அல்லாஹ்வை அழைக்கும் கிறித்தவர்கள்

அல்லாஹ்வை அழைக்கும் கிறித்தவர்கள்

யூதர்களும் கிறித்தவர்களும் தத்தமது பங்கிற்கு, தங்களுக்கு அருளப்பட்ட வேதங்களில் திணிக்க வேண்டியதைத் திணித்தும், தணிக்கை செய்ய வேண்டியதைத் தணிக்கை செய்தும் கொண்டனர். ஆனால் அவர்களது அத்தனை திருகுதாளங்களையும் தில்லுமுல்லுகளையும் தாண்டி, அவர்களது கத்தரிக்கோல்களையும் கடந்து “அல்லாஹ்’ என்ற வார்த்தை பைபிளில் மட்டுமல்ல! அவர்களது அன்றாட ஜெபங்களிலும் பிரச்சாரத்திலும் பிரார்த்தனையிலும் ஆழமான, அழுத்தமான ஓர் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

இப்போது அவர்களுக்கு முன்னால் இருப்பது இரண்டே இரண்டு வழிமுறைகள் தான். ஒன்று, அல்லாஹ் என்ற வார்த்தையை இவர்கள் தவிர்க்க வேண்டும். அது ஒரு போதும் இவர்களால் முடியாது. அல்லது இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இதைத் தவிர வேறு வழியில்லை.

அவர்கள் எப்படி, எங்கே அல்லாஹ் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம்.

பைபிள் என்பது இரண்டு ஏற்பாடுகளைக் கொண்டது. ஒன்று பழைய ஏற்பாடு! இதன் மூல மொழி ஹிப்ரு மொழியாகும்.

மற்றொன்று புதிய ஏற்பாடு! இதன் மூலமொழி கிரேக்க மொழியாகும்.

ஹிப்ரு மொழியில் தோரா என்றழைக்கப்படும் தவ்ராத் வேதத்தில் யூதர்கள் செய்த திருத்தத்தைப் பார்ப்போம். அதற்கு முன், ஹிப்ரு மொழிக்கும் அரபு மொழிக்கும் இடையேயுள்ள சில ஒற்றுமையைப் பார்ப்போம்.

  1. வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக எழுதுதல்
  2. யூதர்கள் இஸ்ஹாக் நபியின் வழியில் வந்தவர்கள்; அரபிகள் இஸ்மாயீல் நபியின் வழியில் வந்தவர்கள். இரு இனங்களுமே இப்ராஹீம் நபி அவர்களின் வழி வந்தவர்கள்.
  3. இரு மொழிகளிலும் படர்க்கை மற்றும் முன்னிலையில் மரியாதைப் பன்மை இல்லாவிட்டாலும் தன்னிலையில் மரியாதைப் பன்மை உண்டு. உதாரணத்திற்கு அல்லாஹ் ஒருவன், அவன் தனித்தவன். குர்ஆனை இறக்கியதைப் பற்றிக் குறிப்பிடும் போது, “நான் இறக்கினேன்’ என்று சில இடங்களிலும், “நாம் இறக்கினோம்’ என்று சில இடங்களிலும் திருக்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இங்கு நாம் என்றால் அல்லாஹ்வுடன் கூட யாரும் இருப்பதாக விளங்க மாட்டோம். மாறாக மரியாதைப் பன்மையில் “நாம்’ என்று அல்லாஹ் தன்னை அழைக்கிறான் என்று விளங்கிக் கொள்வோம். இதே போன்ற மரியாதைப் பன்மை ஹிப்ரு மொழியிலும் உண்டு.

அடுத்து, இந்த இரு மொழிகளிலும் ஒரே விதமாக, சிறிய மாற்றங்களுடன் அமைந்த வார்த்தைகளைப் பார்ப்போம்.

ஹிப்ரு       அரபி         ஆங்கிலம்

எலாஹ்               இலாஹ்              God – கடவுள்

எகுத்                     அஹத்       One – ஒருவன்

யவ்ம்                    யவ்ம்        Day – நாள்

சாலோம்             ஸலாம்      Peace – அமைதி

யாஹுவா    யாஹுவா    Oh, He – அவனே

இதில் யா ஹு வஹு (Y.H.W.H.) என்ற வார்த்தை இடம் பெறுகின்றது. இதிலுள்ள யா என்பது அழைப்புக் குறியாகும். நாம் ஒரு நண்பனை அழைக்கும் போது, “நண்பனே!’ என்று அழைக்கின்றோம். நண்பன் என்ற வார்த்தையுடன் “ஏ’காரம் சேர்ந்து விட்டால் அது அழைப்பு வார்த்தையாகி விடுகின்றது. தமிழில் ஒரு வார்த்தையின் பின்னால் அழைப்புக்குறி வருவது போன்று அரபியில், “யா’ என்ற வார்த்தையை முன்னால் சேர்க்க வேண்டும்.

அல்லாஹ் என்ற வார்த்தையுடன் “யா’ என்பதை முன்னால் சேர்த்து “யா அல்லாஹ்’ என்றால் “அல்லாஹ்வே!’ என்று அழைப்புக் குறியாக மாறி விடும். ஹிப்ரு மொழியிலும் இவ்வாறு “யா’ என்பதை முன்னால் சேர்ப்பது தான் அழைப்புக்குறியாகப் பயன்படுத்தப்படுகின்றது.

இதன் படி ஹுவ என்றால் அவன் என்று பொருள். யா என்பது அழைப்புக் குறி! இரண்டையும் இணைத்துப் (யாஹுவ) பொருள் கொள்ளும் போது, “அவனே!’ என்ற அழைப்புச் சொல்லாகி விடுகின்றது. சிலர் இதற்கு, எங்கள் கடவுள் என்றும் பொருள் கொள்கின்றனர்.

யாஹுவ என்பதற்கு என்ன அர்த்தமும் இருந்து விட்டுப் போகட்டும். இங்கு நாம் கவனிக்க வேண்டியது இந்த யாஹுவ என்ற வார்த்தையை மொழியக் கூடாது என்று யூத குருமார்கள் தடை விதித்திருக்கிறார்கள் என்பதைத் தான். ஏனெனில் அது கடவுள் பெயராகும்; எனவே அதை மொழியக் கூடாது. அவ்வாறு மொழிந்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும். கடவுளுடைய வேதத்தில் கடவுள் பெயரைச் சொல்வதற்கு உரிமையில்லை என்பது வேடிக்கைக்குரிய விஷயமாகும்.

இவ்வாறு அல்லாஹ்வின் பெயரைச் சொல்வதற்குத் தடை என்பதால் யாஹுவ என்பதற்கு முன்னால் அடோனாய் அல்லது எலோஹிம் என்ற வார்த்தையை இடையில் திணித்துள்ளார்கள். இலாஹ் என்றால் கடவுள். இம் என்றால் மரியாதைப் பன்மையாகும். அதாவது “கடவுள் அவர்கள்’ என்று சொல்லலாம். ஐரோப்பிய மொழிகளில் மரியாதைப் பன்மை கிடையாது. அதனால் கிறிஸ்துவை இதை ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கும் போது பன்மையாகவே மொழிபெயர்த்து உண்மையிலேயே மூன்று கடவுள்கள் இருப்பதாக நம்பி விட்டனர். யாஹுவா என்பதை எழுத்தளவில் தணிக்கை செய்யாவிட்டாலும் வாயளவில் சொல்வதைத் தடை செய்து விட்டனர்.

பத்துக் கட்டளைகள்

செய்! செய்யாதே! என்ற பத்துக் கட்டளைகள் வெற்றி பெற்றதை விட இந்தக் கட்டளை வெற்றி பெற்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும். யாஹுவா என்பது கடவுள் பெயர். அது கடவுள் பெயர் எனும் போது பழைய ஏற்பாட்டில் இடம் பிடித்தது போன்று புதிய ஏற்பாட்டிலும் இடம் பிடித்திருக்க வேண்டும். ஏனெனில் புதிய ஏற்பாடு என்ற பெயரில் 27 நூல்களும் பழைய ஏற்பாட்டுடன் இணைக்கப்பட்ட கடவுளின் வெளிப்பாடு தான். தெய்வீக அறிவிப்பு தான். இதை இறைவனிடமிருந்து வந்த புத்தம் புதிய கடவுள் வார்த்தை என்று கிறித்தவர்கள் மார் தட்டிக் கொள்கின்றனர்.

அத்துடன் அவர்கள் நிற்கவில்லை. தங்கள் கைவசம் கிரேக்க மொழியிலுள்ள புதிய ஏற்பாட்டின் 24 ஆயிரம் மூல ஏடுகள் இருப்பதாகவும் பீற்றிக் கொள்கின்றனர். ஆனால் அந்த ஏடுகளில் ஒரு இடத்தில் கூட கடவுளின் பெயரான யாஹுவா இடம்பெறவில்லை. மாறாக அந்தப் பெயர் ஃஹ்’ழ்ண்.ர்ள் மற்றும் பட்ங்.ர்ள்’ என்றே குறிப்பிடப்படுகின்றது. இதன் பொருள் God கடவுள், கர்ழ்க் எஜமான் என்பதாகும்.

இவர்களுடைய ஆந்தைப் பார்வையிலிருந்தும் அடித்தல் வேலையிலிருந்தும் அல்லாஹ் என்ற வார்த்தை மட்டும் தப்பி விட்டது.

ஜே கலாச்சாரம்

அரபி, ஹிப்ரு மொழியில் யா என்ற தொடங்கும் வார்த்தைகளை ஜே என்று மாற்றும் கலாச்சாரம் மேற்கத்தியர்களிடம் முளைத்தது.

யூனுஸ் – ஜோனா

யூசுப் – ஜோசப்

யஹுதா – ஜுதா (ஜுடாஸ்)

ஏஸஸ் – ஜீஸஸ்

என்று மாற்றினர். இந்த அடிப்படையில் பழைய ஏற்பாட்டில் வந்த யாஹுவாவை ஜேஹுவா என்று மாற்றி, கடவுள் பெயர் ஜேஹுவா என்று அமெரிக்காவிலுள்ள கிறித்தவர்களில் ஒரு சாரார் அழைக்கத் துவங்கினர். அவன் பெயர் என்ன? என்று கடவுளின் பெயரைப் பற்றி சாதாரணமாக ஒரு கிறித்தவரிடம் கேட்டால் God கடவுள் என்று பதில் சொல்வான். இப்படிப் பதில் சொல்லும் அந்தக் கிறித்தவனை நோக்கி, “கடவுள் என்றால் வழிபடும் ஒரு பொருள்” என்று கூறி அந்தக் கூட்டத்தினர் அதை மறுத்தனர். அடுத்து அந்தக் கிறித்தவன், Father தந்தை என்று சொன்னதும், உன்னுடைய தந்தை என்ன கடவுளா? என்று கேட்டுக் கிண்டல் பேசினர். இதுவெல்லாம் கடவுள் பெயர் கிடையாது; கடவுள் பெயர் ஜேஹுவா தான் என்று இவர்கள் குறிப்பிட்டனர்.

பழைய ஏற்பாட்டில் யாஹுவா (ஜேஹுவா) 6823 இடங்களில் தனியாகவும், Genesisல் மட்டும் எலோஹிம் என்ற வார்த்தையுடன் சேர்ந்து 156 இடங்களிலும் இடம்பெறுகின்றது என்று இவர்கள் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர்.

கடவுளின் பெயர் அல்லாஹ் என்ற வார்த்தை பைபிளில் இடம் பெற்றுள்ளது. இது தெரியாத குருடர்களாக இவர்கள் எப்படித் தட்டழிகின்றனர்?

அத்துடன் புதிய ஏற்பாடும் கடவுளின் வாக்கு தான் என்பது கிறித்தவர்களின் நிலைப்பாடு. ஆனால் இந்த சாரார் பழைய ஏற்பாட்டில் வருகின்ற கடவுள் பெயரை ஏற்றுக் கொண்டு புதிய ஏற்பாட்டில் வருகின்ற கடவுள் பெயரை ஏற்க மறுக்கின்றார்கள். இரண்டில் எது கடவுளின் வாக்கு? எது சரி? என்பதை வினவுவதற்காக இதை இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது.

பழைய ஏற்பாட்டில் அல்லாஹ்

இங்கே Rev. C.I. Scofield, D.D. (இறைமையியல் முனைவர்) அவர்களால் தணிக்கை செய்யப்பட்ட ஆங்கில பைபிளில் உள்ள ஒரு பக்கத்தை இங்கே அளிக்கின்றோம். இவர் கிறித்தவ உலக அறிஞர்களால் பாராட்டப்பட்டவர். அவரது புதிய, திருத்தப்பட்ட பதிப்புக்குக் கீழ்க்கண்ட கிறித்தவ இறைமையியல் முனைவர்கள் குழுமம் தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள்.

Rev. Henry G. Weston, D.D., LL.D., President Crozer Theological jeminary.

Rev. W. G. Moorehead, D.D., President Xenia (U.I,) Theological Seminary.

Rev. lames M. Gray, D.D., President Moody Bible Institute.

Rev. Elmore Harris, D.D., President Toronto Bible Institute.

Rev. William !. Erdman, D.D., Author “The Gospel of John,” etc.

Rev. Arthur T. Pierson, D.D., Author, Editor, Teacher, etc.

Rev. William L. Pettingill, D.D., Author, Editor, Teacher.

Arno C. Gaebelein, Author “Harmoney of Prophetic Word,” etc.

இதை நாம் இங்கு வெளியிட்டிருப்பது அவர்களது பட்டங்களைக் கண்டு உங்கள் புருவத்தை உயர்த்துவதற்காக அல்ல! இந்தத் திருத்தப்பட்ட பைபிளில் அவர்கள் கொண்டிருக்கும் ஏகோபித்த கருத்தொற்றுமையைத் தெரிவிப்பதற்காகத் தான் இவர்களது பட்டியலை வெளியிட்டுள்ளோம்.

Elohim – எலோஹிம் சில வேளைகளில் El – எல் அல்லது Elah –  எலாஹ் என்று உச்சரிக்கப்படும். இவற்றின் பொருள் God கடவுள் என்பதாகும். மாற்றாக Allah அலாஹ் என்று உச்சரிக்கப்படும். (அதாவது அல்லாஹ் என்பதில் ஒரேயொரு “ல்’ என்பதை மட்டும் நீக்கியிருக்கின்றார்கள்.)

அலாஹ் என்பதற்கும் அல்லாஹ் என்பதற்கும் இவர்கள் ஓர் எழுத்து தூரத்தில் தான் இருக்கின்றார்கள்.

இந்த பக்கம் அண்மையில் The New scofield Reference Bible இண்க்ஷப்ங் என்ற பெயரில் வெளியான, மன்னர் ஜேம்ஸின் அதிகாரப்பூர்வ பைபிள் பதிப்பில் “அலாஹ்’ என்ற வார்த்தையைக் கன கச்சிதமாக, படு கவனமாகத் தூக்கி விட்டார்கள். மேலே நாம் எடுத்துக் காட்டியிருக்கும் இறைமையியல் முனைவர்களை விட அதிகம் பட்டம் பெற்ற முனைவர்கள் ஒன்று சேர்ந்து முந்தைய பதிப்பில் இடம் பெற்றிருந்த அலாஹ் என்ற வார்த்தையை நீக்கி விட்டார்கள்.

மூலப் பிரதியில் Elohim அல்லது El அல்லது Elah அல்லது அலாஹ் என்றிருந்ததை இவர்கள் God என்று மொழிபெயர்ப்புச் செய்தனர்.

முஸ்லிம்கள் “அல்லாஹ்’ என்று அழைக்கின்றனர். அதற்கு இது ஒத்திருந்து, உண்மை வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அதை இவர்கள் உருத் தெரியாமல் ஆக்கினாலும் அதை ஒரு போதும் மூடி மறைத்து விட முடியாது. இந்த உண்மையைப் படம் பிடித்துக் காட்டுவதற்காக அரபி பைபிளின் பதிப்பையும் இதே புத்தகத்தின் ஆங்கிலப் பக்கத்தின் பதிப்பையும் தருகின்றோம்.

1:1 In the beginning, when God created the heavens and the earth,

1:2 the earth was a formless wasteland, and darkness covered the abyss, while a mighty wind swept over the waters.

1:3 Then God said, “Let there be light,” and there was light.

1:4 God saw how good the light was. God then separated the light from the darkness.

Genesis 1:1-4

பாதிரிகளுக்குப் பகிரங்க அழைப்பு

6823 தடவை யாஹுவா என்று தனியாகவும், எலோஹிம் என்ற வார்த்தையுடன் சேர்த்து 156 தடவையும் ஹிப்ரு மொழியில் பழைய ஏற்பாட்டில் வருவதை ஸ்காஃபீல்டு தலைமையிலான முனைவர்களின் குழுமம் “அல்லாஹ்’ என்று ஒப்புக் கொள்கின்றது. முஸ்லிம்கள், கிறித்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே ஒரு நாயனை வணங்கும் அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை.

நீங்கள் ஒப்புக் கொள்கின்ற அந்த அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுவது போல் பாதிரிகளாகிய உங்களையும் உங்களை நம்பியிருக்கின்ற ஒட்டு மொத்த கிறித்தவர்களையும் நோக்கி இந்த அழைப்பை விடுகின்றோம்.

வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் “நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!எனக் கூறி விடுங்கள்!  (அல்குர்ஆன் 3:64)

தனி நாயனுக்கு ஒரு தனிப் பெயர்

அல்லாஹ் என்பதற்கு God கடவுள் என்று மொழி பெயர்க்கிறார்கள். இந்த God என்ற வார்த்தை எப்படியெல்லாம் தவறாகவும் தப்பாகவும் பயன்படுத்தப்படுகின்றது என்று பாருங்கள்.

உதாரணத்திற்கு இந்துக்களின் கோயில்களில் உள்ள சிலைகளைப் பற்றி நம்முடைய குழந்தைகளுக்கு நாம் சொல்லும் போது, Gods of Hindus இந்துக் கடவுள்கள் என்று குறிப்பிடுகின்றோம். இதை ஓர் இந்து கேட்டால் அதைக் குறையாக எடுத்துக் கொள்வதில்லை. காரணம் அவர்களுடைய நம்பிக்கையைத் தான் அப்படிச் சொல்கிறோம்.

இதுபோல் கிரேக்க ஆண் கடவுள் (God) பெண் கடவுள் (Goddess) ஆகியோரை எடுத்துக் கொண்டால் குடித்து விட்டுக் கும்மாளம் போடும் Godகளும் இருக்கின்றனர். இவ்வளவு ஏன்? சதி செய்து, சூழ்ச்சி வலைகள் பின்னி சூட்சுமமாக அடுத்த Godகளின் மனைவிகளைக் கடத்திக் கொண்டு போகும் Godகளும் இருக்கின்றனர்.

God Father

ஒரு குழந்தையை ஒருவர் எடுத்து வளர்க்கின்றார் என்றால் அவருக்குத் தமிழில் வளர்ப்புத் தந்தை – பொறுப்பாளர் என்று குறிப்பிடுவோம். இதுபோல் ஒரு குழந்தையை ஒரு பெண் எடுத்து வளர்த்தால் வளர்ப்புத் தாய் என்று சொல்வோம். இதுபோல் அந்தக் குழந்தைக்கு வளர்ப்புப் பிள்ளை, வளர்ப்பு மகன் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் ஆங்கிலத்தில் இதற்கு God Father, God Mother, God Child என இதற்கும் கடவுளை இழுத்து விடுகின்றனர்.

Tin – God

இல்லாத தகுதிகளை இருப்பதாகக் காட்டிக் கொள்வோருக்கு தமிழில் பந்தா பேர்வழி என்போம். இதற்கு ஆங்கிலத்தில் கடவுளைத் தான் வம்புக்கு இழுக்கின்றனர். இந்தப் போலிப் பேர்வழிகளை Tin – God என்று அழைக்கின்றனர்.

இதுவே கடவுள் தன்மையில் பல தரங்கள் இருப்பதாக, கடவுளில் பல கூறுகள் இருப்பதாக உணர்த்துகின்றது. இதே வார்த்தைக்குப் பின்னால் ஒரு “s’ சேர்த்து, அதாவது Gods என்றால் கடவுள்கள் என்று பன்மையாக்கி கடவுளுக்கு இணை கற்பிக்கலாம். God என்பதற்குப் பின்னால் dess சேர்த்து விட்டால் கடவுளைப் பெண்ணாக்கி விடலாம்.

God என்பதற்குப் பின்னால் ling என்று சேர்த்து விட்டால் கடவுளுக்கு ஒரு குட்டிக் கடவுளை உருவாக்கி விடலாம். ஆனால் இந்த விளையாட்டுக்களெல்லாம் Allah என்ற வார்த்தையில் அறவே நடக்காது. Allah Father, Allah Mother, Allah Child என்றெல்லாம் சொல்ல முடியாது.

மேற்கத்தியர்கள் கடவுள் தன்மையில் எப்படியொரு காட்டுமிராண்டித்தனமான விளையாட்டை விளையாடுகின்றார்கள் என்று பாருங்கள். கடவுள் என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு அகராதி தரும் பொருளைப் பாருங்கள். கிரேக்கர்களின் கடவுள்களைப் பற்றி அகராதி தரும் பொருள் இதோ:

ஜூபிடர் – வியாழன் – விண் கடவுள்

புளூட்டோ – ஒன்பதாவது கோள் – நரகக் கடவுள்

மார்ஸ் – செவ்வாய் – போர்க் கடவுள்

நெப்டியூன் – ஒரு கோள் – கடல் கடவுள்

சியஸ் – இவை அனைத்திற்கும் தந்தை அல்லது தலைமைக் கடவுள்

அப்போலோ, ஹோரஸ், ஹெர்குலிஸ் என்று கிரேக்கர்களின் கடவுள் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

ஒரு பெண் புனித மைக்கேலுக்கு ஒரு மெழுகுவர்த்தியும் ஷைத்தானுக்கு ஒரு மெழுகுவர்த்தியும் ஏற்றிக் கொண்டாளாம். சுவனத்திற்குப் போனாலும் ஒரு கூட்டாளி கிடைப்பார்; நரகத்திற்குப் போனாலும் ஒரு கூட்டாளி கிடைப்பார் என்பதற்காக வேண்டி இவ்வாறு செய்தாளாம்.

இந்தப் பெண்ணைப் போன்று இஷ்டத்திற்குக் கடவுள்களைத் தேர்வு செய்கின்ற அளவுக்கு மேற்கத்தியர்களின் நிலை அமைந்துள்ளது.

ஆனால் அல்லாஹ் என்ற பெயரைக் கறைப்படுத்த முடியாது. குறை காண முடியாது. புனித நாயனுக்கு ஏற்ற புனித வார்த்தையாக அமைந்திருக்கின்றது. தனித்த நாயனுக்குரிய தனியொரு பெயராக அமைந்திருக்கின்றது.

அல்லாஹ்வுக்கு அணி சேர்க்கின்ற அழகுப் பெயர்களை திருக்குர்ஆன் தருவதைப் பாருங்கள்.

அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. மறைவானதையும், வெளிப்படை யானதையும் அறிபவன். அவன் அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.

அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) பேரரசன்; தூயவன். நிம்மதியளிப்பவன்; அடைக்கலம் தருபவன்; கண்காணிப்பவன்; மிகைத்தவன்; ஆதிக்கம் செலுத்துபவன்; பெருமைக்குரியவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அல்லாஹ் தூயவன்.

அவனே அல்லாஹ். (அவன்) படைப்பவன்; உருவாக்குபவன்; வடிவமைப்பவன்; அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்

அல்குர்ஆன் 59:22-24

அனைத்து பைபிள்களிலும் அல்லாஹ்வின் பெயர்

படைத்த இறைவனுக்கு அவனது தனித்தன்மையைக் குறிக்கின்ற வகையில் ஒவ்வொரு மொழியிலும் ஒரு பெயரைக் கொடுக்கின்றனர். ஆனால் செமட்டிக் மொழிகளில் அதாவது மோஸே, ஏசு, முஹம்மது ஆகிய தூதர்களின் மொழிகளில் அல்லாஹ் என்று அழகுற அமைந்த வார்த்தையைப் போன்று அமையவில்லை. அல்லாஹ் என்ற இந்த வார்த்தை (அல்லது அதன் வேர்ச் சொல்லாக அமைந்திருக்கும் இலாஹ்) பைபிளின் அனைத்து மொழியாக்கங்களிலும் தனஓக்குரிய இடத்தைப் பிடித்திருக்கின்றது.

உலகத்தில் பேசப்படும் மொழிகளில் 1500 மொழிகளுக்கு மேற்பட்ட மொழிகளில் பைபிளை மொழிபெயர்த்து விட்டதாகக் கிறித்தவ உலகம் மெச்சிக் கொள்கின்றது.

அந்த மொழியாக்கங்களிலெல்லாம் அல்லாஹ் என்ற வார்த்தை நுழைந்து தன்னுடைய ஆளுமையை, அழகை அற்புதமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

மேற்கத்தியர்கள் கூறுவது போன்று இது விவிலிய உண்மை (Gospel Truth). அப்படியானால் உலகில் வாழும் 120 கோடி கிறித்தவர்களுக்கு இது ஏன் தெரியாமல் போய் விட்டது என்று கேட்கலாம். இதற்குக் காரணம் அவர்களுக்குச் செய்யப்பட்ட மூளைச் சலவை தான்.

அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை.

மத்தேயு 13:13

இந்த பைபிள் வசனம் கூறுவது போல் அவர்கள் பார்ப்பதில்லை, செவியுறுவதில்லை, சிந்திப்பதும் இல்லை.

ஏசு உதிர்த்த இனிய வார்த்தைகள்

சிலுவையில் தொங்கியதாகக் கருதப்படும் ஏசு உதிர்த்த இனிய வார்த்தைகள் இதோ:

பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, “எலோயி, எலோயி, லெமா சபக்தானி?” என்று உரக்கக் கத்தினார். “என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பது அதற்குப் பொருள்.

மாற்கு 15:34

புனித மார்க்கின் கருத்துப்படி இது எபிரேய மொழியின் மூல, கையெழுத்துப் பிரதியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகும். காரணம், மூல நூல்கள் என்றழைக்கப்பட்ட இவ்வேதங்கள் எபிரேய மொழியில் தான் எழுதப்பட்டன.

அதே சமயம் மத்தேயு சொல்வதை சற்றுக் கவனியுங்கள். அவர்கள் யூதர்களை இலக்காகக் கொண்டு பைபிளை எபிரேய மொழியிலேயே எழுதியதாகக் கருதப்படுபவர்.

புனித ஜீரோம் என்பவர் கி.பி. நான்காம், ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறித்தவத் தந்தை ஆவார். இவர் மத்தேயு பற்றிக் குறிப்பிடுவதாவது:

லெவி (Levi) என்று அழைக்கப்படக் கூடிய மத்தேயு வரி வசூல் செய்யும் பொது அதிகாரி. அனைத்து நற்செய்தியாளர்களை விடவும் முதன் முதலில் வந்து தூதரானவர். ஏசு கிறிஸ்துவுடைய விவிலியத்தை நம்பிக்கை கொண்ட, விருத்த சேதனம் செய்த யூதர்களின் எபிரேய மொழியிலும் அவர்களது தன்மைக்கு ஒப்பவும் இயற்றினார். உண்மையில் மத்தேயுவின் மொழி உச்சரிப்பு, மார்க்கின் உச்சரிப்பை விட அதிகமாக செமட்டிக் மொழி உச்சரிப்புக்கு ஒத்திருக்கும். இதைப் பின்வரும் வசனத்தை, முன்னால் இடம் பெற்ற வசனத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும்.

மூன்று மணியளவில் இயேசு, “ஏலி, ஏலி லெமா சபக்தானி?” அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலில் கத்தினார்.

மத்தேயு 27:46

ஏலி, ஏலி லெமா சபக்தானி என்ற வார்த்தைகளை தயவு செய்து மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்.

ஏசு சிலுவையில் அறையப்படும் போது ஜேஹுவா, ஜேஹுவா என்று சொன்னாரா? என்று ஒரு உண்மை கிறித்தவரிடம் கேளுங்கள். இல்லை என்றே பதிலளிப்பார். தந்தையே, தந்தையே என்று சொன்னாரா? என்று கேளுங்கள். அதற்கும் அவர் இல்லை என்றே பதிலளிப்பார். நிச்சயமாக அவரது பிரார்த்தனை இலீ, இலீ – இலாஹ், இலாஹ் என்று தான் அமைந்திருந்தது. ஒரு கண்ணியமிக்க கிறித்தவர் இந்த உண்மையில் உங்களுடன் உடன்படாமல் இருக்க மாட்டார்.

அல்லலூயா

உங்களுடைய கிறித்தவ நண்பரிடம் அல்லலூயா என்ற வார்த்தையைப் பற்றிக் கேளுங்கள். கிறித்தவர் என்று பெயர் பெற்ற எவரும் இந்த வார்த்தையைத் தெரியாமல் இருக்க மாட்டார். அல்லாஹு அக்பர்; அல்லாஹு அக்பர் என்று முஸ்லிம்கள் தக்பீர் கூறுவது போன்று அவர்கள் அல்லலூயா என்று சொல்வார்கள். அல்லலூயாவின் அர்த்தம் என்ன? இதற்குப் புதிய ஏற்பாட்டின் 27வது புத்தகமான இறுதிப் புத்தகம் திருவெளிப்பாடு (வெளிப்படுத்தின சுவிஷேசம்) செல்வோம்.

ஏசுவுடைய மாணவர் ஒரு காட்சியைக் காண்கிறார். அதை இப்போது பார்ப்போம்.

  1. இதன்பின் பெருந்திரளான மக்களின் கூச்சல் போன்ற ஒலி விண்ணகத்தில் எழக் கேட்டேன். அது பின்வருமாறு முழங்கியது; “அல்லேலூயா! மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன.

2 ஏனெனில் அவருடைய தீர்ப்புகள் உண்மை உள்ளவை, நீதியானவை. தன் பரத்தைமையால் மண்ணுலகை அழிவுக்குட்படுத்திய பேர்போன அந்த விலைமகளுக்கு அவர் தீர்ப்பு வழங்கினார்; தம் பணியாளர்களைக் கொன்றதற்காக அவளைப் பழிவாங்கினார்.”

3 மீண்டும் அந்த மக்கள், “அல்லேலூயா! அந்த நகர் நடுவிலிருந்து புகை என்றென்றும் மேலே எழுந்த வண்ணம் உள்ளது” என்றார்கள்.

4 அந்த இருபத்து நான்கு மூப்பர்களும் நான்கு உயிர்களும் அரியணையில் வீற்றிருந்த கடவுள்முன் விழுந்து வணங்கி, “ஆமென், அல்லேலூயா” என்று பாடினார்கள்.

5 அரியணையிலிருந்து எழுந்த ஒரு குரல், “கடவுளின் பணியாளர்களே, அவருக்கு அஞ்சி நடப்பவர்களே, சிறியோர்களே, பெரியோர்களே, நீங்கள் அனைவரும் நம் கடவுளைப் புகழுங்கள்” என்று ஒலித்தது.

6 பின்னர் பெருந்திரளான மக்களின் கூச்சல்போலும் பெரும் வெள்ளத்தின் இரைச்சல் போலும் பேரிடி முழக்கம் போலும் எழுந்த போரொலியைக் கேட்டேன். அது சொன்னது; “அல்லேலூயா! நம் கடவுளாகிய ஆண்டவர், எல்லாம் வல்லவர்; அவர் ஆட்சி செலுத்துகின்றார்.

7 எனவே மகிழ்வோம், பேருவகையுடன் அவரைப் போற்றிப் புகழ்வோம். ஏனெனில் ஆட்டுக்குட்டியின் திருமண விழா வந்துவிட்டது. மணமகளும் விழாவுக்கு ஆயத்தமாய் இருக்கிறார்.

8 மணமகள் அணியுமாறு பளபளப்பான, தூய்மையான, விலையுயர்ந்த மெல்லிய ஆடை அவருக்கு அளிக்கப்பட்டது. அந்த ஆடை இறைமக்களின் நீதிச் செயல்களே.”

9 அந்த வானதூதர் என்னிடம், “ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்’ என எழுது” என்று கூறினார். தொடர்ந்து, “இவை கடவுளின் உண்மையுள்ள சொற்கள்” என்று சொன்னார்.

10 நான் வானதூதரை வணங்கும் பொருட்டு அவரது காலடியில் விழுந்தேன். ஆனால் அவரோ என்னிடம், “வேண்டாம். இயேசுவுக்குச் சான்று பகர்ந்த உனக்கும் உன் உடன்பிறப்புகளுக்கும் நான் உடன்பணியாளனே. கடவுளை மட்டுமே நீ வணங்க வேண்டும்” என்றார். ஏனெனில் இயேசு பகர்ந்த சான்றே இறைவாக்குகளுக்கு உயிர்மூச்சு.

திருவெளிப்பாடு 19:1-10

இதற்கு அரபி பைபிளில் அமைந்த வார்த்தை:

அரபி பைபிளில் இடம் பெறும் சொற்களுக்காக திருச்சபை வழக்குச் சொற்கள் அகராதி என்று ஓர் அகராதியை இணைத்திருக்கின்றார்கள்.

அதில் இதற்குப் பொருள் கூறும் போது, “இது எபிரேய வார்த்தை. இவ்வாறு தான் (இவ்விரு விதமாகத் தான்) அனைத்து மொழிகளிலும் மொழியப்படுகின்றது. அதாவது “ஹல்லிலூ (தூய்மைப்படுத்துங்கள்) யாஹுவா (யாஹுவாவை)’ அதாவது இறைவனைத் தூய்மைப்படுத்துங்கள்; அல்லது அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள் என்பது இதன் பொருளாகும்” என்று இந்த அகராதி குறிப்பிடுகின்றது.

இதிலிருந்து நாம் தெளிவாக விளங்குவது, அல்லலூயா என்பதே அல்லாஹ்வைத் துதிப்பது தான்.

இங்கே இந்த அத்தியாயத்தின் அரபியாக்கத்தை அரபிப் பிரதியிலிருந்து தருகிறோம்.

தமிழ் பைபிளில் கடவுள், கர்த்தர் என்ற வார்த்தைகள் வந்த இடத்தில் அல்லாஹ் என்ற வார்த்தை வருகின்றது. இதில் நான்காவது வசனத்தில் அரபியில் அர்ஷ் என்ற வார்த்தை இடம்பெறுகின்றது. இதற்குத் தமிழ் மொழி பெயர்ப்புகளில் சிம்மாசனம், அரியணை என்று அர்த்தம் செய்யப்பட்டிருக்கின்றது. அரியணையில், சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்ற… என்ற வாசகம் அமையப் பெற்றிருக்கின்றது.

அவனே வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். அளவற்ற அருளாளனைப் பற்றி, அறிந்தவரிடம் கேட்பீராக!

திருக்குர்ஆன் 25:59

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்திருக்கின்றான் என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது. குர்ஆனில் இதுபோன்ற அதிகமான வசனங்கள் இடம் பெற்றாலும் இங்கு உதாரணத்திற்காக ஒன்றே ஒன்றை மட்டும் எடுத்துக் காட்டியுள்ளோம்.

இவையெல்லாம் அல்லாஹ்வை மட்டும் தான் சந்தேகமில்லாமல் குறிப்பிடுகின்றன. ஒருபோதும் ஏசுவைக் குறிக்காது. அவ்வாறு குறிக்காது என்பதற்கு இதிலுள்ள 10வது வசனமும் ஒரு சான்றாகும்.

யோனா வானவரின் காலில் விழும் போது, “நீ அல்லாஹ்விற்கு மட்டும் தான் சிரம் பணிய வேண்டும்; நான் உன்னுடனும் உனது சகோதரர்களுடனும் உள்ள ஓர் அடிமை தான்” (அதாவது, அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்று) ஏசு அளித்த சான்று தான் தூதுச் செய்தியின் உயிர் மூச்சு என்று இந்த 10வது வசனமும் குறிப்பிடுகின்றது.

இதுவும் அழுத்தம் திருத்தமாக, ஆணித்தரமாக, அர்ஷில் இருக்கும் அல்லாஹ்வைத் தான் சந்தேகத்திற்கு இடமின்றி குறிப்பிடுகின்றது. இதன் அடிப்படையில் கிறித்தவ நண்பர்களே! அல்லலூயா என்று நீங்கள் அழைப்பது உங்களையும் எங்களையும் படைத்த உண்மையான அல்லாஹ்வைத் தான்.

அல்குர்ஆன் 3:64 வசனத்தின்படி உண்மையான அல்லாஹ்வை வணங்க வாருங்கள் என்று அன்புடன் அழைக்கின்றோம்.

குறிப்பு: அஹ்மத் தீதாத் அவர்கள், “அல்லலூயாவில் “அல்ல’ என்பது அல்லாஹ்வைக் குறிக்கின்றது; யா என்பது ஓர் ஆச்சரியக் குறி” என்று குறிப்பிட்டு விட்டு அந்த “யா’வை முன்னால் கொண்டு வந்து, “யா அல்லாஹ்’ என்பது தான் அல்லலூயாவின் பொருள் என்று தெரிவிக்கின்றார்கள்.

ஆனால் “யா’ என்பது அரபியிலும் எபிரேயுவிலும் முன்னால் தான் இடம் பெறுகின்றது என்று அஹ்மத் தீதாத் அவர்களே மற்றொரு இடத்தில் குறிப்பிடுகின்றார். அல்லலூயாவில் அது பின்னால் இடம் பெறுகின்றது. இதை எப்படி முன்னால் கொண்டு வர முடியும் என்ற விளக்கத்தை அவர் தரவில்லை. அத்துடன் அரபியில் “யா’ என்பது அழைப்புக் குறியாகத் தான் வருகின்றது. ஆச்சரியக் குறியாக வருவதில்லை.

எனவே அல்லலூயாவிற்கு அரபி பைபிள் கொடுக்கின்ற விளக்கம் தான், “ஹல்லிலூ (தூய்மைப்படுத்துங்கள்) யாஹுவா (யாஹுவாவை)” அதாவது “இறைவனைத் தூய்மைப்படுத்துங்கள்” என்ற விளக்கம் தான் ஓரளவுக்குப் பொருத்தமாக இருக்கின்றது என்பதால் அந்த விளக்கமே இங்கே அளிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடவுள் தந்தை

குர்ஆனிலும் பைபிளிலும் கடவுளுக்கென்று பொதுவான பெயர்கள் இருக்கின்றன. ஆனால் குர்ஆனில் அல்லாஹ்வுக்கென்று அழகிய பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. அந்தப் பெயர்களில் “அப்’ – தந்தை என்ற வார்த்தை அறவே இடம்பெறவில்லை. ஆனால் இதற்கு மாற்றமாக “ரப்’ என்ற வார்த்தை மிக அதிகமாக இடம்பெற்றுள்ளது. இதற்கு இறைவன், எஜமான் என்று பொருள்.

குர்ஆனில் தந்தை என்ற வார்த்தை இடம் பெறாததற்கு ஒரே காரணம், கிறித்தவர்கள் வானத்தில் உள்ள தந்தைக்கு மகனாக ஏசுவை ஆக்கியது தான். இது புனித மிக்க கடவுளின் தரத்தை பாலியல் தேட்டத்திற்கு உட்பட்ட மனித, மிருக இனங்களின் தரத்திற்கு இறக்கும் அநியாயமும் அக்கிரமும் ஆகும்.

குர்ஆன் கூறும் கடவுள் கொள்கை

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லைஎன்று கூறுவீராக! “கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்கு மாறும் இணை கற்பித்தோரில் ஒருவனாக ஆகிவிடக்கூôது என்றும் கட்டளையிடப் பட்டுள்ளேன்எனவும் கூறுவீராக!

அல்குர்ஆன் 6:14

உணவு சாப்பிடுகின்ற எவரும் எவனும் ATNATUஆக, கடவுளாக இருக்க முடியாது. இந்த ஓர் உரை கல்லை வைத்து மனிதக் கடவுளை வணங்குகின்ற கோடிக்கணக்கான படித்த, பண்டித அறிவிழந்த ஜென்மங்களை மீட்டெடுத்து நரகத்திலிருந்து காத்து விடலாம்.

இந்த அடிப்படையில் கடவுளை ATNATU என்று கூறும் தெற்கு ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிமக்கள், இனத்தால் பழங்குடியினராக இருந்தாலும் கடவுள் பற்றிய தங்களது சரியான சிந்தனையினால் கிழக்கத்திய, மேற்கத்திய நாகரீக (?) மக்களை விட விஞ்சி விட்டார்கள் என்பது தான் உண்மை.