கொலைக் குற்றத்திலும் ஓர் எளிய சலுகை

கொலைக் குற்றத்திலும் ஓர் எளிய சலுகை

உலக நாடுகளிலுள்ள சட்டங்கள் அனைத்தும் கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கொடுக்கின்றன. இந்தத் தண்டனையை அரசாங்கமே நிறைவேற்றுகின்றது.

ஆனால் இஸ்லாம் மார்க்கம் மட்டுமே இந்த உரிமையை பாதிக்கப் பட்டவர்களின் குடும்பத்தாரிடம் கொடுக்கின்றது. குற்றவாளியைத் தண்டிப்பதும், மன்னிப்பதும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைப் பொறுத்தது என்று தெளிவாக அறிவித்து விடுகின்றது.

நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன், அடிமைக்காக (கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப் பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (நஷ்ட ஈடு) அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

அல்குர்ஆன் 2:178

இப்போது கொலையுண்டவரின் குடும்பத்தினர், கொலையாளியை மன்னித்து விட்டால், அதற்காக ஈட்டுத் தொகை வாங்கிக் கொண்டு விடுதலை செய்யச் சொல்கிறது. இதை இறைவன் நமக்கு எளிமையாக்கிய அருட்கொடை என்று கூறுகிறான்.

குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்று உலகுக்கு உணர்த்தி நிற்கின்றது.