மாதவிடாயின் போது உடலுறவு கொண்டால் பரிகாரம் என்ன?

கேள்வி :

மாதவிடாயின் போது உடலுறவு கொண்டால் பரிகாரம் என்ன?

அப்துல்லாஹ்

பதில் :

மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

இத்தடையை மீறியவர்கள் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும். இதுவே அந்தப் பாவத்துக்குரிய பரிகாரமாகும்.

سنن أبي داود

1035 – حدَّثنا الحسنُ بن علي، حدثنا يزيدُ بن هارون، أخبرنا همام، حدَّثنا قتادةُ، عن قُدَامَةَ بن وَبرةَ العُجيفي عن سَمُرَةَ بن جُندب، عن النبيَّ- صلَّى الله عليه وسلم -قال: “مَن تَرَكَ الجمعة مِن غيرِ عُذْرٍ، فليتَصَدّقْ بدينارٍ، فإن لم يَجِدْ فبنصفِ دينارٍ”

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

தனது மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது அவருடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் .

நூல் : அபூதாவூத்

ஒரு தீனார் என்பது அன்று வழக்கத்தில் இருந்த தங்க நாணயமாகும். சுமார் நான்கரை கிராம் எடை கொண்ட நாணயம் தீனார் எனப்படும். நான்கரை கிராம் அல்லது இரண்டேகால் கிராம் தங்கத்தின் மதிப்பிலான தொகையை தர்மம் செய்ய வேண்டும் என்பது இதற்கான பரிகாரமாகும்.