கிரகணமும் கியாமத்தும்

கிரகணமும் கியாமத்தும்

வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி நிகழவிருக்கின்ற கங்கண சூரிய கிரகணம் பற்றிய அறிவியல் விளக்கங்களைக் கண்டோம். இப்போது இதில் மார்க்கம் தொடர்பான விளக்கத்தைப் பார்ப்போம்.

இஸ்லாம் கிரகணத்தைப் பற்றி என்ன கூறுகின்றது?

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அந்நாளில் நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் இறந்து விட்டிருந்தார். உடனே மக்கள், இப்ராஹீம் இறந்ததால் தான் சூரியனுக்குக் கிரகணம் பிடித்து விட்டது என்று பேசினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அந்த அறியாமையைக் களைந்தெறிகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அன்றைய தினத்தில் (நபியவர்களின் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) இறந்தார். இதையொட்டி மக்கள் “இப்ராஹீமின் இறப்புக்காகத் தான் கிரகணம் ஏற்பட்டதுஎன்று பேசிக் கொண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகüல் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, அவற்றை நீங்கள் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; தொழுங்கள்!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஃகீரா பின் ஷுஅபா (ரலி), நூல்: புகாரி 1043

இஸ்லாம் ஒரு பகுத்தறிவு மார்க்கம் என்பதற்கு நபி (ஸல்) அவர்களின் இந்த விளக்கம் சான்றாக அமைந்துள்ளது. கிரகணம் பற்றி மக்கள் தங்கள் அறியாமையை வெளிப்படுத்தும் போது, நபி (ஸல்) அவர்கள் அந்த அறியாமை இருளை நீக்கி, கிரகணம் என்பது யாருடைய மரணத்துக்காகவும் நிகழ்வதில்லை, அது இறைவனின் ஏற்பாடு என்பதை உணர்த்துகின்றார்கள்.

முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்பதற்கும் இந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் ஒரு சாதாரண மனிதராக இருந்து, மக்கள் இவ்வாறு பேசியிருந்தால் அதைத் தமது தூதுத்துவத்திற்கு ஆதாரமாக ஆக்கியிருப்பார்கள். நபியின் மகன் இறந்து விட்டான்; அதனால் கிரகணம் பிடித்து விட்டது என்று மக்களே பேசிக் கொள்ளும் போது அதைத் தடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்கள் பலர், இயற்கை நிகழ்வுகளைக் கூடத் தங்கள் அற்புதம் என்று வாதிப்பதைப் பார்க்கிறோம்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள், இதை அற்புதம் என்று வாதிடுவதற்கு எல்லா வாய்ப்புகளும் இருந்தும், மக்களே இதை அற்புதம் என்று சொன்ன போதும் நபியவர்கள் உண்மையான இறைத் தூதர் என்பதால் அவ்வாறு போலியான தகுதியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

கிரகணம் ஏற்படுவதற்கும் தமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, அது இறைவனின் மாபெரும் அத்தாட்சிகளான சூரியனும் சந்திரனும் ஒரே நேர்க் கோட்டில் வரும் நிகழ்வு என்பதைச் சுட்டிக் காட்டுகின்றார்கள். அவர்கள் இறைத் தூதர் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது.

இறைவன் விடுக்கும் எச்சரிக்கை

சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் உலக முடிவு நாள் வந்து விட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்றவர்களாக எழுந்து பள்üக்குச் சென்றார்கள்.

நிலை, ருகூஉ, சஜ்தா ஆகியவற்றை நீண்ட நெடிய நேரம் செய்து தொழுதார்கள். நான் ஒருபோதும் அவர்கள் அவ்வாறு செய்யக் கண்டதில்லை. (தொழுகை முடிந்ததும்), அல்லாஹ் அனுப்பிவைக்கும் இந்த அடையாளங்கள் எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் ஏற்படுபவை அல்ல. எனினும் அல்லாஹ் தன் அடியார்களை இவற்றின் மூலம் எச்சரிக்கவே செய்கிறான். இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் அவனை நினைவு கூர்வதிலும் அவனிடம் பிரார்த்திப்பதிலும் அவனிடம் பாவமன்னிப்புக் கோருவதிலும் நீங்கள் கவனம் செலுத்துங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி), நூல்: புகாரி 1059

உண்மையில் நபி (ஸல்) அவர்கள் அஞ்சியது போல் கிரகணம் என்பது ஒரு குட்டி கியாமத் நாளாகத் தான் அமைகின்றது. கொம்புள்ள இரண்டு ஆடுகள் கால் முட்டிகளைத் தூக்கிக் கொண்டு முட்டுவதற்கு ஆயத்தமாகி நிற்பது போல் மூன்று கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் நிற்கின்றன.

வானம் பிளக்கும் போது எண்ணையைப் போல் சிவந்ததாக ஆகும்.

அல்குர்ஆன் 55:37

சந்திர கிரகணத்தின் போது வெண்ணிலவு சிவந்து எரிவது போன்று வானம் எங்கும் சிவப்பு வண்ணம் தெளிக்கப்பட்டது போல் காட்சியளிக்கின்றது. இது கியாமத் நாளை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துவது போன்றுள்ளது.

கங்கண சூரிய கிரகணத்தின் போது, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நெருப்பு பற்றி எரிவது போல் தோன்றுகின்றது. ஏதோ மறு நொடியில் மறுமை துவக்கம் அமைந்து விடுமோ என்பது போன்ற ஒரு கோர பயம் நம்மை ஆட்கொள்கின்றது.

கியாமத் நாள் வரை இரவை உங்களுக்கு அல்லாஹ் நிரந்தரமாக்கி விட்டால் அல்லாஹ்வையன்றி உங்களுக்கு ஒளியைக் கொண்டு வரும் இறைவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! செவியுற மாட்டீர்களா?” என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 28:71)

இந்த வசனத்தில் அல்லாஹ் நம்மை அச்சுறுத்துவது போன்று, பூமியில் விழும் நிழலைத் தொடரச் செய்து விட்டால் அவனைத் தவிர வேறு யார் வெளிச்சத்தைத் தர முடியும்?

நபிகள் நாயகம் கண்ட நரகக் காட்சி

அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (தொழுது கொண்டிருக்கையில்) இதோ இந்த இடத்தில் எதையோ பிடிக்க முயன்றதைக் கண்டோம். பிறகு (அந்த முயற்சியிலிருந்து) பின்வாங்கியதையும் கண்டோமே! (அது ஏன்?)” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் “சொர்க்கத்தைக் கண்டேன்அல்லது “சொர்க்கம் எனக்குக் காட்டப்பட்டது‘. அதிலிருந்து (பழக்) குலையொன்றை எடுக்க முயன்றேன். அதை நான் எடுத்திருந்தால் இந்த உலகம் உள்ளவரை நீங்கள் அதிலிருந்து புசித்திருப்பீர்கள்.

மேலும் நான் நரகத்தையும் கண்டேன். இன்றைய தினத்தைப் போல (ஒரு பயங்கரமான) காட்சி எதையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை. மேலும், நரகவாசிகüல் அதிகமாகப் பெண்களையே கண்டேன்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 5197

நபி (ஸல்) அவர்கள் இந்தக் கிரகண நாளில் சுவனம் மற்றும் நரகத்தின் காட்சிகளை நேரடியாகவே கண்ட காட்சி, உண்மையில் கிரகணம் கியாமத் மற்றும் மறுமை உலகை அடியார்கள் ஒரு கணம் தங்கள் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துவதற்காகத் தான் என்று தெளிவாக விளங்குகின்றது.

அனைத்தையும் கண்ட அல்லாஹ்வின் தூதர்

நீங்கள் நுழையவிருக்கின்ற (மறுமை வெளி, சொர்க்கம் மற்றும் நரகம் உட்பட) அனைத்தும் எனக்குக் காட்டப்பட்டன. எனக்குச் சொர்க்கம் காட்டப்பட்ட போது அதிலிருந்த பழக் குலையொன்றை நான் எட்டிப் பிடிக்கப் போனேன். ஆனால், எனது கைக்கு எட்டவில்லை. எனக்கு (இத்தொழுகையின்போது) நரகமும் காட்டப்பட்டது. அதில் பனூ இஸ்ராயீல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு பூனையின் காரணத்தால் வேதனை செய்யப்படுவதை நான் பார்த்தேன். அவள் தனது பூனைக்குத் தீனி போடாமல் கட்டிப் போட்டு வைத்திருந்தாள். அவள் அதை பூமியிலுள்ள புழுப்பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை. (இதன் காரணமாகவே அவள் நரகம் சென்றாள்.) மேலும், நரகத்தில் நான் அபூஸுமாமா அம்ர் பின் மாலிக் என்பவரையும் பார்த்தேன். அவர் நரகத்தில் தனது குடலை இழுத்த வண்ணம் சென்று கொண்டிருந்தார். மக்கள் “ஒரு மாமனிதர் (அல்லது தலைவரின்) மரணத்திற்காகவே சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுகிறதுஎன்று கூறுகின்றனர். (ஆனால்) அவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். அவற்றை உங்களுக்கு இறைவன் காண்பிக்கிறான். அவற்றுக்குக் கிரகணம் ஏற்பட்டால் வெளிச்சம் வரும்வரை நீங்கள் (இறைவனைத்) தொழுங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 1508

கிரகணத்தின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆற்றிய உரையில், பூனைக்கு இழைக்கப்பட்ட அநீதி, ஹாஜிகளிடம் செய்த திருட்டு உட்பட சமுதாயத்திற்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்து, அனைத்துப் பாவங்களுக்கும், தீமைகளுக்கும் உரிய தண்டனையும் அத்தொழுகையில் கண்டதாகக் குறிப்பிடுவது நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றது.

திகிலடைந்த திருத்தூதர்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆற்றிய கிரகண அதிர்ச்சி உரையில் தொடர்ந்து கூறியது:

முஹம்மதின் சமுதாயத்தாரே! தன் அடியார்களில் ஆணோ பெண்ணோ யார் விபசாரத்தில் ஈடுபட்டாலும் (அதைக் கண்டு)  கடுமையாக ரோஷம் கொள்பவர் அல்லாஹ்வைவிட வேறெவருமிலர். முஹம்மதின் சமுதாயத்தாரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அறிவதையெல்லாம் நீங்களும் அறிந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள். நான் (சொல்ல வேண்டியதைச்) சொல்லிவிட்டேன் அல்லவா?

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1499

கிரகணத்தைக் கண்டு பயந்த நபி (ஸல்) அவர்கள் பயணமே சொல்லி விட்டார்கள் என்றால் கிரகணம் என்பது ஒரு குட்டி கியாமத் என்று தான் நாம் விளங்க முடிகின்றது.

கப்ர் வேதனையைப் பற்றிய எச்சரிக்கை

எனக்கு இதுவரை காட்டப்பட்டிராத அனைத்தையும் (இந்த) இடத்தில் (தொழுகையில் இருந்தபோது) கண்டேன். சொர்க்கம், நரகம் உட்பட (அனைத்தையும் கண்டேன்). மேலும் எனக்கு இறைவனின் தரப்பிலிருந்து (வஹீ) அறிவிக்கப்பட்டது:

நீங்கள் உங்கள் மண்ணறைகளுக்குள் (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனைக்கு “நிகரானஅல்லது “நெருக்கமானஅளவிற்கு சோதிக்கப்படுவீர்கள்.

அப்போது (கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவரிடம்) “இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?” என்று (நபியாகிய என்னைப் பற்றிக்) கேட்கப்படும். அப்போது “இறை நம்பிக்கையாளர்அல்லது “உறுதிகொண்டவர்‘ “இவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) ஆவார்கள்; அன்னார் எங்களிடம் தெளிவான சான்றுகளையும் நேர்வழியையும் கொண்டு வந்தார்கள்; நாங்கள் (அவரது அழைப்பை) ஏற்றோம்; அவர்களைப் பின்பற்றினோம்; இவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தாம்என்று மும்முறை கூறுவார். அப்போது (கேள்வி கேட்ட வானவர்களின் தரப்பிலிருந்து) “தகுதி பெற்றவராக நீர் (நிம்மதியாக) உறங்குவீராக!என்றும் “நிச்சயமாகவே நீர் (இறைத் தூதரான) இவரைப் பற்றி இத்தகைய உறுதியான நம்பிக்கையுடையவராகவே (உலகில்) இருந்தீர் என்று நாமறிவோம்என்றும் கூறப்படும். “நயவஞ்சகனோஅல்லது “சந்தேகப் பேர்வழியோ‘, “எனக்கு எதுவும் தெரியாது; மக்கள் அவரைப் பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருக்கக் கேட்டிருக்கிறேன். எனவே நானும் அது போன்று கூறினேன்என்பான்.

அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி), நூல்: புகாரி 86, 184

கிரகணமும் வணக்கமும்

அறிவியலாளர்கள் கண் கொள்ளாக் காட்சி என்று கேமராக்களையும் வீடியோக்களையும் தூக்கிக் கொண்டு சூரிய, சந்திர கிரகணங்களைப் படம் பிடிக்க பேயாய் அலைகின்றனர். சிலர் விமானத்தில் பயணம் செய்து விமானத்தில் இருந்தவாறே கிரகணத்தை கேமராக்களுக்குள் விழுங்குகின்றனர்.

இப்படி ஒரு சாரார் ஆய்வில் இறங்கியிருக்கும் போது மற்றொரு சாரார் சூரிய, சந்திர கிரகணங்களை ஏதோ ஒரு வான வேடிக்கை போல் உல்லாசப் பார்வையில் இறங்கி விடுகின்றனர். மூன்றாவது சாரார் ஒரு விதமான பயத்திலும் மூட நம்பிக்கையிலும் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.

ஆனால் இஸ்லாம் மறுமையை நினைவுபடுத்துகின்ற மாபெரும் நிகழ்வுகள் என்பதை மனித குலத்தின் மனதில் பதிய வைத்து அந்நாளில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடச் சொல்கின்றது.

அப்போது செய்ய வேண்டிய வணக்கங்கள் என்னென்ன என்ற பட்டியலையும் விரிவாகத் தருகின்றது.

  1. விரைந்து பள்ளிக்கு வருதல்

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் இருந்து கொண்டிருந்தோம். அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து தமது மேலாடையை இழுத்துக் கொண்டே பள்üவாசலுக்குள் சென்றார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி), நூல்: புகாரி 1040

  1. தொழுகை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகüல் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, அவற்றை நீங்கள் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; தொழுங்கள்!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஃகீரா பின் ஷுஅபா (ரலி), நூல்: புகாரி 1043

நபி (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்üவாசலுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் மக்கள் அணிவகுத்து நின்றனர். நபி (ஸல்) அவர்கள் “தக்பீர் (தஹ்ரீமா)கூறி, நீண்ட நேரம் ஓதினார்கள். பிறகு தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பின்னர் “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்‘ (அல்லாஹ் தன்னைப் புகழ்ந்தோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) என்று கூறி நிலையில் நின்றார்கள். சஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் ஓதினார்கள். ஆனால் இது முதலில் ஓதியதை விடக் குறைந்த நேரமே அமைந்திருந்தது. பிறகு தக்பீர் கூறி ருகூஉச் செய்தார்கள். இந்த ருகூஉ முதல் ருகூஉவை விடக் குறைந்த நேரமே அமைந்திருந்தது. பின்னர் “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வல(க்)கல் ஹம்துஎன்று கூறி (நிமிர்ந்து) விட்டு, சஜ்தாச் செய்தார்கள்.

பிறகு இதுபோன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள்.- அப்போது நான்கு சஜ்தாக்(கள் கொண்ட இரண்டு ரக்அத்)கüல் நான்கு ருகூஉகள் செய்து முடித்தார்கள். அவர்கள் தொழுகையை முடிப்பதற்கு முன் (கிரகணம் விலகி) வெüச்சம் வந்து விட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் எழுந்து இறைவனை அவனுக்குத் தகுதியான குணங்களைக் கூறிப் போற்றி(ய பின் உரை நிகழ்த்தி)னார்கள். அவர்கள், “(சூரியன், சந்திரன்) இவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகüல் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணங்கள் ஏற்படுவதில்லை. அவற்றை நீங்கள் கண்டால் தொழுகையில் கவனம் செலுத்துங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1046

  1. இறைவனை நினைவு கூர்தல், பிரார்த்தனை, பாவமன்னிப்பு

அல்லாஹ் அனுப்பி வைக்கும் இந்த அடையாளங்கள் எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் ஏற்படுபவை அல்ல. எனினும் அல்லாஹ் தன் அடியார்களை இவற்றின் மூலம் எச்சரிக்கவே செய்கிறான். இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் அவனை நினைவு கூர்வதிலும் அவனிடம் பிரார்த்திப்பதிலும் அவனிடம் பாவமன்னிப்புக் கோருவதிலும் நீங்கள் கவனம் செலுத்துங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி), நூல்: புகாரி 1059

கிரகணமும் தர்மமும்

நபி (ஸல்) அவர்கள் (தமது உரையில்), “சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகüல் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. அதை நீங்கள் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுங்கள்; தக்பீர் சொல்லுங்கள்; தொழுங்கள்; தான தர்மம் செய்யுங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1044

கிரகணத்தின் போது நபி (ஸல்) அவர்கள் தர்மத்தை வலியுறுத்துவதால் அந்நாளில் நாம் தர்மம் செய்து நபிவழியை செயல்படுத்துவோமாக! மறுமையில் நன்மையைப் பெறுவோமாக!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் எத்தனையோ புதுப்புது கிளைகளில் அல்லாஹ்வின் ஆலயம் எழுப்புவதற்காக அலையாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதற்காகவும், நமது ஜமாஅத்தின் சமூக நலப் பணிகளுக்காகவும், நலிவடைந்துள்ள நமது சொந்த பந்தங்களுக்காகவும் அந்நாளில் அள்ளி வழங்குவோமாக!

பெண்களும் கிரகணமும்

நான் (தொழுதுகொண்டிருக்கையில்) நரகத்தையும் கண்டேன். இன்றைய தினத்தைப் போல (ஒரு பயங்கரமான) காட்சி எதையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை. மேலும், நரகவாசிகüல் அதிகமாகப் பெண்களையே கண்டேன்என்று கூறினார்கள். மக்கள், “ஏன்? அல்லாஹ்வின் தூதரே!என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பெண்கüன் நிராகரிப்பே காரணம்என்றார்கள். அப்போது “பெண்கள் அல்லாஹ்வையா நிராகரிக்கிறார்கள்?” என வினவப்பட்டது. அதற்கு “கணவன்மார்களை நிராகரிக்கிறார்கள். (கணவன் செய்த) உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள். காலமெல்லாம் ஒருத்திக்கு நீ உதவி செய்து, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை) ஒன்றை அவள் கண்டால் “உன்னிடமிருந்து எந்த நலனையும் நான் கண்டதேயில்லைஎன்று சொல்லிவிடுவாள்என்று பதிலüத்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 5197

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தின் போதும், கிரகண தினத்தின் போதும், பெண்களை நரகத்தில் அதிகமதிகம் பார்த்ததாகவும் அதற்குரிய காரணத்தையும் சொல்கிறார்கள். பெண்கள் இந்தக் காரணத்தைக் களைந்து தங்களை நரகத்திலிருந்து காத்துக் கொள்ள முன்வர வேண்டும்.

இவ்வாறாக, கிரகணம் ஏற்படும் போது மூட நம்பிக்கைகளைத் தவிர்ந்து, மறுமை நம்பிக்கையைப் பலப்படுத்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் நமது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்வோமாக!