அக்டோபஸ் உண்ணலாமா?

கேள்வி :

க்டோபஸ் எனும் கடல் வாழ் உயிரினம் முஸ்லிம்களுக்கு ஹராமா?

சிராஜ்தீன்

பதில் :

أُحِلَّ لَكُمْ صَيْدُ الْبَحْرِ وَطَعَامُهُ مَتَاعًا لَكُمْ وَلِلسَّيَّارَةِ وَحُرِّمَ عَلَيْكُمْ صَيْدُ الْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًا وَاتَّقُوا اللَّهَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ(96)5

உங்களுக்கும், ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும் அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் 5:96

مسند أحمد بن حنبل

8720 – حدثنا عبد الله حدثني أبي ثنا أبو سلمة ثنا مالك عن صفوان بن سليم عن سعيد بن سلمة من آل بن الأزرق ان المغيرة بن أبي بردة وهو من بني عبد الدار أخبره انه سمع أبا هريرة يقول سأل رجل رسول الله صلى الله عليه و سلم فقال : إنا نركب البحر ونحمل معنا القليل من الماء فإن توضأنا به عطشنا أفنتوضأ من ماء البحر قال فقال النبي صلى الله عليه و سلم هو الطهور ماؤه الحل ميتته

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் கடல் நீர் தூய்மை செய்யத்தக்கதாகும். அதில் உள்ளவை செத்தாலும் ஹலாலாக (உண்ண அனுமதிக்கப்பட்டதாக) ஆகும்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல் : அஹ்மத்

பொதுவாக கடலில் உணவாகக் கிடைக்கும் அனைத்தும் நமக்கு அனுமதிக்கப்படவை தான் என்று மேற்கண்ட வசனமும், நபிமொழியும் கூறுகின்றன.

எனவே அக்டோபஸ் உட்பட அனைத்து கடல்வாழ் உயிரினத்தையும் உண்ணலாம். ஆனால் அது உடலுக்கு உகந்த உணவா? என்பதைக் கவனித்து உண்ண வேண்டும். ஏனென்றால் நமக்கு கேடு தருகின்ற பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது.

وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ(195)2

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 2:195

அக்டோபஸ் என்பது நம் உடலுக்குக் கேடு விளைவிக்காத பட்சத்தில் தாராளமாக உண்ணலாம்.