ச்சியில் மண்ணள்ளிப் போடுகிறார்.

“வழக்கு எண் 5ல் உள்ள நபர்களை (குழந்தை ராமர், ராமர் பிறந்த இடம், தியோகி நந்தன் அகர்வால் ஆகிய வாதிகள் தான்) இதற்குப் பொறுப்பு என்று முஸ்லிம் பிரதிவாதிகள் குற்றம் சாட்டவில்லை” என்று ஒரு பைத்தியக்காரத்தனமான விளக்கத்தைச் சொல்கிறார். அத்துடன் நின்றாரா?

பள்ளியை இடித்த பாவிகளுக்கு, பள்ளியின் மத்தியில் அமைந்த அரைக்கோள வடிவக் கோபுரத்திற்குக் (உர்ம்ங்) கீழ் உள்ள பகுதியை ஒதுக்குகின்றார்.

கலவரத்தைத் தூண்டி, அதன் பலனை அடைவதற்காகப் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கி இரத்தம் குடித்த தனது செயல் நியாயமானது தான் என்று விஹெச்பி எண்ணி சந்தோஷப்பட வைத்திருக்கின்றார்.

இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியதன் மூலம் இவரும் தியோகி நந்தன் அகர்வாலைப் போல் இந்துத்வாவின் அரசியல் சிந்தனைக்குப் பலியாகி விட்டார் என்பதையே இது தெளிவாகக் காட்டுகின்றது.

நாட்டின் உச்ச நீதிமன்றம் இந்த அவமானத்தைச் சரிப்படுத்துமா?

கோட்டையில் பாபர் குறட்டையில் ராமர்

பாபரி மஸ்ஜித் வழக்கில் குழந்தை ராமர் 1989ல் ஒரு மனுதாரராகச் சேர்ந்ததைக் கண்டோம். எதற்கு? தான் ஜென்மம் எடுத்த இடத்தை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றுவதற்காக?

ராமர் உண்மையில் ஒரு கடவுளாக இருந்திருந்தால் அவர் என்ன செய்திருக்க வேண்டும்? முகலாயர்கள் முதன் முதலில் இந்தியாவுக்கு ஆட்சி செய்ய வரும் போது அவர்களை வர விடாமல் தடுத்திருக்க வேண்டும். அதைச் செய்தாரா? அவரால் அதைச் செய்ய முடியாது என்பதே பதில்.

அதாவது பாபர் கோட்டை ஏறும் போது குழந்தை ராமர் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்.

சரி! இந்தியாவிற்கு வந்து விட்டார். குறைந்தபட்சம் தன்னுடைய இடத்தில் 1528ல் தனது தளபதி மீர்பாகியை வைத்து பள்ளியைக் கட்டும் போதாவது அதைத் தடுத்திருக்க வேண்டும். அதையும் தடுக்கவில்லை.

1885ல் வெள்ளையர்களிடம் வழக்கு வந்தது. அப்போதாவது வெள்ளைக்கார நீதிபதிகளை தனக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்க வைத்திருக்கலாம். அதையும் செய்யத் தவறி விட்டார்.

அதற்குப் பின்னால் நாடு சுதந்திரம் அடைந்தது. 1949ல் தனது சிலைகளை பக்தர்கள் பள்ளியில் கொண்டு வந்து பள்ளியைப் பூட்டி விட்டனர்.

தன்னுடைய சிலைகளை உள்ளே வைத்த பின்னர் பக்தர்களை காவல் நிலையம், நீதிமன்றம் என்று இழுத்தடிக்கமால் அப்போதே பள்ளிவாசலை பூமியில் உள்வாங்கச் செய்திருக்கலாம்.

1949ல் பாபரி மஸ்ஜிதில் பக்தர்கள் கள்ளத்தனமாகத் தனது சிலையைக் கொண்டு வைத்து விட்டு, அவதாரம் எடுத்ததாகக் கதை விட்ட பிறகு நீதிமன்றத்தில் வழக்கு வந்ததும் அதை உடனே முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம். அதையாவது செய்தாரா?

கடைசியாக 1989 வரைக்கும் நீதிமன்றத்தில் ஒரு வாதியாகச் சேர்வதற்கு அவகாசம் எடுத்திருக்கின்றார். அப்படிச் சேர்ந்த பிறகாவது அதை உடனே முடிவுக்குக் கொண்டு வந்தாரா?

21 வருடங்கள் வழக்கு நடத்தியிருக்கிறார். இப்போது தான் தீர்ப்பு கிடைத்திருக்கின்றது. இந்தத் தீர்ப்பாவது திருப்தியான தீர்ப்பா என்றால் அதுவும் கிடையாது.

காரணம், மூன்றில் ஒரு பங்கு தனது நேரடி எதிரியான முஸ்லிம்களுக்குப் போய் சேருகின்றது.

இதிலிருந்து நாம் அறிவது, ராமர் ஒரு சக்தியுள்ள ஒரு கடவுள் கிடையாது. எவ்வித சக்தியுமில்லாத வெறும் பாண்டம். தன்னையும் காக்காமல் தன்னை நம்பியவர்களையும் காக்க முடியாத வெறும் கற்பனைப் பாத்திரம். இவரையே இவரது பக்தர்கள் தான் காக்க வேண்டும்.

இரவோடு இரவாகப் பள்ளியில் நுழைந்து சிலைகளை வைப்பது முதல் கள்ளத்தனமாகக் குழந்தை ராமர் என்ற பெயரில் வழக்கு நடத்துவது உள்ளிட்ட அனைத்தையும் பக்தர்கள் தான் செய்ய வேண்டும். இவரால் தனது பக்தர்களுக்கு உதவ முடியாது.

இதோ அல்லாஹ் சொல்கிறான்:

தமக்கு உதவி செய்யப்பட அல்லாஹ்வையன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். அக்கடவுள்களுக்கு இவர்களே (இவ்வுலகில்) முதன்மைக் காவலர்களாக இருக்க அக்கடவுள்களோ இவர்களுக்கு உதவ இயலாது.

அல்குர்ஆன் 36:74, 75

இது தான் இந்தக் கடவுளர்களின் நிலை. இவற்றை வணங்கும் பக்தர்கள் சிந்திப்பார்களா?