ஹஜ் செய்முறை விளக்கம்

ஏகத்துவம் டிசம்பர் 2006

இனி ஹஜ்ஜின் வணக்கங்களில் ஆண்களும் பெண்களும் எந்தெந்த காரியங்களில்  வேறுபடுகின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.

இஹ்ராமுக்குப் பின்னால் ஆண்கள் செய்கின்ற அனைத்தும் தங்களுக்கும் உண்டு என்றுபெண்கள் கருதி விடக் கூடாது என்பதற்காக இந்த வேறுபாடு காட்டப்பட்டுள்ளது.

ஆண்களுடன் ஒப்பீடு காட்டி, வேறுபடுத்த முடியாத காரியங்களும் உள்ளன. அவைமுழுமையாக பெண்களுக்கு உரிய காரியங்களாகும்.

  1. முகத்தை மூடக் கூடாது.
  2. கைகளுக்கு உறை அணியக் கூடாது.
  3. ஹஜ்ஜின் போது அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் தவாஃபுல் விதா – பயணதவாஃப் இல்லை.

இங்கே ஓர் ஒப்பீட்டுடன் கூடிய இந்த வேறுபாட்டைக் கூறுவதற்குக் காரணம், ஆண்கள்செய்யக்கூடிய காரியங்களை விட்டுப் பெண்கள் எப்படி வேறுபடுகிறார்கள் என்பதை விளக்குவதற்காகத் தான். இவற்றைத் தவிர்த்து மற்ற காரியங்கள் அனைத்தும் ஆண்கள் செய்வதைப் போன்றே செய்ய வேண்டும் என்பதை முதலில் பதிவு செய்கிறோம்.இப்போது ஹஜ்ஜின் முதல் காரியமான இஹ்ராமுக்கு வருவோம்.

இஹ்ராம்

மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும், பிரசவத் தீட்டு ஏற்பட்ட பெண்களும் இஹ்ராமுக்கு முன் குளிப்பது நபிவழியாகும்.

நாங்கள் (இஹ்ராம் கட்டும் எல்லையான) துல்ஹுலைஃபாவை அடைந்த போது (அபூபக்ர்(ரலி) அவர்களின் மனைவியான) அஸ்மா பின்த் உமைஸ் அவர்கள், முஹம்மது பின்அபூபக்ர் என்ற குழந்தையைப் பெற்றார்கள்.

“நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்(அஸ்மா பின்த் உமைஸ்) கேட்டனுப்பினார்கள். “நீ குளித்து விட்டு, இரத்தத்தைஉறிஞ்சுகின்ற துணியை இடுப்பில் கட்டிக் கொண்டு இஹ்ராம் கட்டிக் கொள்” என்று நபி(ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2137

“இஹ்ராம்’ என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்டவகையில் உடையணிந்திருக்க வேண்டும். ஆனாலும் மக்கள் குறிப்பிட்ட விதத்தில்அணியும் ஆடையையே இஹ்ராம் என்று விளங்கியுள்ளனர்.

ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்ய நாடினால் “லப்பைக்கஹஜ்ஜன் வஉம்ரதன்” (ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்துவிட்டேன்) என்று கூற வேண்டும்.

ஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால் “லப்பைக்க ஹஜ்ஜன்” என்று கூற வேண்டும்.

உம்ராவை மட்டும் செய்ய நாடினால் “லப்பைக்க உம்ரதன்” என்று கூற வேண்டும்.

இவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும். இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச்சொல்ல வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்” என்று கூறி ஹஜ்,உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 2194, 2195

ஹஜ்ஜின் சட்டங்களில் தடை செய்யப்பட்ட காரியங்கள் என்னென்ன என்பதைமுழுமையாக விளங்கிக் கொண்டால் அதுவே ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்குப்போதுமானதாகி விடும். எனவே ஹஜ்ஜின் போது, இஹ்ராமுக்குப் பின் தடுக்கப்பட்டகாரியங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

1. தலை மற்றும் உடலில் உள்ள முடிகளைக் களையக் கூடாது.

அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள்தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரியஇடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில்நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரேமழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு. (அல்குர்ஆன் 2:196)

பேன், பொடுகு, புண் போன்ற தொந்தரவுகளால் தலைமுடியை மழிக்க நேர்ந்தால்மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.

ஹுதைபிய்யா சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து “உன்தலையில் உள்ள பேன்கள் உனக்குத் தொல்லை தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அப்படியானால் தலையை மழித்து விட்டு ஒரு ஆட்டைஅறுப்பீராக! அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று “ஸாவு’பேரிச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பீராக!” என்றார்கள்.

அறிவிப்பவர்: கஃப் பின் உஜ்ரா (ரலி)

நூல்: புகாரி 1814, 1815, 1816, 1818, 4159, 4190, 4191, 4517, 5703

2. நகங்களை வெட்டக் கூடாது.

“உங்களில் ஒருவர் துல்ஹஜ் பிறையைக் கண்டு, அவர் குர்பானி கொடுக்க எண்ணினால் தனது முடியையும், நகங்களையும் வெட்டக் கூடாது” என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: முஸ்லிம் 3653, 3654

“குர்பானி கொடுப்பவர் முடியையும், நகங்களையும் வெட்டக் கூடாது” என்ற இந்தத் தடை இஹ்ராம் கட்டியவருக்கும் பொருந்தக் கூடியது தான்.

3. நறுமணம் பூசக் கூடாது

ஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும் போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது.உடனே அவர் இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள்! அவரது இரு ஆடைகளில் அவரைக்கபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது முகத்தையோ, தலைமுடியையோ மூட வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் “தல்பியா’ கூறியவராகஎழுப்பப் படுவார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1265, 1266, 1267, 1268, 1839, 1849, 1850, 1851

“அவருக்கு நறுமணம் பூசாதீர்கள். ஏனெனில், அவர் மறுமை நாளில் தல்பியாகூறியவராக எழுப்பப் படுவார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்துஇஹ்ராம் அணிந்தவர் நறுமணம் பூசக் கூடாது என்பதை நாம் அறியலாம்.

4. திருமண ஒப்பந்தம் செய்யக் கூடாது.

“இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக் கூடாது. பிறருக்குத் திருமணம் செய்துவைக்கவும் கூடாது. பெண் பேசவும் கூடாது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்கூறினார்கள்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான்(ரலி)

நூல்: முஸ்லிம் 2522, 2524

5. உடலுறவு கொள்ளக் கூடாது.

ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது)விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ,விதண்டா வாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்!திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே!என்னை அஞ்சுங்கள்!

(அல்குர்ஆன் 2:197)

6. ஆசையுடன் தொடுதல், கட்டியணைத்தல், முத்தமிடுதல் போன்றவை கூடாது.

மேற்கண்ட வசனத்தில் உடலுறவு கூடாது என்பதைக் குறிக்க ‘ரஃபத்’ என்ற வார்த்தைஇடம் பெற்றுள்ளது. இதில் ஆசையுடன் தொடுதல், கட்டியணைத்தல், முத்தமிடுதல்போன்ற அனைத்தும் அடங்கும்.

உடலுறவு தான் கூடாது; மற்றவை கூடும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாதுஎன்பதற்காக இதை இங்கு குறிப்பிடுகின்றோம்.

7. வேட்டையாடுதல் கூடாது

நம்பிக்கை கொண்டோரே! “தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?’ என்பதை அல்லாஹ்அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும்,உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டிஉங்களைச் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும்வேதனை உண்டு.

(அல்குர்ஆன் 5:94)

நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக்கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர்கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை)பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லதுபரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்புநோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும்.தனது வினையின் விளைவை அவர் அனுபவிப்பதற்காக (இது அவசியம்). இதற்கு முன்நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். மீண்டும் செய்பவரை அல்லாஹ் தண்டிப்பான்.அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்.

(அல்குர்ஆன் 5:95)

உங்களுக்கும், ஏனைய பயணி களுக்கும் பயன்படும் பொருட்டு கடலில்வேட்டையாடுவதும், அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது.இஹ்ராமுடன் இருக்கும் போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப் பட்டுள்ளது.அல்லாஹ்வை அஞ்சுங் கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப் படுவீர்கள்.

(அல்குர்ஆன்5:96)

இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட செயல்களில் இந்த ஏழு காரியங்கள் ஆண்களுக்கும்பெண்களுக்கும் பொதுவானவை ஆகும்.

பெண்கள் ஹஜ் செய்யும் முறையைப் பற்றி நாம் விளக்கினாலும் பிரித்தறிவதற்காகஆண்களுக்கான தடைகளையும் நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

1. தலையை மறைக்கக் கூடாது

ஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும் போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது.உடனே அவர் இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “தண்ணீராலும்இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள்! அவரது இரு ஆடைகளில் அவரைக்கபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது முகத்தையோ, தலைமுடியையோ மூட வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் “தல்பியா’ கூறியவராகஎழுப்பப்படுவார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1265, 1266, 1267, 1268, 1839

“மறுமையில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவதற்காக அவரது தலையை மறைக்கவேண்டாம்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதிலிருந்து இஹ்ராம் கட்டியவர்தலையை மறைக்கக் கூடாது என்று அறியலாம்.

2. தையல் ஆடை அணியக் கூடாது.

“இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ,தலைப் பாகையையோ, தொப்பியையோ, கால் சட்டையையோ அணிய வேண்டாம்.குங்குமச்சாயம், வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணியவேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளையும் அணிய வேண்டாம்.அவ்வாறு காலுறைகளை அணியும் போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறுமேற்பகுதியை வெட்டி விடுங்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 134, 366, 1542, 1842, 5794

“இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும்அவள் பயன்படுத்த வேண்டாம்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1838

இவ்விரண்டும் பெண்களுக்கு மட்டும் தடுக்கப்பட்டவையாகும்.

இஹ்ராமுக்குப் பின்னால் தடுக்கப் பட்ட காரியங்களில் ஆண்களும் பெண்களும்கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக தாம்பத்யம் போன்ற காரியங்களில் ஈடுபட்டுஹஜ், உம்ரா போன்ற வணக்கத்தைப் பாழாக்கி விடக் கூடாது.

தலைமுடி மற்றும் நகங்களைக் களைவது இஹ்ராமுக்குப் பின் தடுக்கப்பட்டு உள்ளதால்அவற்றை இஹ்ராமுக்கு முந்தியே முடித்து விட வேண்டும்.

ஹஜ் செய்வதில் மூன்று வகைகள் உள்ளன. 1. தமத்துஃ, 2. கிரான், 3. இஃப்ராத்ஆகியவையாகும். (இவற்றைப் பற்றி பின்னர் விளக்கப் படும்) இந்த வகைகளில் தமத்துஃஎன்ற வகையே மிகவும் சிறந்ததாகும். இந்த தமத்துஃ முறைப்படி ஹஜ் செய்யும் ஒருவர்,முதலில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி உம்ராவை நிறைவேற்ற வேண்டும். அதன் பின்இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட வேண்டும். அதன் பின்னர் துல்ஹஜ் பிறை 8ம் நாள்ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி ஹஜ்ஜின் வணக்கங்களை நிறைவேற்ற வேண்டும்.

ஹஜ் செய்யும் மாதங்களில் உம்ரா செய்யக் கூடாது என்று அன்றைய அரபியர்கள்தவறான நம்பிக்கையில் இருந்தனர். இதை இஸ்லாம் முற்றிலும் மாற்றி விடுகின்றது.

“கியாமத் நாள் வரை ஹஜ்ஜில் உம்ரா நுழைந்து விட்டது” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்கள்: முஸ்லிம் 2137, அஹ்மத் 2173

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அகீக்’ எனும் பள்ளத்தாக்கை அடைந்த போது “என் இறைவனிடமிருந்து ஒரு (வான)வர் என்னிடம் வந்தார். இந்தப் பாக்கியம் நிறைந்தபள்ளத்தாக்கில் தொழுவீராக! “உம்ரதுன் பீஹஜ்ஜதின்’ (ஹஜ்ஜுடன் உம்ராவையும்சேர்க்கிறேன்) என்று கூறுவீராக என்று கூறினார்” எனக் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி 1534, 2337, 7343

எனவே முதலில் உம்ரா செய்ய வேண்டும்.

உம்ரா செய்யும் முறை

இஹ்ராமின் எல்லையை அடைந்ததும், “லப்பைக்க உம்ரத்தன் ஃபீஹஜ்ஜத்தின்” அல்லது”லப்பைக்க உம்ரத்தன்” என்று கூற வேண்டும்.

இந்த இடத்தில் சிலர், ”நான் அல்லாஹ்வுக்காக உம்ரா செய்கிறேன், இந்த உம்ராவை இலேசாக்கி வை” என்பது போன்ற வார்த்தைகளைக் கூறுகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

அதன் பின்னர் தல்பியா கூற வேண்டும்.

“லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்தவன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லக” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1549, 5915

இவ்வாறு மக்காவில் ஹரமை அடைகின்ற வரை தல்பியா சொல்ல வேண்டும். ஹரமைஅடைந்த பின் தல்பியாவை நிறுத்தி விட்டு, தவாஃபுல் குதூம் என்ற உம்ராவுக்கானதவாஃப் செய்ய வேண்டும்.

“குதூம்’ என்றால் வருகை தருவது என்று பொருள். மக்காவுக்கு வருகை தந்தவுடன்செய்யப்படுவதால் இதற்கு “தவாஃப் அல்குதூம்’ என்று கூறப்படுகிறது.

இந்த நாளில் தான் “தவாஃப் அல்குதூம்’ செய்ய வேண்டும் என்று வரையறை ஏதும்கிடையாது. ஒருவர் இஹ்ராம் கட்டி எப்போது மக்காவில் பிரவேசிக்கிறாரோ அப்போதுஇதைச் செய்ய வேண்டும்.

ஹஜ்ஜுக்குரிய மாதங்களான ஷவ்வாலில் அல்லது துல்கஃதாவில் இஹ்ராம் கட்டிமக்காவுக்குள் அவர் பிரவேசித்தால் அப்போதே இந்த தவாஃபைச் செய்து விட வேண்டும்.

கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும்.

தவாஃபுக்காக ஹரமுக்குள் சென்றதும் ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட வேண்டும்.ஹஜ்ருல் அஸ்வத் அமைந்துள்ள அந்த மூலையிலிருந்து தவாஃபைத் துவக்க வேண்டும்.

கஅபாவைச் சுற்றும் போது ஹிஜ்ர் என்ற பகுதியையும் சேர்த்தே சுற்ற வேண்டும்.ஒவ்வொரு சுற்று முடியும் போதும் ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட வேண்டும்.முடிந்தால் முத்தமிட வேண்டும்; முடியாவிட்டால் கையால் தொட்டு முத்தமிடவேண்டும்; அதற்கும் இயலாவிட்டால் சைகையால் முத்தமிட வேண்டும்.

முதல் மூன்று சுற்றுக்களின் போது விரைந்து செல்ல வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிட்டதை நான்பார்த்துள்ளேன்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1611

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் அதை நோக்கி சைகைசெய்தார்கள். தக்பீரும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1612, 1613, 1632, 5293

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “தவாஃப் அல்குதூம்’ செய்யும் போது மட்டும் முதல்மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1644, 1617

கஅபாவின் இரண்டு மூலைகளில் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத்பதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மூலை ருக்னுல் யமானி என்று கூறப் படுகின்றது. இந்தருக்னுல் யமானி என்ற மூலையையும் தொடுவது நபி வழியாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான்கு மூலைகளில் “யமானி’ எனப்படும் இரண்டுமூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 166, 1609

ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே “ரப்பனா ஆதினா ஃபித்துன்யாஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்” என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸாயிப்(ரலி)

நூல்கள்: அஹ்மத் 14851, அபூதாவூத் 1616

இவ்வாறு ஏழு சுற்றுக்கள் முடிந்த பின் மகாமு இப்ராஹீம் அமைந்திருக்கும் இடத்தில்இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும்.

(முஸ்லிம் 2137)

“தவாஃபுல் குதூம்’ எனும் இந்த தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரத்அத்கள் தொழுதுவிட்டு ஸஃபா, மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓட வேண்டும். இதற்கு ஸஃயீ என்றுபெயர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தவாஃபை முடித்து இரண்டு ரக்அத்கள் தொழுதபிறகு “ஸஃபா’ “மர்வா’வுக்கு இடையே ஓடினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1616, 1624, 1646, 1647, 1767, 1794, 4188

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபாவை அடைந்ததும் “ஸஃபாவும் மர்வாவும்அல்லாஹ்வின் சின்னங்களாகும்” என்ற (2:125) வசனத்தை ஓதினார்கள். “அல்லாஹ்எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக” என்று கூறிவிட்டுஸஃபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன் மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள்.கிப்லாவை முன்னோக்கி “லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு,லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹஇல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, லஹஸமல் அஹ்ஸாபவஹ்தா” என்று கூறி இறைவனை பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவைகூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கிஇறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சம தரைக்கு வந்ததும்) “பதனுல்வாதீ’ என்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும் வரை நடந்தார்கள்.ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்கள்: முஸ்லிம் 2137

ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்யவேண்டும்.

ஸஃபாவிலிருந்து மர்வாவுக்கு வருவது ஒன்று, மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வருவதுமற்றொன்று என்ற கணக்கில் ஏழு தடவை சுற்ற வேண்டும்.

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு தடவை ஸஃயு செய்தார்கள். ஸஃபாவில் துவக்கிமர்வாவில் முடித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2137

நபி (ஸல்) அவர்கள் மர்வாவில் முடித்ததிலிருந்து “ஸஃபாவிலிருந்து மர்வா வந்தால் ஒருதடவை என்றும், மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வந்தால் இரண்டு தடவை” என்றும்விளங்கலாம்.

“தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு மயிரைக்)குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அபூதாவூத் 1694

இத்துடன் உம்ரா நிறைவேறி விடுகின்றது. ஆண்களாக இருந்தால் தலையை மழித்தல்,பெண்களாக இருந்தால் தலை முடியைக் கத்தரித்தல் மூலம் உம்ரா முடிவுக்குவருகின்றது.

இப்போது உம்ராவின் வணக்க வழிபாடுகளை ஒருமுறை பார்ப்போம்.

1. குளித்தல்.

2. அனுமதிக்கப்பட்ட ஆடையை அணிந்து கொள்ளுதல்.

3. தவாஃபை துவங்கும் வரை தல்பியா கூறுதல்.

4. ஹிஜ்ர் உட்பட ஏழு முறை கஅபாவில் தவாஃப் செய்தல்.

5. மகாமு இப்ராஹீமில் இரு ரக்அத்துக்கள் தொழுதல்.

6. ஸஃபா, மர்வாவுக்கு இடையில் ஸஃயீ செய்தல்

7. தலை முடியைக் கத்தரித்துக் கொள்ளுதல்.

மேற்கண்ட வணக்கங்களைச் செய்து விட்டால் உம்ரா முடிந்து விடுகின்றது.

உம்ராவில் இடம்பெற்ற இந்த வணக்கங்களில் 1. இஹ்ராம், 2. கஅபாவை தவாஃப்செய்தல், 3. ஸஃபா, மர்வாவுக்கிடையில் ஸஃயீ செய்தல் ஆகியவை இல்லையெனில்உம்ரா இல்லை என்றாகி விடும்.

உம்ராவைப் போன்று ஹஜ்ஜுக்கும் இஹ்ராம், கஅபாவைச் சுற்றுதல், ஸஃபா மர்வாவைச்சுற்றுதல் போன்ற காரியங்கள் மிக முக்கியமான வையாகும். அத்துடன் அரஃபாவில்தங்குதல், கல்லெறிதல் போன்ற வணக்கங்கள் அதிகமாகச் சேர்ந்து கொள்கின்றன. இவைஇல்லாமல் ஹஜ் இல்லை.

உம்ராவில் நாம் செய்யும் தவாஃபிற்கு, தவாஃபுல் குதூம் என்று சொல்வது போன்றுஹஜ்ஜில் நாம் செய்யும் தவாஃபிற்கு தவாஃபுல் இஃபாளா அல்லது தவாஃபுஸ்ஸியாராஅல்லது ஹஜ்ஜுடைய தவாஃப் என்று பெயர்.

மக்காவுக்கு வந்ததும் நாம் செய்கின்ற தவாஃபும், ஹஜ்ஜின் போது நாம் செய்கின்றதவாஃபும் கண்டிப்பாகச் செய்தாக வேண்டும். இந்தத் தவாஃபுகளை விட்டு விடக் கூடாதுஎன்பதற்காக இதை இங்கு குறிப்பிடுகின்றோம்.

இப்போது ஹஜ்ஜின் மூன்று வகைகளைப் பார்ப்பதற்கு இதுதான் பொருத்தமான இடம்.

இதுவரை சொன்னபடி உம்ரா செய்து விட்டால் இத்துடன் இஹ்ராமின் போது தடைசெய்யப்பட்ட காரியங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டு விடுகின்றன. இனிமேல்துல்ஹஜ் பிறை 8ம் நாள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுகின்ற வரை இஹ்ராம் என்றகட்டுப்பாடு இல்லாமல் நாம் சுகமாகவும், சுதந்திரமாகவும் இருக்கின்றோம். இப்படிப்பட்டசுகத்தை நாம் அனுபவிப்பதால் இந்த வகை ஹஜ்ஜுக்கு தமத்துஃ என்று பெயர். அதாவதுசுகம் பெறுதல், அவகாசம் எடுத்துக் கொள்ளுதல் என்பது இதன் பொருள்.

“கிரான்’ என்றால் சேர்த்துச் செய்தல் என்பது பொருள். இஹ்ராம் எல்லையில் ஒருவர்இஹ்ராம் கட்டும் போது ஹஜ்ஜுக்காகவும், உம்ராவுக்காகவும் சேர்த்து இஹ்ராம் கட்டிக்கொள்ள வேண்டும். “லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்’ என்று கூறுவதன் மூலம் இவ்வாறுஇஹ்ராம் கட்டலாம்.

ஒரே இஹ்ராமில் உம்ராவையும், ஹஜ்ஜையும் நிறைவேற்றுவதால் இது கிரான்(உம்ராவையும், ஹஜ்ஜையும் சேர்த்துச் செய்தல்) எனப்படுகின்றது. இதில் மிகவும்முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இவ்வாறு இஹ்ராம்கட்டியவர் உம்ரா என்று எதையும் தனியாகச் செய்வதில்லை.

தவாஃபுல் குதூம் செய்து விட்டு, இஹ்ராமைக் களையாமல் எட்டாம் நாளில் இருந்துஹஜ்ஜின் கிரியைகளை அவர் செய்ய வேண்டும். ஹஜ் செய்பவர் எவற்றைச் செய்வாரோஅவற்றை மட்டும் செய்ய வேண்டும். ஆனாலும் இவர் ஹஜ்ஜும், உம்ராவும்செய்தவராகக் கருதப்படுவார்.

குர்பானிப் பிராணியைக் கையோடு கொண்டு சென்றவர் இந்த வகை ஹஜ் மட்டுமேசெய்ய வேண்டும். தமத்துஃ செய்யக் கூடாது.

“இஃப்ராத்’ என்றால் “தனித்துச் செய்தல்’ என்பது பொருள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம்கட்டுமிடத்தில் ஹஜ்ஜுக்காக மட்டும் “லப்பைக்க ஹஜ்ஜன்’ என்று கூறி இஹ்ராம் கட்டவேண்டும். அதைத் தொடர்ந்து ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்ற வேண்டும்.ஹஜ்ஜின் கிரியைகளை முடித்த பிறகு விரும்பினால் உம்ராச் செய்யலாம்.

இவ்வாறு ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் கட்டியவர்கள் குர்பானி எதனையும் கொடுக்கவேண்டியதில்லை.

குர்பானி கொடுப்பது. இஹ்ராம் கட்டும் போது நிய்யத் செய்வது ஆகிய இரண்டுவிஷயத்தைத் தவிர இஃப்ராத் என்பதற்கும் கிரான் என்பதற்கும் எந்த வித்தியாசமும்இல்லை.

ஆயினும், கிரான் என்று நிய்யத் செய்தவர் ஹஜ், உம்ரா இரண்டையும் செய்தநன்மையை அடைகிறார். இஃப்ராத் என்று நிய்யத் செய்தவர் ஹஜ் மட்டும் செய்தவராகஆகின்றார்.

மக்காவில் வசிப்பவர்கள் இந்த வகையான இஹ்ராம் மட்டுமே கட்டி ஹஜ்ஜைநிறைவேற்ற வேண்டும். மற்றவர்கள் இந்த மூன்று வகைகளில் எதை வேண்டுமானாலும்செய்யலாம்.

எனினும் மேற்கண்ட இந்த மூன்று வகைகளில் நபி (ஸல்) அவர்கள் தமத்துஃ ஹஜ்செய்யும்படியே உத்தரவிடுகின்றார்கள். எனவே தமத்துஃ ஹஜ் செய்வதே சிறந்ததாகும்.

நபி (ஸல்) அவர்கள் தம்மோடு குர்பானிப் பிராணியான ஒட்டகத்துடன் ஹஜ்ஜுக்கு வந்தபோது நான் நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். அப்போது மக்கள் அனைவரும்ஹஜ்ஜுக்காகவே இஹ்ராம் அணிந்திருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களைநோக்கி, “நீங்கள் தவாஃபையும் ஸஃபா மர்வாவிற்கு மத்தியில் ஓடுவதையும்நிறைவேற்றி விட்டு, முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்)தங்கிக் கொள்ளுங்கள். பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்துகொள்ளுங்கள். நீங்கள் இஹ்ராம் அணிந்து இதற்கு முன்னால் செய்ததை தமத்துஃ(உம்ரா)ஆக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்றார்கள். அதற்குத் தோழர்கள், “நாங்கள் ஹஜ்ஜின்பெயரில் இஹ்ராம் அணிந்து வந்தோம். அதை எவ்வாறு தமத்துஃ ஆக ஆக்குவது?” என்றுகேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் கட்டளையிட்டதை நீங்கள் செய்யுங்கள்.நான் என்னுடன் குர்பானிப் பிராணியைக் கொண்டு வரவில்லையெனில் உங்களுக்கு நான்கட்டளையிட்டதைப் போன்று நிச்சயமாக நானும் செய்திருப்பேன். குர்பானிப்பிராணியைக் கொண்டு வந்தால் அதை அந்த இடத்தில் சேர்க்கும் வரை (பலியிடுகின்றவரை) இஹ்ராமைக் களைவது எனக்குக் கூடாது” என்றார்கள். உடனே தோழர்கள் நபி(ஸல்) அவர்களின் கட்டளையின்படி செயலாற்றினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி 1568

உம்ராவுக்கு இஹ்ராம் கட்டிய பெண், தவாஃபுக்கு முன் மாதவிலக்காகி விட்டால் என்னசெய்வது? இது போன்ற நிலை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டது.அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்த தீர்வு:

“நீ ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய்! தூய்மையாகும் வரை கஃபாவில் தவாஃப்செய்யாதே!” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 305, 1650

நான் மக்காவுக்குச் சென்றதும் மாதவிலக்கானேன். எனவே, நான் தவாஃப்செய்யவுமில்லை; ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடவும் இல்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1556

இந்த ஹதீஸ்களின் படி ஒரு பெண் மாதவிலக்காகி விட்டால் தவாஃப், ஸஃபா மர்வாவில்ஸஃயீ செய்தல் ஆகிய இரண்டைத் தவிர ஹஜ்ஜின் அனைத்துக் காரியங்களையும் செய்யவேண்டும்.

ஹஜ்ஜின் வணக்கங்களை சிறு சிறு தலைப்பு வாரியாக மட்டும் இப்போது பார்த்து விட்டுவருவோம்.

எட்டாம் நாள்

1. எட்டாம் நாள் இஹ்ராம் கட்ட வேண்டும். மக்காவில் எந்த இடத்திலிருந்து இஹ்ராம்கட்டிக் கொள்ளலாம். பின்னர் மினாவுக்குச் செல்ல வேண்டும். 9ம் நாள் காலை சூரியன்உதயமாகும் வரை அங்கு தங்குதல்.

ஒன்பதாம் நாள்

2. ஒன்பதாம் நாள் சூரியன் உதயமானதும் அரஃபாவை நோக்கிச் செல்லுதல். சூரியன்மறையும் வரை அங்கு பிரார்த்தனையில் ஈடுபடுதல்.

3. சூரியன் மறைந்ததும் முஸ்தலிஃபாவுக்குச் சென்று அங்கு ஃபஜ்ர் நேரம் வரை தங்குதல்.

4. ஃபஜ்ர் நேரமானதும் சுப்ஹ் தொழுகையை நிறைவேற்றி விட்டு அதிகாலை நேரம் நன்குவெளுக்கும் வரை திக்ர், துஆக்களில் ஈடுபடுதல்.

பத்தாம் நாள்

5. சூரியன் உதயமானதும் மினாவுக்குத் திரும்புதல்.

6. ஜம்ரத்துல் அகபாவில் 7 கற்கள் எறிதல்.

முஸ்தலிஃபாவிலிருந்து சூரிய உதயத்திற்குப் பிறகு தான் மினாவுக்குச் செல்லவேண்டும். இருப்பினும் பெண்கள் சூரிய உதயத்திற்கு முந்தியே செல்லலாம்.

அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிஃபாவில் இரவில் தங்கினார்கள். அப்போதுதொழலானார்கள். சிறிது நேரம் தொழுததும், “மகனே! சந்திரன் மறைந்து விட்டதா? என்றுகேட்டார்கள். நான் “இல்லை’ என்றேன். மீண்டும் சிறிது நேரம் தொழுது விட்டு “மகனேசந்திரன் மறைந்து விட்டதா? என்றார்கள். நான் “ஆம்’ என்றேன். அப்போது அவர்கள், “புறப்படுங்கள்” என்றார்கள். நாங்கள் புறப்பட்டோம். ஜம்ரதுல் அகபாவை அடைந்தவுடன்கல்லெறிந்தார்கள். பிறகு திரும்பிச் சென்று தமது தங்குமிடத்தில் சுபுஹ் தொழுதார்கள். “இருட்டிலேயே நீங்கள் கல்லெறிந்து விட்டீர்களே” என்று கேட்டேன். அதற்கவர்கள்”நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் பெண்களுக்கு (இவ்வாறு செய்ய) அனுமதிவழங்கியுள்ளனர்” என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ்

நூல்: புகாரி 1679

கல்லெறிந்த பின் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடலாம். தாம்பத்தியத்தைத் தவிர மற்றஅனைத்தும் அனுமதியாகும்.

7. குர்பானி கொடுத்தல்.

8. தலை முடியைக் கத்தரித்தல். (ஆண்களாக இருந்தால் தலையை மழித்தல் சிறந்தது)

9. மக்காவுக்கு வந்து தவாஃபுல் இஃபாளா (ஹஜ்ஜுக்குரிய தவாஃப்) செய்தல்.

தமத்துஃ முறைப்படி இஹ்ராம் கட்டியவர் கஅபாவில் தவாஃப் செய்து விட்டு ஸஃபாமர்வாவில் ஸஃயீ செய்ய வேண்டும்.

கிரான் முறைப்படி இஹ்ராம் கட்டியவர் உம்ரா தவாஃபின் போது ஏற்கனவே ஸஃபாமர்வாவில் ஸஃயீ செய்திருந்தால் இப்போது ஸஃயீ செய்யத் தேவையில்லை. ஏற்கனவேசெய்யாவிட்டால் இப்போது ஸஃயீ செய்ய வேண்டும்.

10. பிறகு மினாவுக்குத் திரும்பி அங்கு இரவில் தங்க வேண்டும்.

பதினொன்றாம் நாள்

11. மூன்று ஜம்ராக்களில் கல்லெறிதல்

12. அன்று மாலை அதாவது 12ம் இரவில் மினாவில் தங்குதல்.

பனிரண்டாம் நாள்

13. முந்தைய நாள் எறிந்தது போன்று மூன்று ஜம்ராக்களிலும் கல்லெறிதல்.

14. அன்றே கிளம்ப வேண்டும் எனில் சூரியன் மறைவுக்கு முன்னால் புறப்படுதல்.பதிமூன்றாம் நாள் புறப்பட வேண்டுமெனில் இரவில் மினாவில் தங்குதல்.

பதிமூன்றாம் நாள்

15. ஏற்கனவே இரண்டு நாட்கள் எறிந்தது போன்று மூன்று ஜம்ராக்களிலும் கல்லெறிதல்

16. மினாவிலிருந்து கிளம்பி தவாஃபுல் விதா – விடை பெறும் தவாஃப் செய்தல்.

ஆண்கள்

1. இஹ்ராமிற்குப் பிறகு தலை திறந்திருக்க வேண்டும்

2. தையல் ஆடை அணியக்கூடாது.

3. தவாஃபின் போது இடது புஜத்தை மூடி வலது புஜத்தைத் திறந்திருக்க வேண்டும்.

4. தலை முடியை மழித்தல் அல்லது குறைத்தல்

பெண்கள்

1. வழக்கம் போல் தலை மூடியிருக்க வேண்டும்.

2. வழக்கமான, தையல் உள்ள ஆடைகளை அணியலாம்.

3. வழக்கம் போல் மூடியே இருக்க வேண்டும்.

4. சிறிது கத்தரித்தால் போதும்.

ஹஜ்ஜும் மாதவிலக்கும்

தவாஃபுல் குதூம் என்ற உம்ராவுக்கான தவாஃபும், தவாஃபுல் இஃபாளா எனும்ஹஜ்ஜுக்கான தவாஃபும் மிக முக்கியமான கடமைகள்; இவ்விரண்டும் இல்லாமல்உம்ராவும் ஹஜ்ஜும் நிறைவேறாது என்று பார்த்தோம்.

இவ்விரு தவாஃபுகளில் உம்ரா தவாஃபைத் தான் ஆயிஷா (ரலி) நிறைவேற்ற முடியாமல்ஆனது. அதற்காக அவர்கள் மிகப் பெரிய கவலைப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள்,ஆயிஷா (ரலி)யை நோக்கி, “தவாஃபைத் தவிர ஹாஜிகள் செய்கின்ற அனைத்துவணக்கங்களையும் செய்து கொள்’ என்று கூறினார்கள். அதன்படி ஆயிஷா (ரலி)ஹஜ்ஜின் காரியங்கள் அனைத்தையும் செய்யத் துவங்கினார்கள்.

ஸரிப் என்ற இடத்தில் ஆயிஷா (ரலி) மாதவிலக்கானார்கள். அரஃபா அன்றுதூய்மையடைந்தார்கள்.

(நூல்: முஸ்லிம் 2124)

புறப்படும் நாளில், “உனது ஹஜ்ஜுக்காகவும் உம்ராவுக்காகவும் உன்னுடைய (ஒரு)தவாஃப் விசாலமானதே” என்று நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கிக்கூறினார்கள்.

அறிவிப்பவர்: தாவூஸ்

நூல்: முஸ்லிம் 2123

“உனது ஹஜ்ஜுக்காகவும் உம்ராவுக்காகவும் நீ ஸஃபா மர்வாவில் தவாஃப் செய்ததுஉனக்குப் போதுமானது” என்று நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம்கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஜாஹித்

நூல்: முஸ்லிம் 2124

தனக்கு உம்ராவுக்கான தவாஃப் கிடைக்கவில்லையே என்று ஆயிஷா (ரலி) ஆதங்கமும்கவலையும் கொண்டார்கள். அவரை நோக்கி நபி (ஸல்) அவர்கள், “உம்ராவுக்கான தவாஃப்கிடைக்கவில்லை என்று நினைக்க வேண்டாம். உனக்கு உம்ராவும் ஹஜ்ஜும் சேர்ந்தேகிடைத்து விட்டது’ என்று சொல்கின்றார்கள். அதனால் மாத விலக்கான பெண்கள்உம்ராவுக்கான தவாஃப் செய்ய முடியவில்லை என்று கவலைப்படத் தேவையில்லை.அவர்களுக்கு ஹஜ், உம்ரா இரண்டுமே சேர்த்துக் கிடைத்து விடுகின்றது.

இருப்பினும் ஆயிஷா (ரலி) அவர்கள் திருப்தி அடையவில்லை.

ஆயிஷா (ரலி) துப்புரவாகி கஅபாவை தவாஃப் (தவாஃபுல் இஃபாளா) செய்து, ஸஃபா,மர்வாவில் ஸஃயீ செய்த பின்னர், ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷாவே! நீ உனது ஹஜ், உம்ரா இரண்டிலிருந்தும் ஒருசேர ஹலாலாகி (வெளியாகி)விட்டாயே!” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நான் ஹஜ் செய்கின்ற வரைகஅபாவை தவாஃப் செய்யாதது எனக்குள் ஓர் உறுத்தலாகவே உள்ளது” என்று ஆயிஷா(ரலி) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், (ஆயிஷா (ரலி)யின் சகோதரரைஅழைத்து), “அப்துர் ரஹ்மானே! இவரை தன்யீமுக்கு அழைத்துச் சென்று உம்ராவைநிறைவேற்றச் செய்” என்று கூறினார்கள்.

(நூல்: முஸ்லிம் 2127)

எனவே ஒருவருக்கு உம்ராவுக்குரிய தவாஃப் விடுபட்டு விட்டால் அவர் தவாஃபுல்இஃபாளா (ஹஜ்ஜுக்குரிய தவாஃப்) செய்தால் அவருக்கு உம்ரா, ஹஜ் ஆகிய இரண்டுமேசேர்த்துக் கிடைத்து விடும். எனினும் விரும்பினால் அவர் தன்யீம் என்ற இடத்திற்குச்சென்று இஹ்ராம் அணிந்து ஓர் உம்ரா செய்து கொள்ளலாம்.

ஒரு பெண் இஹ்ராம் கட்டும் போது, மக்கா சென்றதும் மாதவிலக்காகி விடுவோம் என்றுதெரிந்தால் அவர் கிரானைத் தேர்வு செய்து கொள்வது நல்லது. காரணம் தமத்துஃமுறையில் உம்ரா செய்து, இஹ்ராம் களைந்து, பின்னர் ஹஜ் செய்தவற்குரிய சுதந்திரம்மற்றும் சலுகையை இவர் பெறப் போவதில்லை. இஹ்ராம் இல்லாமல் இருந்தும்இஹ்ராமில் உள்ளவரைப் போன்றே இருக்கின்றார். மேலும் உம்ராவுடைய தவாஃப்,ஸஃயீ போன்றவற்றையும் இவர் செய்ய முடியாது.

எனவே அவர் இஹ்ராம் கட்டும் போதே கிரானைத் தேர்வு செய்து கொள்வதுசிறந்ததாகும். அப்படியே தமத்துஃ முறையில் உம்ராவுக்கு இஹ்ராம் கட்டி வந்தாலும்அவர் கிரானுக்கு மாறிக் கொள்ளலாம்.

“இப்போது (தமத்துஃ முறையில் ஹஜ் செய்யலாம் என) நான் அறிந்து கொண்டதை முன்கூட்டியே அறிந்திருந்தால், பலிப் பிராணி கொண்டு வந்திருக்க மாட்டேன். நான் பலிப்பிராணியை என்னுடன் கொண்டு வந்திருக்காவிட்டால் (தமத்துஃ அடிப்படையில்)இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள்.

(நூல்: புகாரி 1651)

இந்த ஹதீஸில் பலிப் பிராணியைக் கூட்டி வராமல் இருந்தால் நான் தமத்துஃ முறைக்குமாறியிருப்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்து, ஹஜ்ஜில் ஒருமுறையிலிருந்து இன்னொரு முறைக்கு மாறுவதற்குத் தடையில்லை என்பதைஅறியலாம்.

எனவே மாதவிலக்கு ஏற்பட்ட வர்கள் தமத்துஃ முறையிலிருந்து கிரான் முறைக்கு மாறிக்கொள்ளலாம்.

தவாஃபுல் இஃபாளா (ஹஜ்ஜுக்குரிய தவாஃப்)
தவாஃபுல் இஃபாளாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் ஒரு பெண் மாதவிலக்காகிவிட்டால் இந்தத் தவாஃபை நிறைவேற்றும் வரை அவர் காத்திருந்தே ஆக வேண்டும்.ஏனெனில் அது தான் ஹஜ்ஜுக்குரிய தவாஃப் ஆகும். எல்லாம் வல்ல அல்லாஹ்,

“பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளைநிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்”

(அல்குர்ஆன் 22:29)

என்று கூறுகின்றான்.

எனவே ஹஜ்ஜுக்குரிய இந்தத் தவாஃபை நிறைவேற்றாமல் மக்காவை விட்டுக் கிளம்பமுடியாது.

சஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டது. இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்)அவர்களிடம் நான் கூறிய போது, “நம்மை – நமது பயணத்தை – அவர் தடுத்து விட்டாரா?”என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். “தவாஃபுல் இஃபாளாவைச் செய்த பிறகு தான்இது ஏற்பட்டது” என்று நான் கூறினேன். அதற்கவர்கள், “அப்படியானால் (நமதுபயணத்திற்குத்) தடை இல்லை” என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1733, 328, 1757, 1772, 4401

தவாஃபுல் விதா

மினாவில் கல்லெறிந்து முடிந்ததும் ஹஜ்ஜின் எல்லாக் கிரியைகளும் நிறைவுறுகின்றன.ஆயினும் இறுதியாக தவாஃபுல் விதாஃ என்று கூறப்படும் தவாஃபைச் செய்ய வேண்டும்.

விதாஃ என்றால் விடை பெறுதல் என்பது பொருள். விடை பெற்றுச் செல்லும் நேரத்தில்இந்த தவாஃப் செய்யப்படுவதால் இது தவாஃபுல் விதாஃ என்று கூறப்படுகின்றது.

மக்கள் பல திசைகளிலும் புறப்பட்டுச் செல்லலானார்கள். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் “கடைசிக் கிரியையை அல்லாஹ்வின் ஆலயத்தில் (தவாஃப்) செய்துவிட்டுப் புறப்படுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 2350, 2351

தவாஃபுல் இஃபாளாவைப் போன்றே இந்தத் தவாஃபும் செய்யப்பட வேண்டும். இதைச்செய்தவுடன் புறப்பட்டுச் சென்று விடலாம்.

இந்தத் தவாஃபிலிருந்து மாதவிலக்கு ஏற்பட்ட பெண்கள் விதிவிலக்கு பெறுகின்றனர்.

தவாஃபுல் இஃபாளாவுக்குப் பிறகு ஸஃபிய்யா பின்த் ஹுயய் மாதவிலக்காகி விட்டார்.அவரது மாதவிலக்கு பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டதும், “அவர்நம்முடைய பயணத்தைத் தடுத்து விட்டாரா?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின்தூதரே! தவாஃபுல் இஃபாளாவுக்குரிய தவாஃப் செய்த பின்னர் தான் மாத விலக்கானார்”என்று சொன்னேன். “அப்படியானால் அவர் (பயண தவாஃப் செய்யாமல்) கிளம்புவாராக!”என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

(நூல்: புகாரி 4401, முஸ்லிம் 2353)

இந்த ஹதீஸிலிருந்து ஒரு பெண் தவாஃபுல் இஃபாளாவை முடித்த பின் மாதவிலக்காகிவிட்டால் பயண தவாஃபுக்காக அவர் காத்திருக்கத் தேவையில்லை. உடனே கிளம்பிவிடலாம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

அறிவியல் வளர்ச்சி கண்டுள்ள இந்தக் காலத்தில் இன்று ஹஜ் பிரயாணத்திலும்நோன்பிலும் மாதவிலக்கினால் தங்களுக்கு ஏற்படும் இந்தத் தொந்தரவுகளிலிருந்துவிடுபடுவதற்காக, மாதவிலக்கைத் தடுக்கும் மாத்திரை சாப்பிடலாமா? என்று ஒருகேள்வி இங்கு வருகின்றது. சவூதி ஆலிம்கள் இவ்வாறு மாத்திரை சாப்பிடலாம் என்றுமார்க்கத் தீர்ப்பும் அளித்திருக்கின்றனர்.

மார்க்கத்தில் ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால் அதற்கு மாற்றுப் பரிகாரம்என்ன? என்பது மிகத் தெளிவாக விளக்கிச் சொல்லப்பட்டு விட்டது. இதற்குப் பிறகு நாம்ஒரு மாற்று வழியைக் கொடுப்பது எப்படி நியாயமாகும்? மார்க்கப்படி சரியாகும்? இந்தத்தீர்ப்புக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் என்ன ஆதாரம்? என்றெல்லாம் இந்தத்தீர்ப்பில் கூறப்படவில்லை.

இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ்அமைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பில் எந்த மாற்றுதலும் இல்லை. இதுவேநேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 30:30)

என்று அல்லாஹ் கூறும் இயற்கை அமைப்பை எதிர்த்து நிற்பதும், தேவையில்லாதநோயை விலைக்கு வாங்குவதும் ஆகும். ஒரு நோய்க்கு ஆண்டி பயாடிக் எனும் நோய்எதிர்ப்பு மாத்திரை சாப்பிடும் போதே அதனால் உடலில் எதிர் விளைவுகள் ஏற்படுகின்றனஎனும் போது, சுகமான, நல்ல ஆரோக்கியமான ஒரு பெண் இது போன்ற மருந்துகளைச்சாப்பிட்டு உடல் நலக் கேட்டை வரவழைக்கலாமா? நோயைத் தேடிச் சம்பாதிக்கலாமா?என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இங்கு தான் ஹஜ்ஜின் மூன்று வணக்க முறைகளில் உள்ள நன்மையை எண்ணிப் பார்க்கமுடிகின்றது. இந்த வணக்க முறைகளில் தமத்துஃ தான் சிறந்தது.

பிறை 8க்கு மூன்று நாட்கள் அல்லது இரண்டு நாட்கள் முந்தி வந்தால் தான் அவருக்குதமத்துஃ உடைய சுகங்களும், சலுகைகளும் கிடைக்கும். உம்ராவும் ஹஜ்ஜும்கிடைக்கும்.

ஒருவர் லண்டனில் இருக்கிறார்; அவருக்கு விடுமுறை 15 நாட்கள் என்று வைத்துக்கொள்வோம். துல்ஹஜ் பிறை 6ல் லீவு கிடைக்கிறது என்றால் அவர் விமானத்தில்வந்தாலும் பிறை 8க்கு முந்தி வந்து சேர முடியாது.

இப்படித் தாமதமாக வரக் கூடியவருக்கு உம்ராவும் சேர்த்துக் கிடைக்க வேண்டுமானால்அவருக்குக் கிரான் தான் சிறந்ததாகும்.

இது மாதிரித் தான் ஒரு பெண் புறப்படும் போது, தனக்கு எப்போது மாதவிலக்கு ஏற்படும்?என்பது அவருக்குத் தெரியும். இது போன்ற சந்தர்ப்பங்களில் அவர் கிரானையே தேர்வுசெய்து கொள்வது அவருக்கு மிகப் பெரிய வசதியாக அமையும்.

எதிர்பாராத விதமாக உம்ராவின் தவாஃபுக்கு முந்தியே மாதவிலக்கு ஏற்பட்டு விட்டாலும்அவர் கிரானுக்கு மாறிக் கொள்வது அவருக்கு வசதியாக இருக்கும்.

இது போன்று ஒருவருக்கு ஹஜ்ஜுடைய காலத்தில் உம்ராவும் ஹஜ்ஜும் சேர்த்துச்செய்தால் குர்பானி கொடுக்க வசதியில்லை என்று வைத்துக் கொள்வோம். தமத்துஃ,கிரான் இந்த இரண்டில் எந்த வகையைச் செய்தாலும் அவர் குர்பானி கொடுத்தாகவேண்டும். குர்பானி கொடுக்காத பட்சத்தில் நோன்பு நோற்றாக வேண்டும். அவரால்நோன்பு வைக்கவும் இயலாது. இது போன்ற தருணத்தில் இப்ராத் என்ற முறைஅவருக்குக் கைகொடுக்கின்றது.

இவ்வாறு ஹஜ்ஜின் வணக்க முறைகளில் மாற்று ஏற்பாடு இருக்கும் போதுமாத்திரைகளைக் கொண்டு பரிகாரம் தேடுவது, அல்லாஹ் அமைத்த இயற்கைஅமைப்புகளுக்கு எதிரான ஒரு சவாலாகும்.

எனவே ஹஜ்ஜில் உள்ள இந்த மூன்று முறைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்துபெண்கள் தங்கள் ஹஜ் பயணத்தைச் சரியான பயணமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.